Ad Widget

பாகிஸ்தானிலிருந்து அனைத்து தீவிரவாத அமைப்புக்களும் அழிக்கப்படும் – பிரதமர் உறுதி

பாகிஸ்தானில் இருந்து இயங்கும் அனைத்து தீவிரவாத அமைப்புக்களும் அழிக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். சீன உயர்மட்ட குழுவுடனான சந்திப்பின்போது ஷெரீப் கூறியதாக பாகிஸ்தான் செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் தெரிவித்த பிரதமர் பாகிஸ்தான் மண்ணில் இருந்து இயங்கும் தீவிரவாத அனைத்து அமைப்புகளும் அழிக்கப்படும். அவற்றின் கொள்கை எத்தகையதாக இருந்தாலும்...

நாட்டின் அனைத்து பாகங்களிலும் மழை பெய்வதற்கான சாத்தியம்?

காலநிலை மாற்றத்தினால் இன்று (22) நாட்டின் அனைத்து பாகங்களிலும் மழைவீழ்ச்சியினளவு அதிகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது எனவும் வடக்கு மத்திய வடமத்திய கிழக்கு ஊவா மாகாணங்களில் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் நிலவுவதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் மற்றும் பல பிரதேசங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய...
Ad Widget

தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கான உத்தியோகபூர்வ தபால் மூல வாக்களிப்பு நாளையும்,நாளை மறுதினமும் நடாத்தப்படவுள்ளன. அஞ்சல்மூல வாக்காளர்கள் தமது வாக்குகளை சுதந்திரமாகவும் இரகசியமாகவும் அடையாளமிடுவதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப் பிரிய தெரிவித்துள்ளார். வாக்காளர்களை அடையாள மிட்டுள்ள சின்னம் பிறர் அறியாதவகையில் பாதுகாக்கப்படும். அஞ்சல் வாக்கு அடையாளமிடும் இடமொன்றில் வாக்களிப்பதற்கான தடை...

இரணைமடுகுளத்தின் 11 வான் கதவுகள் திறப்பு

பெய்துவரும் கடும்மழை காரணமாக இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் நாளுக்குநாள் உயர்ந்துவந்த நிலையில் இன்று திங்கட்கிழமை (22.12.2014) காலை 31அடி 4 அங்குலத்தை எட்டியது. இதையடுத்து அணைக்கட்டுகளின் பாதுகாப்புக்கருதி, குளத்தின் 11 வான்கதவுகளும் காலை 8.30 மணியளவில் பகுதியளவில் திறக்கப்பட்டுள்ளன. நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளினால் இரணைமடு கனகாம்பிகை ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், வடமாகாண விவசாய...

தமிழர் விடுதலைக் கூட்டணி மைத்திரிக்கு ஆதரவு என அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் சகல மக்களும் பொது வேட்பாளராகிய மைத்திரிபால சிறிசேனவுக்கு பூரண ஆதரவு வழங்க வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ். மாவட்டக்கிளை ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது என்று அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செயலாளர் நாயகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கம் மாறியபோதும் எந்த அரசும் தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்காத...

மைத்திரி 30 இல், மஹிந்த 2 இல் வடக்கில் தீவிர தேர்தல் பிரசாரம்!

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கும் இத்தருணத்தில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, அரச தரப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் வடக்கில் தீவிர பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர். ஏற்கனவே கடந்த 18ஆம் திகதி வியாழக்கிழமை முல்லைத்தீவில் வடக்குக்கான தனது முதலாவது பிரசாரத்தை ஆரம்பித்துவைத்த மஹிந்த அன்று மாலை கிளிநொச்சியிலும் பிரசாரத்தை நடத்திவிட்டு கிழக்கு மாகாணம் சென்றிருந்தார்...

ராதாமோகனின் அடுத்த படத்தின் தலைப்பு உப்பு கருவாடு

‘மொழி’, ‘அபியும் நானும்’ ஆகிய படங்களை இயக்கியவர் ராதா மோகன். வித்தியாசமான கதையும் திரைக்கதையும் கொண்டு வெளியான இவ்விரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. வணிக ரீதியிலும் வெற்றியடைந்தது. அதன் பிறகு நாகார்ஜூனாவை வைத்து ‘பயணம்’ படத்தை இயக்கினார். இவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘கௌரவம்’ படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது....

பாலசந்தர் உடல்நிலையில் முன்னேற்றம் – நினைவு திரும்பியதால் குடும்பத்தார் மகிழ்ச்சி

திடீர் உடல்நலக் கோளாறு காரணமாக பாலசந்தர் சென்ற வாரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயோதிகம் மற்றும் ஜுரம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிப்பதாகவும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. பாலசந்தரை சந்தித்த ரஜினியும், அவர் நலமாக இருப்பதாக தெரிவித்தார். ஆனால் இரண்டு தினங்கள் கழிந்து நிலைமை மோசமானது. சிறுநீரகக் கோளாறு காரணமாக...

திருநெல்வேலியில் இளைஞர் குழு அட்டகாசம்

திருநெல்வேலி, ஆடியபாதம் வீதியில் பிரதம செயலாளர் அலுவலகத்துக்கு அருகிலுள்ள வீடுகளின் மீது சனிக்கிழமை (20) இரவு கற்களை எறிந்தும் கதவுகளை காலால் உதைத்தும் இளைஞர் குழுவொன்று அட்டகாசம் செய்ததாக அப்பகுதி மக்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அயலவர்கள் ஒன்றுகூடிய போது, அட்டகாசம் செய்த இளைஞர்கள் அவ்விடத்தில் இருந்த ஓடிவிட்டனர். 119 இலக்கத்துக்கும் கோப்பாய்...

ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும் – ஜே.வி.பி

நாட்டில் தற்போது உள்ள நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை முடிவு செய்யும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்காக மக்கள் அனைவரும் ஜனாதிபதிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பிரசார செயலாளருமான விஜித ஹேரத் தெரிவித்தார். எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில்...

எதிர்ப்பு அரசியலால் சாதிக்க முடியாது; பாரதிராஜாவிடம் டக்ளஸ் விளக்கம்

எதிர்ப்பரசியலால் எதையும் செய்ய முடியாது. இணக்க அரசியலினூடாகவே எதையும் சாதிக்க முடியுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தென்னிந்திய திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவிடம் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இயக்குநர் பாராதிராஜாவை, யாழ்ப்பாணம், டில்கோ விடுதியில் சந்தித்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்ட விளக்களத்தை வழங்கினார். அங்கு தொடர்ந்தும்...

அணை உடைப்பெடுப்பு: மூதூர் மூழ்கும் அபாயம்

வெள்ளப் பாதுகாப்பு அணை உடைப் பெடுத்துள்ளதால் மூதூர் பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சேருவில பிரதேசத்திலுள்ள 'வெள்ளம் தாங்கி' என்னும் பகுதியிலேயே பாதுகாப்பு அணை நேற்றிரவு அல்லது இன்று அதிகாலைவேளையில் உடைப்பெடுத்துள்ளதாக தெரிய வருகிறது. 1958ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்குப் பின்பு மூதூர் மற்றும் சேருவில பிரதேசத்தின் சில பகுதிகளை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும்...

யாழ்.போதனா வைத்தியசாலை சிற்றூழியர் மீது வாள் வெட்டு

யாழ்.போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரி( என்.ரி.எஸ்)யில் பணிபுரியும் சிற்றூழியர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சைப்பரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த நிஷாந்தினி( வயது 24) யாழ். போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சிற்றூழியராக கடமையாற்றி வருகின்றார். இன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டவரை யாழ். நகர்ப்பகுதியில்...

வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சால் மாங்குளத்தில் கோழிக்குஞ்சுகள் விநியோகம்

வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை (20.12.2014) மாங்குளத்தில் கோழிக்குஞ்சுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து வடக்கின் ஐந்து மாவட்டங்களுக்கும் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு...

இயக்குநர் பாரதிராஜா வடக்கு முதல்வர் சந்திப்பு

தமிழ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்திருக்கும் இயக்குநர் பாரதிராஜா இன்று ஞாயிற்றுக்கிழமை (21.12.2014) மரியாதை நிமித்தமாக வடக்கு முதல்வர் க.வி. விக்னேஸ்வரன் அவர்களை அவரது வாசஸ்தலத்துக்குச் சென்று சந்தித்திருந்தார். இந்தச் சந்திப்பில் வடக்கு முதல்வருடன் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனும் கலந்து கொண்டிருந்தார்.

வடக்கு வரும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெறவேண்டும்!

வட பகுதியில் தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக வருகின்ற வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெறவேண்டும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய இந்த அறிவிப்பை வெளியிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் வருமாறு: வட பகுதிக்கு வெளிநாட்டவர்கள் வருவதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நாங்கள் நீக்கவில்லை. பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி...

வ.மா. முதலமைச்சரின் வங்கிக் கணக்கைத் திறக்க ஆளுநர் அனுமதி மறுப்பு

வடமாகாண முதலமைச்சரின் பேரில் ஒரு உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கைத் திறக்கக் கூட ஆளுநர் அனுமதிக்கின்றார் இல்லை. ஆனால் தம் பெயரில் ஆளுநர் நம்பிக்கை பொறுப்பு வங்கிக் கணக்கு என்று ஒன்றை வைத்திருந்து அதைச் செயல்படுத்தி வருகின்றார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முழங்காவிலில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு...

சண்டிலிப்பாயில் சடலம் மீட்பு

மானிப்பாய், கட்டுடை காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்று தினங்களுக்கு முன்னர் மானிப்பாயைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமற்போயிருந்தார் என்றும், அந்த இளைஞரின் சடலமே மீட்கப்பட்டிருக்கலாம் என்றும் பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இரணைமடு நீர் மட்டம் அதிகரிப்பு

இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் 30 அடியை எட்டியுள்ளது. 31 அடியை எட்டுமாக இருந்தால் வான் கதவுகள் திறக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிலைமையைக் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் நேற்று மாலை நேரில் சென்று ஆராய்ந்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக நீர் வரத்து...

தமிழருக்கு ஏமாற்றம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அவர்களின் அன்றாடப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலும் விஞ்ஞாபனத் தில் குறிப்பிடாதமை ஏமாற்ற மளிப்பதாகவே அமைந்துள்ளது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான க.சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இடம் பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும்...
Loading posts...

All posts loaded

No more posts