Ad Widget

யாழில் அரச வங்கிகளில் மீளளிக்கப்படாத கடன் தொகை, 400 கோடியை தாண்டியது

cash-money-paymentயாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அரச வங்கிகளில் கடனாக பெறப்பட்ட 400 கோடி ரூபா வரையில் இதுவரை மீளளிக்கப்படாது உள்ளதாக அரச வங்கி அதிகாரி ஓருவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரச வங்கிகளில் கடனாகப் பணம் பெறுபவர்களில் பலர் அதனை மீளச் செலுத்தாது உள்ளனர்.

கடன் பெற்றவர்கள் உரிய காலத்தில் தமது தவணை முறையிலான மீளளிப்புகளை செலுத்த தவறும் பட்சத்தில் கடனாளிகளுக்கு பிணை நின்ற அரச உத்தியோகத்தர்களின் கணக்கில் இருந்து மாதாந்தம் கடன் தொகை அறவிடப்படும்.

இது தொடர்பில் கடனாளிக்கு பிணை நின்றவர்களுக்கு அறிவிறுத்தப்பட்டுள்ளது. மேலதிகமாக இரண்டு தடவைகள் அறிவித்தல் கடிதங்கள் அனுப்பப்பட்டு மூன்றாவது தடவை எச்சரிக்கை கடிதம் அனுப்பப்படும். ஆனாலும் இந்த நடைமுறை தற்போது மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதேவேளை, கடன் பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts