அவுஸ்ரேலியா நோக்கி செல்ல முயற்சித்த 64 பேர் கைது!

சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியா நோக்கி செல்ல முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை கடற்பரப்பில் இன்று காலை முன்னெடுக்கப்பட்டிருந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை, முலைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் திருகோணமலை...

தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் குடும்பத்தை சந்தித்தார் அவுஸ்திரேலிய பிரதமர்

இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் குடும்பத்தினை அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் இன்று சந்தித்துள்ளார்.குயின்ஸ்லாந்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கிளாட்ஸ்டோனில் நடேசலிங்கம் குடும்பத்தினை சந்தித்துள்ளார். நடேசலிங்கம் குடும்பத்தினர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர் அவர்களிற்கு நிரந்தர வதிவிடம் விரைவில் கிடைக்கும் என பிரதமர் உறுதியளித்தார் என தமிழ் குடும்பத்தின் நண்பரான அஞ்செலா பிரெட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் மகிழ்ச்சியான நாட்கள்...
Ad Widget

எதிர்வரும் நாட்களில் டீசல் மற்றும் பெற்றோல் தட்டுப்பாடு அதிகரிக்கும்?

எதிர்வரும் நாட்களில் டீசல் மற்றும் பெற்றோல் தட்டுப்பாடு அதிகரிக்கும் என பெற்றோலிய கூட்டுத்தாபன உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, நாட்டில் எரிபொருள் வரிசைகள் மேலும் நீடிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் சுமார் 350 மெற்றிக் தொன் பெற்றோல் மற்றும் 800 மெற்றிக் தொன் டீசல் உற்பத்தி செய்யப்படுகிறது. எனினும், அந்த அளவுகள்...

நாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிதியுதவி!

உலக வங்கியின் ஒத்துழைப்பின் கீழ் நாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக நிதி உதவியை வழங்கும் நோக்கில் 03 மாத கால வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது. சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் பந்துல திலகசிறி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இந்த செயற்றிட்டத்தின் கீழ் குடும்பமொன்றுக்கு மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்காக ஐந்தாயிரம் ரூபாய் முதல் 7 ஆயிரத்து...

அச்சுவேலி கமக்காரர்கள் கையெழுத்து போராட்டம்!

அச்சுவேலி பிரதேச கமக்காரர்கள் விவசாயத்திற்கான எரிபொருள் தேவையினை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டத்தினை ஆரம்பித்து உள்ளனர். அச்சுவேலி சந்தையில் இன்றைய தினம் (புதன்கிழமை) காலை இந்த கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டு மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் மற்றும் விவசாயத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளது.

பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுங்கள் – பிரதமர்

பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். இதன்மூலம் இந்திய சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அந்தவகையில் அடுத்த ஆறு மாதங்களுக்கு இந்தியாவில்...

இன்று எரிபொருள் விநியோகிக்கப்படும் இடங்கள் இதோ!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இன்று (15) எரிபொருள் விநியோகம் செய்யப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பட்டியலை அறிவித்துள்ளது. இந்தப் பட்டியல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை – சுற்றறிக்கை இன்று வெளியீடு

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச அலுவலகங்களுக்கு வாராந்தம் வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக அறிவிப்பதற்கான சுற்றறிக்கை இன்று (புதன்கிழமை) இரவு வெளியிடப்படவுள்ளது. அரச சேவைகள், உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சுக்களின் செயலாளர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெள்ளிக்கிழமைகளில் அத்தியாவசிய...

எரிபொருள் விநியோகம் குறித்து பிரதமரின் அறிவிப்பு!

40 ஆயிரம் மெட்ரிக் டன் எரிபொருள் அடங்கிய கப்பலொன்று நாளையதினம் (வியாழக்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார். எனினும் அந்தக் கப்பல் மூலம் கொண்டுவரப்படும் எரிபொருளை, மின்சாரம், பொதுப் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க...

11 நாட்களுக்குப் பின்னர் எரிவாயு விநியோகம் ஆரம்பம்

நாட்டில் 11 நாட்களுக்குப் பின்னர் இன்று (புதன்கிழமை) முதல் எரிவாயு விநியோகம் இடம்பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. முதன்மையாக வணிகங்கள், தகனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு எரிவாயு இருப்புக்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரம், குறைந்த எண்ணிக்கையிலான வீடுகளுக்கு எரிவாயுவை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது. நாட்டை வந்தடைந்த எரிவாயு கப்பலின் எரிவாயு...

நாடளாவிய ரீதியில் நாளை முதல் தனியார் பேருந்துகள் முற்றாக நிறுத்தப்படும்!!

போதியளவு டீசல் இல்லாத பட்சத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் நாடளாவிய ரீதியில் தனியார் பேருந்துகள் முற்றாக நிறுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டீசல் தட்டுப்பாடு காரணமாக மொத்த தனியார் பேருந்துகளில் 20 வீதமே இன்று சேவையில் ஈடுபடுவதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். தற்போதைய நிலைமை காரணமாக இலங்கை...

அவுஸ்திரேலியா 2 விக்கெட்டுகளால் வெற்றி!!

இலங்கைக்கு எதிராக பல்லேகலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் பகல்-இரவு கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமைப்படி (DLS) 2 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றது. இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 301 ஓட்டங்கள் என்ற சற்று கடினமான, ஆனால் எட்டக்கூடிய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 13ஆவது ஓவரில் 2 விக்கெட்களை இழந்து 72...

விடுதலைப் புலி ஆதரவாளர்கள் 318 பேருக்கு எதிரான தடை நீக்கம்!!

விடுதலைப் புலி ஆதரவாளர்கள் 318 பேருக்கு எதிரான தடை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான 318 நபர்கள் மற்றும் 4 அமைப்புக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அரசாங்கம் நீக்கியுள்ளது. எவ்வாறெனினும் இவ்வாறு தடை நீக்கப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிடவில்லை....

லண்டனிலிருந்து சென்ற விமானத்தில் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் தவிர்ப்பு

மிகப்பெரிய விமான விபத்தை தவிர்ப்பதற்காக லண்டனில் இருந்து பயணித்த UL 504 விமானம் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது. துருக்கிய வான்வெளியில் இருக்கும் போது பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்துடன் UL 504 விமானம் நேருக்கு நேர் மோதுவதனை தவிர்ப்பதற்காக இவ்வாறு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. 275 பயணிகள் மற்றும்...

ரஷ்யாவிற்கு எதிராக போரிடும் 3,000 பிரித்தானியர்கள்!!

ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைன் தரப்பில் சுமார் 3,000 பிரித்தானிய தன்னார்வலர்கள் தற்போது போராடி வருவதாக ஜார்ஜிய தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் தற்போது 20,000 வெளிநாட்டு வீரர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. இதன்படி, உக்ரேனிய கட்டளையின் கீழ் உள்ள மற்றொரு இராணுவப் பிரிவானது பெரும்பாலும் வெளிநாட்டினரை உள்ளடக்கியது. இதன்படி, தற்போது உக்ரைன் தரப்பில் சுமார் 3,000...

தொடர்ந்து முகக்கவசம் அணியுமாறு மருத்துவ நிபுணர்கள் சங்கம் கோரிக்கை

உள்ளக மற்றும் வெளியரங்குகளில் தொடர்ந்து முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்னும் சுகாதார அமைச்சின் தீர்மானம் தமக்கு அதிருப்தி அளிக்கிறது என்றும் மேலும் முகக்கவசம் அணிவது தற்போதைய நிலையில் ஆரோக்கியமானதாகவும் தெரிவித்துள்ள இலங்கை மருத்துவ நிபுணர் சங்கம் தொடர்ந்து பொதுமக்களிடம் முகக் கவசம் அணியுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்னும் சுகாதார அமைச்சின் தீர்மானம்...

குருந்தூர் மலையில் புத்தரின் சிலையை வைத்து வழிபட முயற்சி!!

மிழர்கள் பாரம்பரியமாக வழிபட்ட குருந்தூர் மலையில் சிவன் வழிபாடு இருந்த இடத்திலே பலாத்காரமாக புத்தரின் சிலையை வைப்பதற்குஅகில இலங்கை தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். குருந்தூர் மலைப்பகுதி தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அங்கு இனங்காணப்பட்ட தொல்பொருள் இடத்தில் புதிதாக விகாரை ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. இதற்கு அப்பகுதி மக்கள்...

எரிவாயு தட்டுப்பாட்டினால் 80 வீத சிற்றூண்டிச்சாலைகளுக்கு பூட்டு!

நாட்டில் நிலவிவரும் எரிவாயு தட்டுப்பாடுக் காரணமாக புறக்கோட்டை உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள 80 வீதமான சிற்றூண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய சுயத்தொழில் வர்த்தக சங்கம், சிறிய மற்றும் நடுத்தர சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்...

மன்னார் வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் கத்திக்குத்து!!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து பலத்த காயத்துடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். வைத்தியசாலை நோயாளர் விடுதியில் சிகிச்சைப் பெற்று வந்த மன்னார் நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த நபர் மீது இவ்வாறு கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம்...

இலங்கை பொருளாதாரத்தில் மீண்டு உறுதிநிலையை அடையும் – பிரதமர்

தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு, நாட்டின் பொருளாதாரம் உறுதித்தன்மைக்கு வருவதற்கு சுமார் 18 மாதங்கள் ஆகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை தற்போது பெரும் டொலர் நெருக்கடி மற்றும் கடன் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆனால் அதிக எண்ணிக்கையிலான தனியார் கடனாளிகள் காரணமாக சிரமங்களை...
Loading posts...

All posts loaded

No more posts