நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழப்பு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொ்றறினால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் இருவர் ஆண்கள் எனவும் மூவர் பெண்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள் கொழும்பு 02, 12, 14, 15 மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு-02 பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவர் கொரோனா...

யாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணம், கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றையதினம் (வியாழக்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் சிறுவனும் உள்ளடங்குவதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். கடந்த மாதம் கொழும்பு, பேலியகொட மீன் சந்தைக்குச் சென்று வந்தவருக்கு...
Ad Widget

வடக்கில் நான்காவது கொரோனா சிகிச்சை நிலையமானது மாங்குளம் வைத்தியசாலை!!

வடக்கு மாகாணத்தில் நான்காவது கொரோனா சிகிச்சை நிலையமாக மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் ஒரு பிரிவு மாற்றப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தினால் இந்தப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. 30 நோயாளர் படுக்கைகளைக் கொண்ட கொரோனா சிகிச்சை நிலையமாக இந்தப் பிரிவு நேற்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளமை குறித்து சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக...

ஒரு மீற்றர் இடைவெளி என்பதை முடிந்தளவு மக்கள் பின்பற்ற வேண்டும்- அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

ஒரு மீற்றருக்கு மேல் வைரஸ் பயணிக்காது என்று கூற முடியாது. எனவே ஒரு மீற்றர் இடைவெளி என்பதை விட முடிந்தளவு ஒரு மீற்றர் அல்லது அதனை விட கூடிய இடைவெளியைப் பேணுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தொற்றாளர்களின் எண்ணிக்கையைப்...

கோப்பாய் கல்வியியற் கல்லுாரியில் 350 பேருக்கு சிகிச்சையளிக்கும் வசதி!!

கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மருத்துவமனையினால் மக்கள் அச்சமடைய தேவையில்லை. அங்கு 100 வீதம் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார். இது குறித்து ஊடகங்களை சந்தித்து கருத்து கூறும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், நேற்று மாலை 18 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் இவர்கள் 18...

வெலிக்கட சிறைச்சாலையில் பலருக்கு கொரோனா தொற்று!!

கொழும்பு, வெலிக்கட சிறைச்சாலையில் ஏழு பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நான்கு பெண்கள் உள்ளிட்ட ஆறு கைதிகளும், ஒரு பெண் சிறைச்சாலை அதிகாரியொருவமே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் கூறியுள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளான சிறைச்சாலை அதிகாரி முல்லேரியாவில் அமைந்துள்ள தேசிய தொற்று நோயியல் வைத்தயசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேநேரம் கைதிகள் வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

பேலியகொட மீன் சந்தையில் கொரோனா பரவிய விதம்!!

பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் எப்படி வைரஸ் பரவியது என்பது குறித்து சுகாதார அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது. பணத்தாள் மற்றும் மீனவர்களால் சத்தமிடும்போது வெளியாகும் எச்சில் போன்றவற்றால் கொரோனா பி- 1.42 ரக தொற்றுப் பிரிவு பரவியிருக்கின்றது என சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மினுவங்கொடை கொரோனா கொத்தணி கடந்த மாதம் 3ஆம் திகதி பரவ ஆரம்பித்தது....

கிளினிக் நோயாளர்களுக்கு வீடுகளுக்கே மருந்துகளை விநியோகிக்கும் பணி வடமாகாணத்தில் ஆரம்பம்

அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட தொற்றா நோயாளர்களுக்கான மருந்துகளை தபால் மூலம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கோரோனா தொற்று நோயின் பரவல் காரணமாக தொற்றா நோய்களுக்குரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளும் நோயாளர்கள் தமக்குரிய...

மன்னார் வைத்தியசாலை கோரோனா பிரிவின் தாதியர்கள் பலர் சுகயீன லீவு!!!

மன்னார் பொது வைத்தியசாலையில் கோரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ளோரை கண்காணித்து பிசிஆர் பரிசோதனை முன்னெக்கப்பட்டும் நோயாளர் விடுதியில் கடமைக்கு அமர்த்தப்பட்ட 13 தாதிய உத்தியோகத்தர்களில் 7 பேர் விடுப்பில் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதனால் 6 தாதிய உத்தியோகத்தர்கள் மட்டும் கடமையில் இருப்பதால் பணிச் சுமை அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் பொது வைத்தியசாலையில் கோரோனா...

அரசியல் கைதிகள் தொடர்பான அரசாங்கத்தின் முடிவு என்ன? – சுரேன் ராகவன் கேள்வி

அரசியல் கைதிகள் தொடர்பான அரசாங்கத்தின் முடிவு என்னவென நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசியல் கைதிகளாக எத்தனை பேர் உள்ளனர் எனவும் அவர்கள் தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது எனவும் தெளிவுபடுத்துமாறு நீதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான...

யாழ். மாவட்டத்திலும் 5000 ரூபா நிவாரணப் பொதி வழங்க ஏற்பாடு – டக்ளஸ்

கொரோனா தொற்று பரவல் காரணமாக யாழ் மாவட்டத்தில் சுய தனிமைப்படுத்தலில் உள்ள 772 குடும்பத்தைச் சேர்ந்த 1700 பேருக்கு அரசினால் வழங்கப்படும் 5000 ரூபா நிவாரணப்பொதி உடன் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் . இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ”சுய தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு தலா 5000...

கோவிட் -19 நோய்த் தொற்றைத் தடுக்கக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் – மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்! -மாவட்டச் செயலாளர் |

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட் – 19 தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அனைத்துக் கட்டுப்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை பொதுமக்கள் பின்பற்றி கோரோனா வைரஸ் தொற்று இல்லாத மாவட்டமாக யாழ்ப்பாணத்தைக் கொண்டு வருவதற்கு ஒத்துழைக்கவேண்டும்” இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாண கோவிட் -19 நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான செயலணிக் கூட்டம் மாகாண ஆளுநர்...

வட மாகாணத்துக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து!

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த தனியார் போக்குவரத்துக்களை மாவட்டங்களுக்குள்ளேயே மட்டுப்படுத்தி சேவை வழங்க மாகாண பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கங்களின் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. பொதுப் போக்குவரத்தினால் கொரோனாத் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கிளிநொச்சி மாவட்ட பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நா.நகுலராஜா தெரிவித்தார். அவர் கூறுகையில், “யாழ்ப்பாணம், கிளிநொச்சி,...

நாட்டை முடக்க முடியாது: நடைமுறைகளைப் பின்பற்ற மக்கள் பழக்கப்பட வேண்டும்- ஜனாதிபதி

நாட்டை முடக்காமல், சுகாதார அறிவுறுத்தல்களை சரியாகப் பின்பற்றுவதற்கு மக்கள் பழக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல்துறை அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், சுகாதார அறிவுறுத்தல்களை சரியாகப் பின்பற்றினால் எந்தப் பிரச்சினைகளும் இன்றி நாட்டை முன்கொண்டு செல்ல முடியும் எனவும் சரியான...

அரிசிக்கான அதிகபட்ச விலை குறித்த வர்த்தமானி வெளியானது!

அரசி உற்பத்தியாளர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வரையில் அரசிக்கான அதிகபட்ச விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் விவகார அதிகார சபையால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோ சிகப்பு மற்றும் வௌ்ளை பச்சை அரிசி, சம்பா அரிசிக்கான அதிகபட்ச விற்பனை விலை 94 ரூபாயாக...

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று இடர் தொடர்பான மீளாய்வு!

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று இடர் தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடல், வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது, அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கிராம சேவையாளர்கள், சுகாதாரத் துறையினர் மற்றும் பொலிஸார் இணைந்து, கொரோனா தடுப்பு விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என ஆளுநரால் வலியுறுத்தப்பட்டது....

கிளினிக் நோயாளர்களுக்கு வீடுகளுக்கே மருந்துகள் பொதி விநியோகிக்கும் பணி நாளை ஆரம்பம்

அரச வைத்தியசாலைகளில் கிளினிக் நடைமுறையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு போதுமான மருந்துகளை வீடுகளுக்குக் கொண்டு சென்று வழங்க இலங்கை அஞ்சல் திணைக்களத்துடன் இணைந்து சுகாதார அமைச்சால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை முதல் (05.11.2020) நாடுமுழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் இருந்து மாதந்த கிளினிக்கில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மருந்துகள் விநியோகம் மீண்டும்...

மன்னாரில் கிராம உத்தியோகத்தர் வெட்டிக் கொலை?

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் இலுப்பை கடவை கிராம அலுவலரான விஜி என அழைக்கப்படும் எஸ்.விஜியேந்திரன் (வயது-55) என்பவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக இலுப்பைக்கடவை பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் சம்பவம் இடம் பெற்ற பகுதிக்கு மன்னார் மாவட்ட பதில் நீதவான்...

இந்தியாவில் இருந்து படகு மூலம் வந்தவர் கீரிமலயில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்!!

இந்தியாவின் இராமேஸ்வரம் ஈழத் தமிழர் அகதி முகாமில் இருந்த ஒருவர் தப்பி ஓடி வந்து கீரிமலையில் நின்ற சமயம் நேற்றைய தினம் இனம் கானப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்தியாவில் இருந்து 50 ஆயிரம் ரூபா பணம் வழங்கி தலைமன்னார் கடற்கரையில் 2ஆம் திகதி அதிகாலை கரை இறங்கியுள்ளார். இவ்வாறு கரை இறங்கியவர் அங்கிருந்து மன்னார் நகரை அடைந்துள்ளார்....

யானை தாக்கி கொடிகாமத்தைச் சேர்ந்தவர் சாவு!

மாங்குளம் நகருக்கு அருகில் மல்லாவி வீதியில் யானை தாக்கி யாழ்ப்பாணத்தைச் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. “சம்பவத்தில் கொடிகாமம் பெரிய நாவலடியை சேர்ந்த ஆனந்தராசா விஜயானந்தன் (வயது- 37) என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்துள்ளார். தச்சுத்தொழிலாளியான அவர் மல்லாவி , கொள்ளவிலாங்குளம் பகுதிக்கு தொழில் நிமித்தம் சென்று விட்டு நேற்று...
Loading posts...

All posts loaded

No more posts