Ad Widget

போலி கடனட்டைகளுடன் கைதான வடபகுதி சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

creditcard-forg15 போலி கடனட்டைகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் வடபகுதியைச் சேர்ந்த மூன்று சந்தேகநபர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு, பிறிஸ்டல் வீதியில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் மற்றும் வல்வெட்டித்துறை பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி சந்தேகநபர்கள் பின்னர் இரகசிய பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.

சந்தேகநபர்கள் மேற்படி போலி கடனட்டைகளைப் பயன்படுத்தி மோசடி செய்த பணம் தொடர்பான விபரங்கள் ஆராயப்பட்டு வருவதாக இரகசிய பொலிஸார், நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மேலும் இவ்வாறு பெறப்பட்ட பணம், பயங்கரவாத இயக்கங்களுக்கு அனுப்பப்பட்டதா எனவும் தாம் ஆராய்ந்து வருவதாக இரகசிய பொலிஸார், நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்தனர்.

Related Posts