புலம்பெயர் வாழ் மக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வேண்டும்- டக்ளஸ்

புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் எமது மக்களுக்கு இரட்டைக் குடியுரிமை அவசியம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் தொடர்ந்து இருந்து வருகின்றோம். கடந்த அரசிடமும் இதனை நாம் வலியுறுத்தி அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. தற்போது இந்த அரசு இரட்டைக் குடியுரிமை வழங்குவது தொடர்பான நடைமுறைகளை இலகுபடுத்த நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும், மேலும் இலகுபடுத்த...

யாழில் விபத்து – ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்

யாழ். கைதடி - கோப்பாய் பாலத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற இவ் விபத்தில் கோப்பாய் ஆசிரிய கலாசாலை உடற்கல்வித்துறை ஆசிரிய பயிலுநரான கிளிநொச்சியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கிருஷ்ணன் றீகன் என்பவரே உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. படுகாயமடைந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்....
Ad Widget

உள்ளூராட்சி திணைக்கங்களில் ஒழுக்கமுறை மீறல்கள்: விந்தன் கனகரட்ணம்

யாழ். மாநகரசபை வட, கிழக்கு மாகாண தொழிலாளர் சங்கத்தின் 40 ஆவது வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபை தெரிவும் நாவலர் கலாசார மண்டபத்தில், புதன்கிழமை (11) நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், மாநகரசபை நீதியாக செயற்பட வேண்டும் என்று பல தடவைகள் குரல் கொடுத்து பல அச்சுறுத்தல்களை எதிர்நோக்கினோம்....

பேருந்துகளில் போட்டித்தன்மையால் பயணிகள் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் இருந்து தினமும் காலை 8.00 மணிக்கு துணுக்காய் வரை செல்லும் அரச மற்றும் தனியார் பேருந்துகளில் போட்டித்தன்மையால் பயணிகள், அரச உத்தியோகத்தர்கள் தினமும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் ஆகிய பகுதிகளில் வெளி மாவட்டங்களில் இருந்து அதாவது யாழ்ப்பாணம் கிளிநொச்சி, ஆகிய பகுதிகளில் இருந்து செல்லும் அரச மற்றும் அரச...

மாறுபட்ட விலை, நிறைகளில் நெல் கொள்வனவு

பெரும்போகத்தில் செய்கை பண்ணப்பட்ட நெல்லை கொள்வனவு செய்பவர்கள் விலை, நிறை என்பனவற்றில் மாறுபாடுகள் செய்வதால் விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர்நோக்கி வருவதாகவும், இந்தப் பிரச்சினைக்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகள் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு மூடை நெல்லின் நிறை 69 கிலோகிராம் ஆகும். ஆனால் உடன்...

பொதுமக்கள் எதிர்ப்பால் திறப்பு விழா நிறுத்தம்

முல்லைத்தீவு, விசுவமடு விவசாயிகள் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கிராமிய வங்கித் திறப்பு விழா பொதுமக்களின் எதிர்ப்பால் செவ்வாய்க்கிழமை (10) கைவிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, விசுவமடு வள்ளுவர்புரம் பகுதியில் பொதுத்தேவைக்கென கடந்த 1977ஆம் ஆண்டு ஒதுக்கிய 6 ஏக்கர் காணியை, கடந்த 2011ஆம் ஆண்டு விசுவமடு விவசாயிகள் பலநோக்கு கூட்டுறவு சங்கம் அத்துமீறி அபகரித்துள்ளதாகவும் இதனை மீட்டுத்தருமாறு வள்ளுவர்புரம்...

மீனவரின் படகை மோதிய கடற்படையினர் 8பேர் கைது

யாழ்.எழுவைதீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவரின் படகை மோதி, அந்த மீனவர் உயிரிழக்க காரணமாகவிருந்தார்கள் என்ற சந்தேகத்தில் 8 கடற்படையினரை புதன்கிழமை (11) கைது செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி கியூ.ஆர்.பெரேரா தெரிவித்தார். கடந்த டிசெம்பர் மாதம் 18ஆம் திகதி இரவு, எழுவைதீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவரின் படகு மீது,...

யோஷித தப்பிக்கவில்லை, திரும்பி வருவார் என்கிறார் நாமல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரும் கடற்படையில் லெப்டினன் பதவிநிலை வகிப்பவருமான யோஷித ராஜபக்ஷ, டுபாய்க்கு பயணமாகியுள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சாதாரண பயணிகள் பயன்படுத்தும் வழியூடாக செவ்வாயக்கிழமை (10) இரவு எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ரி.கே 653 என்ற விமானத்திலேயே அவர் டுபாய் பயணமாகியதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில்...

ஏப்ரல் முதல் அதிகரிக்கிறது ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவு

2015 ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவு ஏப்ரல் மாதம் முதல் அதிகரிக்கப்படும் என்று அரச நிர்வாக, மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. இதுதொடர்பில் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஓய்வூதியர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற 2,500 ரூபா மாதாந்த இடைக்கால கொடுப்பனவுக்கு மேலதிகமாக 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து அமுல்படுத்தும்...

யாழ் தீவகப்பகுதியில் மூடியுள்ள கிணறுகள் தொடர்பில் ஐயப்பாடுகள்

இலங்கையின் வடக்கே யாழ் தீவகப்பகுதியாகிய சுருவில் மண்டைதீவு போன்ற மிள்குடியேற்றப் பகுதிகளில் பல கிணறுகள் மூடிக்கிடப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என உள்ளூர் மக்கள் தம்மிடம் தெரிவித்ததாக மகளிர் விவகாரத் துணை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். அந்தக் கிணறுகளில் அப்பிரதேசங்களில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படுபவர்கள் கொலை செய்து புதைக்கப்பட்டிருக்கலாம் எனும் ஐயப்பாடுகள் உள்ளன என்று...

ஐ எஸ் மீதான தாக்குதலுக்கு ஒப்புதல் கோருகிறார் ஒபாமா

இஸ்லாமிய அரசு என்ற அமைப்பின் தீவிரவாதிகளுக்கு எதிராக மூன்று ஆண்டு காலம் இராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை அதிபர் ஒபாமா கோரியுள்ளார். இத்திட்டத்தில் அமெரிக்கப் படைகள் மட்டுப்படுத்தபப்ட்ட வகையில் தரைவழித் தாக்குதல்களை முன்னெடுக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது. தற்போது இராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கட்டுப்படுத்திவரும் ஐ எஸ் அமைப்பு மீது தாக்குதல்களை...

சிவகார்த்திகேயன் படத்தை வாங்கிய முன்னணி நிறுவனம்

தமிழ் சினிமாவில் தொட்டதெல்லாம் வெற்றியாக இன்று உச்சத்தில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் விரைவில் திரைக்கு வரும் படம் காக்கிசட்டை. ஆனால், தற்போது இவர் அடுத்து நடிக்கும் படமான ரஜினிமுருகன் படத்திற்கும் தற்போதே வியாபாரம் தொடங்கி விட்டது. இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இதன் தமிழ் நாட்டு வெளியீட்டு உரிமையை ஸ்டுடியோ கிரீன் வாங்கியுள்ளதாக...

எங்களை வாழ வைக்கும் விஜய், அஜித் ரசிகர்களுக்கு ஒரு அட்வைஸ்! – விவேக்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மட்டுமின்றி அதில் கருத்துக்களையும் கூறி அனைவரையும் கவர்ந்தவர் விவேக். இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்து, திரையில் வெற்றி நடைப்போடும் படம் என்னை அறிந்தால். இப்படத்தில் காமெடி குறைவு என்றாலும் இவர் வரும் காட்சிகள் அனைவராலும் ரசிக்கப்படுகிறது. இது குறித்து இவர் கூறுகையில் ‘இன்று சினிமாவை தியேட்டரில் வந்து பார்ப்பவர்கள் என்றால்...

இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு ஆதரவளியோம் – இந்தியா

இலங்கை தொடர்பாக மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட விருக்கின்ற சர்வதேச விசாரணை அறிக்கைக்கு ஆதரவு வழங்காது என்று இந்தியா அறிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கின்ற பேரவையிலேயே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருகின்றது. இலங்கையில் புதிய அரசாங்கம் பதிவியேற்று குறுகிய காலமே சென்றுள்ளது.இந் நிலையில், தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற கால அவகாசம் வழங்கப்பட...

ஏப்ரல் 8ம் தேதி ஐபிஎல் 8 தொடங்குதாம்…

கிரிக்கெட் ரசிகர்களின் பிரியத்துக்குரிய ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் தேதியை ஐபிஎல் நிர்வாகக் குழு அறிவித்துள்ளது. ஏப்ரல் 8ம் தேதி 8வது ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளது. மே 24ம் தேதியுடன் இந்தப் போட்டிகள் முடிவடையும். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் சஞ்சய் படேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், 8வது ஐபிஎல் தொடர் 2015ம் ஆண்டு ஏப்ரல் 8ம்...

கார்த்தி – சுராஜ் படத்துக்காக திருப்பதியில் மொட்டை போட்ட விவேக்

கார்த்தி - சுராஜ் இணையும் புதிய படத்துக்காக திருப்பதி போய் மொட்டை போட்டுத் திரும்பியுள்ளார் நடிகர் விவேக். அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘என்னை அறிந்தால்' படத்தில் விவேக் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். வழக்கமாக ஹீரோ போலீஸ் அதிகாரி என்றால், காமெடியனை கான்ஸ்டபிளாக்கி காமெடி செய்ய வைப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் ஹீரோ அஜீத்த்துக்கு இணையான...

கண்டாவளை பிரதேச செயலரை மாற்றும்படி கோரிக்கை

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.முகுந்தனை மாற்றும்படி நாதன்திட்டம் மற்றும் புன்னைநீராவி மக்கள் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனிடம் புதன்கிழமை (11) கோரிக்கை முன்வைத்தனர். தங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் வீட்டுத்திட்டங்களை வழங்குமாறு இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் முடிவிலே பொதுமக்கள் இந்தக்கோரிக்கையை முன்வைத்தனர். எல்லா விதத்திலும் தங்களை அவர் புறக்கணிப்பதாகவும், அரசியல்வாதிகளுக்கு பின்னால்...

வாழைக்குலை வியாபாரி வீதியில் விழுந்து மரணம்

சாவகச்சேரி சந்தையில் வாழைக்குலை வியாபாரம் செய்யும் வியாபாரியொருவர், புதன்கிழமை (11) சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக திடீரென விழுந்து மரணமாகினார். கைதடி மத்தி குமரன் நகரைச் சேர்ந்த சி.சின்னத்தம்பி (வயது 57) என்பவரே இவ்வாறு மரணமடைந்தார். வீட்டிலிருந்து வாழைக்குலைகளை மோட்டார் சைக்கிளில் கட்டிக்கொண்டு சந்தைக்குச் சென்ற இவர், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக கீழே வீழ்ந்து...

யோஷித்த ராஜபக்ஷ, டுபாய் பறந்தார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான கடற்படை லெப்டினன் யோஷித்த ராஜபக்ஷ, டுபாய்க்கு பயணமானார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகவே டுபாய்நோக்கி பயணமாகியுள்ளார். சாதாரண பயணிகள் பயன்படுத்தும் வழியூடாகவே அவர் நேற்றிரவு, எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ரி.கே653 என்ற விமானத்திலேயே அவர் பயணம் செய்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

லஞ்ச, ஊழல்கள் ஒழிப்புப் பணிப்பாளராக டில்ருக்‌ஷி டயஸ் நியமனம்

லஞ்ச ஊழல்கள் ஒழிப்பு ஆணைக்குழவின் பணிப்பாளராக டில்ருக்‌ஷி டயஸ் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று புதன்கிழமை காலை வழங்கினார்.
Loading posts...

All posts loaded

No more posts