Ad Widget

இராணுவத்தினரின் ஆதரவுடன் நேற்று நில அளவீட்டுப் பணி

வலி.வடக்கில் இருந்து இடம் பெயர்ந்து சுன்னாகம் நலன்புரி முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு அந்த இடத்திலேயே காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் இராணுவத்தினரின் உதவியுடன் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது முகாம் அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்வதற்கு மக்கள் காட்டிய எதிர்ப்பையும் மீறி தனியார் நில அளவையாளர் மூலம் சபாபதிப் பிள்ளை மற்றும் கண்ணகி நலன்புரி நிலையக் காணிகள் நேற்று அளவீடு செய்யப்பட்டன.

இராணுவத்தினரின் பாதுகாப்பு மற்றும் உதவியுடன் இந்தப் பணி பேற்கொள்ளப்பட்டது என மக்கள் தெரிவித்தனர்.

Related Posts