Ad Widget

பாடசாலை அதிபர் மிரட்டினார் என்று வட மாகாண சபை உறுப்பினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

தன்னை பாடசாலை அதிபர் ஒருவர் தொலைபேசியூடாக மிரட்டினார் என்று வடமாகாண சபை உறுப்பினரும் கல்வி அமைச்சின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமாகிய இ.இந்திரராஜா வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

indirarasa 659548788

இது தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் இ.இந்திராஜா தெரிவிக்கையில், வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு என உலக உணவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட சத்துணவில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன.

இப் பாடசாலையின் முன்னாள் அதிபரே மோசடிகளில் ஈடுபட்டார் என்ற சந்தேகம் ஏற்பட்ட நிலையில் குறித்த விடயம் எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இது குறித்து நான் கல்வி அமைச்சின் கவனத்திற்கும் சில அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தேன்.

இவ்வாறு கொண்டு வரப்பட்மை தொடர்பிலேயே குறித்த அதிபர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து நான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் கல்வி அமைச்சருக்கும் தெரியப்படுத்தியுள்ளேன்.- என்றார்.

Related Posts