Ad Widget

இலங்கை அணி தோல்வி : வாள்வெட்டில் இருவர் படுகாயம்!

இலங்கை அணியின் தோல்வியை அடுத்து கிளிநொச்சியின் முழங்காவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.

நேற்றுப் புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்க்பட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-

உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில் நேற்று நடந்த இலங்கை, தென்னாபிரிக்கா ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வி அடைந்தது.

இதையடுத்து தென்னாபிரிக்க ரசிகர்கள் இலங்கை அணி ரசிகர்களை கேலி செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து இரு அணிகளின் ரசிகர்களுக்கும் இடையே வாள்வெட்டு இடம்பெற்றது.

இதில் ரஜினிகாந், விஜயகாந்த் ஆகியோர் படுகாயமடைந்தனர். முழங்காவில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இவர்கள் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். மேலதிக விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts