தாயையும் மகளையையும் காணவில்லை

யாழ்ப்பாணம், கற்கோவளம், தபால்பெட்டி சந்தியைச் சேர்ந்த 30 வயதான தாயொருவரையும் அவரது நான்கு வயது மகளையும் காணவில்லை என அவர்களின் உறவினர்கள், பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (12) முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளனர். பிரதாப் ஜெனிஸ்ரலா விஜயகுமார் மற்றும் அவரது மகள் பிரதாப் சரணியா ஆகிய இருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர் என்று பொலிஸ்...

ஊழியர் சேமலாபநிதியில் 87 நிறுவனங்கள் பதிவு

ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் 87 நிறுவனங்கள் கடந்த வருடம்; (2014) பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட தொழில் திணைக்கள பிரதித் தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், எமது திணைக்கள அதிகாரிகள் கடந்த 2014ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலுள்ள ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் சென்று, சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு...
Ad Widget

விபத்தில் வடமாகாண சபை உறுப்பினர் படுகாயம்

கிளிநொச்சி, கரடிப்போக்கு சந்தியில் திங்கட்கிழமை (12) மதியம் இடம்பெற்ற விபத்தின் போது, வடமாகாண சபை உறுப்பினர் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை படுகாயமடைந்த நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கரடிப்போக்குச் சந்தியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தனது மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்பிவிட்டு, வீதிக்கு வரும்போது, கன்ரர் ரக வாகனமொன்று மோட்டார் சைக்கிளை மோதியுள்ளது....

புதிய அரசின் நூறு நாள் திட்டத்தை வெளியில் இருந்து ஆதரிப்போம் – ஈபிடீபி

புதிதாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தை வெளியில் இருந்தே ஆதரிப்பதென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முடிவு செய்திருக்கின்றது. இது தொடர்பில் அக்கட்சி விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'நடந்திருக்கும் ஆட்சி மாற்றத்திலும் எமது மக்களுக்கு மகிழ்ச்சி தரும் ஆக்கபூர்வமான திட்டங்கள் தொடர வேண்டும் என்பதையே நாம் விரும்புகின்றோம். தமிழ்...

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கியமைக்கு எதிராக முல்லேரியா பிரதேச சபை தலைவர் பிரசன்ன சோலங்காரச்சி தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம், திங்கட்கிழமை (12) அழைப்பாணை விடுத்தது. சோலங்காரச்சியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் பிரதிவாதிகளாக முன்னாள்...

அமெரிக்க மத்திய ராணுவ கட்டளைப் பிரிவின் ட்விட்டர் தளம் ஊடுருவல்

அமெரிக்காவின் மத்திய ராணுவ கட்டளைப் பிரிவின் ட்விட்டர் செய்தி விநியோகத்தை சட்டவிரோத இணைய தாக்குதல்தாரிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள். இணைய காலிஃபேட் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் இந்தக்குழு முன்னாள் அமெரிக்க தளபதிகள் மற்றும் தற்போது பதவியிலிருக்கும் தளபதிகள் பெயர்கள் மற்றும் அவர்களது தனிப்பட்ட தகவல்களையும், ராணுவ உள் விவகார ஆவணங்களையும் வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க ராணுவத்தின் மத்திய...

விஜய், அஜித் ரசிகர்களிடையே சிக்கி தவிக்கும் சிவகார்த்திகேயன்!

சமூக வலைத்தளங்களில் எல்லோருக்கும் ஒரு பிரச்சனை என்றால் விஜய், அஜித் ரசிகர்களுக்கு எப்போது ஒரே பிரச்சனை தான். தலயா? தளபதியா? என்பது தான். இந்த நேரத்தில் தான் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் காக்கிசட்டை படத்தின் ட்ரைலர் வெளிவர, பிரச்சனை மீண்டும் அவர்களுக்கிடையே பூதாகரமானது. சிவகார்த்திகேயன் ட்ரைலரில் அஜித் வசனத்தை கூற, உடனே விஜய் ரசிகர்கள் கோபமாகிவிட்டனர்....

ஐ – பெயர்தான் சிறிசு, படம் ரொம்பப் பெரிசு

ஜனவரி 14 ஐ வெளியாகிறது. திரையுலகமும், பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்த்த படம். விக்ரமின் கடின உழைப்பும், ஷங்கரின் பிரமாண்ட கற்பனையும், ரஹ்மானின் இசையும், ஆஸ்கர் ரவிச்சந்திரனின் கோடிகளும் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பொதுவாக இரண்டரை மணி நேரம் படம் இருந்தாலே பார்வையாளர்கள் நெடியத் தொடங்குவார்கள். இரண்டே முக்கால் மணி நேரம் என்பது மிக...

எதிரிக்கும் துரோகிக்கும் வாக்குரிமை மூலம் செய்தி கூறியுள்ளோம்

தமிழ் மக்களின் துரோகிகளுக்கும், எதிரிகளுக்கும் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சரியான செய்தியொன்றை வழங்கியுள்ளனர் என வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நாகரஞ்சினி ஐங்கரன் திங்கட்கிழமை (12) அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,...

முல்லைத்தீவில் புலிகளுக்கு சார்பான துண்டுப்பிரசுரங்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள், முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வீதியோரங்களில் வீசப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 'வடக்கில் எமக்கு புதிய சூரியன்' எனும் தலைப்பிடப்பட்டிருந்த இந்த துண்டுப் பிரசுரங்களில் விடுதலைப் புலிகள் இயங்கத்தின் உத்தியோகபூர்வ சின்னம் மாத்திரமே பொறிக்கப்பட்டிருப்பததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். இவ்வாறு...

பாப்பரசர் வருகை: அரச விடுமுறை

பாப்பரசரின் இலங்கைக்கான வருகையை முன்னிட்டு நாளை மறுதினம் 14 ஆம் திகதி அரச வங்கி பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 14 ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெறும் பிரதான தேவஆராதனையை முன்னிட்டு அன்றைய தினம் விசேட விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சரானார் சரத்பொன்சேகா?

மகிந்த ராஜபக்ச அரசால் குடியுரிமை பறிக்கப்பட்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் குடியுரிமை வழங்கி புதிய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். யுத்தம் நடைபெற்ற காலத்தில் 20 வருடங்களாக ஆட்சியில் இருந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடமே பாதுகாப்பு அமைச்சு இருந்து. கட்சிக்குள்ளும் வெளியிலும் தமக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து தற்காத்து...

புலிக்கொடி எங்கும் இல்லை : ரணில் விக்கிரமசிங்க

யாழ்ப்­பாணம் மற்றும் வடக்கில் எந்­த­வொரு அசம்­பா­வி­தங்­களும் நடை­பெ­ற­வில்லை என, தான் மகா­நா­யக்க தேர­ரிடம் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க குறிப்­பிட்­டுள்ளார். நேற்று கண்­டியில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் பேசி­ய­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். தற்­போது அந்தப் பகு­தியில் அமைதி நில­வு­வ­தா­கவும் இது­கு­றித்து காலை யாழ்ப்­பா­ணத்­திற்குப் பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ரிடம் தக­வல்­களைப் பெற்றுக் கொண்­டுள்­ள­தா­கவும் பிர­தமர் கூறினார்....

ஜனாதிபதி மைத்திரிபால கடமைகளைப் பொறுப்பேற்றார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்விலும் மகிந்த தரப்பில் இருந்து பலர் மைத்திரிபாலவுக்கு ஆதரவாக கலந்துகொண்டனர் என்று தெரியவருகிறது.

வடக்கு மக்கள் யாழ்தேவி ரயிலைக் கோரவில்லை, அரசியல் அதிகாரத்தையே கோரினர் – டிலான் பெரேரா

வடக்கு வாழ் மக்கள் யாழ்தேவி ரயிலையும் ரயில் பாதையையும் அமைத்துத் தருமாறு கோரவில்லை எனவும், அவர்கள் அரசியல் அதிகாரத்தை கோரி நின்றதாகவும் முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரவித்துள்ளார். கடந்த 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தோல்வியைத் தழுவியமை குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். வடக்கு கிழக்கு மக்களுக்கு...

பாப்பரசர் வருகைக்காக விசேட பஸ் சேவை

புனித பாப்பரசர் பிரான்ஸிஸின் இலங்கைக்கான விஜயத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை (13) முதல் இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாணத்திலுள்ள அனைத்து சாலைகளிலிருந்தும் மடுவுக்கு செல்லும் பஸ் சேவைகள் இடம்பெறும் என இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளர் எஸ்.ஏ.அஸர் திங்கட்கிழமை (12) தெரிவித்தார். இலங்கைக்கு செவ்வாய்க்கிழமை (13) வருகை தரும் புனித பாப்பரசர் பிரான்ஸிஸ், புதன்கிழமை (14)...

செந்தில் தொண்டமான் சரணடைந்தார்

பிடியாணை பிடிக்கப்பட்டிருந்த ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் பண்டாரவளை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தரான செந்தில் தொண்டமான், தபால்காரர் பெரியசாமி ஞானசேகரனை கடந்த 3ஆம் திகதி தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே பண்டாரவளை நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீகாமன் இயக்குனருடன் மீண்டும் கைகோர்க்கும் ஆர்யா

ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘மீகாமன்’. இதில் ஆர்யாவிற்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருந்தார். இப்படத்தை மகிழ்திருமேனி இயக்கியிருந்தார். தமன் இசையமைத்திருந்தார். சதீஷ்குமார் ஒளிப்பதிவை செய்திருந்தார். ஆக்ஷன் திரில்லராக உருவாகி இருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்யாவை வைத்து மீண்டும் இயக்கவிருக்கிறார் மகிழ்திருமேனி....

விநியோகஸ்தர்கள்தான் லிங்கா படத்தை கொன்றுவிட்டார்கள்: தயாரிப்பாளர் ஆவேசம்

ரஜினி நடித்த லிங்கா படம் கடந்த மாதம் 12–ந்தேதி ரிலீசானது. இந்த படத்தால் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும். எனவே நஷ்டஈடு வேண்டும் என கோரியும் விநியோகஸ்தர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த பிரச்சினையில் ரஜினி தலையிட்டு நஷ்டஈடு பெற்று தர வேண்டும் என்று கோரி விநியோகஸ்தர்கள் நேற்று வள்ளுவர் கோட்டம் அருகில் காலை 10 மணிக்கு உண்ணாவிரத...

தேசிய அரசில் கூட்டமைப்பு பங்கேற்காது! வெளியிலிருந்து முழுமையாக ஆதரிக்கும்!! – சம்பந்தன்

அமைச்சுப் பதவி எதுவும் தேவையில்லை, வெளியிலிருந்தே தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு அளிக்கிறோம். - இப்படித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கிறார் என அறிய வருகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்துப் பேசியபோதே சம்பந்தன் அவருக்கு இவ்வாறு தெரிவித்திருக்கிறார். இந்த விடயம் குறித்து மேலும் தெரிய வருபவை வருமாறு:- தமிழ்த்...
Loading posts...

All posts loaded

No more posts