மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் குற்றப் பிரேரணை சபையில் வெற்றி; நாடாளுமன்றில் நேற்று கடும் வாதப்பிரதிவாதங்கள்

இலங்கை ஜன நாயக சோஷலிசக் குடியரசின் முதல் பெண் பிரதம நீதியரசரான கலா நிதி ஷிராணி பண்டாரநாயக்கவைப் பதவிநீக்கம் செய்யும் குற்றவியல் பிரேரணை நேற்று நாடாளுமன்றத்தில் 106 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. (more…)

ரிக்கெட் வழங்காத பஸ்களுக்கு எதிரான நடவடிக்கை எப்போது? விசனம் தெரிவிக்கின்றனர் மக்கள்

தனியார் பஸ்களில் ரிக்கெட் வழங்க வேண்டும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் தெரிவிக்கப்பட்டது. எனினும் இதனை பெரும்பான்மையான தனியார் பஸ்கள் பின்பற்றுவதில்லை என்று விசனம் தெரிவிக்கப்படுகிறது. (more…)
Ad Widget

யாழில் 8 கிலோ கிராம் வெடிமருந்து இராணுவத்தினரால் மீட்பு

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில், கப்பல் துறைமுகத்தில் இருந்து 8 கிலோ கிராம் வெடிமருந்து இராணுவத்தினர் இன்று அதிகாலை மீட்டுள்ளனர். (more…)

புதிய மின் இணைப்புகளுக்கு உயர்வடைந்தது கட்டணம்!

புதிய மின் இணைப்புகளுக்கான கட்டணம் இந்த ஆண்டில் இருந்து ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் மின் பொறி யியலாளர் எஸ்.ஞானகணேசன் இத்தகவலைத் தெரிவித்தார்.இந்த விடயம் தொடர் பாக அவர் மேலும் கூறியதாவது: (more…)

பெண்களுக்கான தையல் பயிற்சி நெறி ஆரம்பிப்பு

வடமராட்சி இடம்பெயர்ந்தோர் நலன் பேணும் அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் தையல் பயிற்சி நெறியொன்று வடமராட்சி, பருத்தித்துறை, சுப்பர்மடம் மாதர் சங்க மண்டபத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. (more…)

வடமாகாணத்தில் ஊ.சே.நிதியத்தில் 902 நிறுவனங்கள் இணைப்பு: பிரதித் தொழில் ஆணையாளர்

வடமாகாணத்தில் ஊழியர் சேமலாப நிதிய திட்டத்தில் 3,164 தொழில் நிறுவனங்கள் கடந்த வருடத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக வடமாகாண பிரதித் தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். (more…)

மின்கம்பங்களை சேதமாக்கியவர்களிடமிருந்து 100.000 ரூபா வசூல்

மின்கம்பங்களை சேதமாக்கிய வாகன உரிமையாளர்கள் இருவரிடமிருந்து ஒரு இலட்சம் ரூபாவை வசூலித்துள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. (more…)

வடமாகாண அஞ்சல் சேவையில் 10,355 மில்லியன் ரூபா வருமானம்

வடமாகாண அஞ்சல் திணைக்களம் 10,355 மில்லியன் ரூபா வருமானத்தினை கடந்த வருடத்தில் ஈட்டியுள்ளதாக வடமாகாண அஞ்சல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

யாழ். நகரில் வர்த்தக நிலையங்களின் விபரங்கள் திரட்டும் புலனாய்வு பிரிவினர்: பீதியில் வர்த்தகர்கள்

யாழ்.நகரப் பகுதியிலுள்ள சில வர்த்தக நிறுவனங்களிடம் புலனாய்வாளர்கள் என்று அறிமுகப்படுத்திய சிலர் வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான விவரங்களைத் திரட்டிச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மூன்று தினங்களாக இந்தச் சம்பவம் இடம்பெற்று வருவதாகக் கூறப்பட்டது. (more…)

ஜனவரி 18 முதல் யாழ்ப்பாண சர்வதேச விற்பனை கண்காட்சி ஆரம்பம்

எதிர்வரும் 18ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் சர்வதேச விற்பனை கண்காட்சி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நான்காவது தடவையாக ஏற்பாடு செய்யப்படும் இந்த கண்காட்சி நிகழ்வு, யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. (more…)

வடக்கில் தென்னிலங்கை மீனவர்களால் சுரண்டப்படும் வளங்கள்: யாழ். வந்த பிரான்ஸ் தூதுவருக்கு விளக்கம்

வடமாகாணத்தின் கடல் வளத்தை தென்னிலங்கை மீனவர்கள் சூறையாடி வருவதாகத் வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.தவரட்ணம் குற்றஞ்சாட்டியுள்ளார்.பாதுகாப்புத் தரப்பினரின் முழுமையான ஒத்துழைப்புடனே இந்த வளச் சுரண்டல் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார். (more…)

உள்ளுர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்

உள்ளுர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி தலைமையில் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்றய தினம் நடைபெற்றது. (more…)

டெலோவின் 8ஆவது தேசிய மாநாடு யாழில்

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) 8ஆவது தேசிய மாநாடு இம்முறை யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 26ஆம் 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதென இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், (more…)

மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த கோரிக்கை

மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துமாறு கோரிக்கை ஒன்றினை இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் போக்குவரத்து சபை உபதலைவர் வி. விமலரட்ணவிடம் முன்வைத்துள்தாக போக்குவரத்து சபை முகாமையாளர் அஸ்ஹர் தெரிவித்தார். (more…)

யாழ் பல்கலை மாணவர்களை எச்சரித்து வீடுகளுக்கு கடிதங்கள்; அச்சத்தில் மாணவர்கள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பலரது வீட்டு முகவரிகள் பெறப்பட்டு இனம் தெரியாத நபர்களினால் அவர்களது வீடுகளுக்கு அநாமதேய கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் பல்கலைக்கழக மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் அச்சமடைந்துள்ளனர். (more…)

தனியார் பேருந்து மதிலுடன் மோதி விபத்து: ஐவர் காயம்

யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டியை நோக்கி பயணித்த தனியார் பேருந்து மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் பஸ்ஸின் சாரதி தப்பியோடிய சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. (more…)

ஆவணங்களை உரிய வேளையில் உரியமுறையில் பெற்றுக்கொள்ள வேண்டும்.!வலி.கிழக்கு பிரதேச செயலர் எம்.பிரதீபன்.

வலிகாமம் கிழக்கு பிரதேசத்தில் 2013 ஆம் ஆண்டில் சிவில் ஆவணங்களை பிறப்புச்சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் தகுதியான அனைவருக்கும் வழங்கி முடிப்போம்.உரிய சான்றிதழ்கள் இன்றி எதிர்காலத்தில் யாரும் இருத்தல் கூடாது. அதற்கு ஏற்ற முறையில் நடமாடும் சேவைகள் கிராம அலுவலர் பிரிவு வாரியாக நடத்தப்படும். (more…)

50,821 பட்டதாரிகளுக்கு நாளை நிரந்தர நியமனம்

50,821 பட்டதாரிகளுக்கு நாளைய தினம் அரச சேவையில் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். (more…)

ஈழத்து எழுத்தாளரின் நூல்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை

ஈழத்து எழுத்தாளர்கள், இலக்கிய கர்த்தாக்களை ஊக்குவிக்கும் முகமாக ஈழத்து எழுத்தாளர்களின் இலக்கிய கர்த்தாக்களின் நூல்களை கொள்வனவு செய்வதற்கு வேண்டிய நடவடிக்கைகளை இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. (more…)

குடாநாட்டில் கடல்நீரேரி தடைக் கதவுகள் திறக்கப்பட்டன

குடாநாட்டில் மழை வெள்ளம் தேங்காதவாறு தொண்டமானாறு, அராலி, அரியாலைப் பகுதிகளில் உள்ள கடல் நீரேரி தடைக் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றின் ஊடாக மழை வெள்ளம் கடலுக்குள் செலுத்தப்படுகின்றது என்று நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts