இந்தியாவைச் சேர்ந்த ஆடை வியாபாரி மீது திருநெல்வேலியில் தாக்குதல்

இந்தியாவைச் சேர்ந்த ஆடை வியாபாரி ஒருவர் திருநெல்வேலியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளார் .

இலங்கை போக்குவரத்துச் சபையுடன் இணைய மறுக்கும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

யாழ் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இலங்கை போக்குவரத்துச் சபையுடன் இணைந்து போக்குவரத்துச் சேவையை நடாத்துவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
Ad Widget

மோட்டார் சைக்கிள் விபத்தில் வடமராட்சியில் கிராமசேவையாளர் பலி

வடமராட்சியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கிராம சேவையாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

நெல்லியடி தீவிபத்தில் இரு கடைகள் முற்றாக சேதம்

யாழ் நெல்லியடி சந்தைப்பகுதியில் இன்று காலை இடம்பெற்ற தீவிபத்தொன்றின் காரணமாக இரண்டு கடைகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் துரத்த மோட்டார் சைக்கிள் ஒடியவர்கள் படுகாயமடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில்

சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளில் பயணித்த மேற்படி இளைஞர்களை கொடிகாமப் பொலிஸார் மறித்துள்ளனர். எனினும் இவர்கள் நிற்காமல் மோட்டார் சைக்கிளைச் வேகமாக செலுத்திச் சென்றுள்ளனர். (more…)

கைவிடப்பட்ட நிலையில் பிறந்து ஒருநாளேயான சிசு மீட்பு: யாழில் சம்பவம்

யாழ். பாஷையூர் பற்றிமாதா தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக்காணியிலிருந்து பிறந்து ஒரு நாளேயான சிசுவொன்று கைவிடப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் உயிருடன் மீட்கப்பட்டதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

காரைநகரில் மனநலம் குன்றிய யுவதியை முஸ்லிம்கள் இருவர் வன்புனர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

காரைநகரில் மனநலம் குன்றிய யுவதியை முஸ்லிம்கள் இருவர் வன்புணர்வுக்கு உட்படுத்திய செயல் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் தலை குனிவை ஏற்படுத்தி உள்ளது (more…)

யாழில் இராணுவ சிப்பாயைத் தாக்கிய பொதுமக்கள்

மதுபோதையில் கே.கே.எஸ் வீதியிலுள்ள கொத்து ரொட்டிக் கடையில் தகராறில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய் ஒருவரை பொதுமக்கள் தாக்கியுள்ளனர். (more…)

யாழ். மாவட்ட புதிய அரச அதிபர் இன்று பதவியேற்பு

யாழ்.அரச அதிபராகக் கடமையாற்றி திருமதி இமெல்டா சுகுமார் இடமாற்றம் பெற்று ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் நிலையிலேயே, மட்டக்களப்பு அரச அதிபராக கடமையாற்றிய சுந்தரம் அருமைநாயகம் யாழ்.அரச அதிபராக நியமிக்கப்பட்டார். (more…)

யாழில் நடைபெற்ற அரசியல் சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்கான கருத்தரங்கு

ஜனநாயக அடிப்படையில் அரசியல் சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்கான இரண்டாவது வழிகாட்டல் கருத்தரங்கு யாழ்.நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. (more…)

“என்னுடைய இடமாற்றத்தை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை” : இமெல்டா சுகுமார் கவலை

யாழ்.அரச அதிபராக கடமையாற்றிக் கொண்டிருக்கும் போது எனக்கு இடமாற்றம் வரும் என நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லையென்று, கவலையுடன் யாழ்.அரச அதிபராகக் கடமையாற்றிய திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். (more…)

டக்ளஸுக்கும் கூட்டமைப்பினருக்கும் இடையில் சபையில் கடுமையான வாய்ச்சண்டை

பாராளுமன்றத்தில் நேற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றிக்கொண்டிருந்த வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் டக்ளஸுக்கும் இடையில் கடுமையான வாய்ச்சண்டை ஏற்பட்டது. (more…)

யாழ்.அரச அதிபர் திடீர் இடமாற்றம்

யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் பதவி உயர்வுடன் ஜனாதிபதி செயலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு செயலாளர் பதவி ஒன்று வழங்கப்படலாம் என்று தெரியவருகிறது. இவரது இடத்துக்கு மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் எஸ். அருமைநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, வவுனியாவுக்கு புதிய அரச அதிபராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். (more…)

சங்கங்களில் கோதுமைமாவின் நுகர்வு பெரும் வீழ்ச்சி , தீட்டல் பச்சை அரிசிக்கு மவுசு

கோதுமை மாவின் நுகர்வு குறைவடைந்துள்ள அதேவேளை சங்கங்களில் தீட்டல் பச்சை அரிசியின் நுகர்வு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது (more…)

போதனா வைத்தியசாலையில் ஊழியர் போன்று கொள்ளையர்; நோயாளர்களே! உங்கள் நகை கவனம் ஆஸ்பத்திரிப் பொலிஸார் எச்சரிக்கை

பெரும்பாலும் வெளிநோயாளர் பிரிவிலேயே இந்தக் கொள்ளை அதிகம் இடம்பெறுகிறது. மருத்துவ விடுதிகளிலும் இவை ஆங்காங்கே இடம்பெறுகின்றன. (more…)

யாழ். மாவட்டத்தில் பத்தாயிரம் குடும்பங்கள் மீள்குடியேற விண்ணப்பம்

யாழ். மாவட்டத்தில் மீள்குடியேறுவதற்காக இதுவரை உயர் பாதுகாப்பு வலயத்தைச் சேர்ந்த பத்தாயிரம் குடும்பங்கள் விண்ணப்பித்திருப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். (more…)

யாழ்ப்பாணத்தில் கடல் கொந்தளிப்பு: கடலுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு காலநிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.நாட்டில் அண்மைக்காலமாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ். கடலில் எல்லா இடங்களிலும் கொந்தளிப்பாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)