மஹிந்த, கெஹலியவிடம் இன்று மீண்டும் விசாரணை!

சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரிடம் பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு மீண்டும் தனது விசாரணைகளை இன்றும், நாளையும் மேற்கொள்ளவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்ட...

வடக்கு, கிழக்கில் வீடுகளை இராணுவம் அழிக்கவில்லையாம்! முழுப்பொறுப்பும் புலிகளுக்குத்தானாம்!!

"வடக்கு, கிழக்கு இராணுவத்தினரால் வீடுகள் அழிக்கப்படவில்லை. அவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்'' என்று சபையில் தெரிவித்த வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ, புலிகளால்தான் வீடுகள் அழிக்கப்பட்டன. அவர்கள்தான் இதற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.கூறினார். வடக்கு, கிழக்கில் இன, மத, கட்சி பேதங்களைக் கடந்து மீள்குடியேற்ற அமைச்சுடன் இணைந்து வீடமைப்புத் திட்டம் 2016...
Ad Widget

பாலச்சந்திரனுடன் நின்ற என் மகனைக் காணவில்லை! ஆணைக்குழு முன் தந்தையார் கதறல்!!

"வன்னியில் 2009ஆம் ஆண்டு இறுதிப் போர் நடைபெற்றபோது எனது மகன் ஐங்கரன், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனுடன் நின்றார் எனவும், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி பாலச்சந்திரனுடன் அவரை இராணுவத்தினர் கைதுசெய்தனர் என்றும் நேரில் கண்டவர்கள் என்னிடம் கூறினர். ஆனால், பாலச்சந்திரன் இராணுவத்தினரால் சுட்டுக்...

திருவெம்பாவை இன்று ஆரம்பம்

திருவெம்பாவை திருப்பூஜை இன்று (17) அதிகாலை ஆரம்பமாகிறது.தட்சிணாயத்தின் இறுதி மாதமான மார்கழி மாதத்து வளர்பிறை ஆறாம் நாள் இத்திருவெம்பாவை பூஜை ஆரம்பமாகிறது. இன்று தொடக்கம் தொடர்ந்து 10 நாட்களுக்கு சிவாலயங்களில் அதிகாலையில் பக்திப்பூர்வமாக திருப்பள்ளியெழுச்சி பூஜைகள் நடைபெறுவதுடன் திருவெம்பா பாடி சிவனை வணங்குகின்றனர்.

தமிழ் அரசியல் கைதிகள் 17 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 17 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்யவுள்ளதாக, பொலிசார் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று அறிவித்துள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றில், இந்தக் குற்றப் பத்திரிகைகளை, சட்ட மா அதிபர் தாக்கல் செய்ய உள்ளதாக பயங்கரவாத தடுப்பு...

பெண்கள் போராட்டம் எதிரொலி: கனடாவிலிருந்து சென்னை திரும்புவதை ரத்து செய்த அனிருத்

சமீபத்தில் கனடாவில் இசை நிகழ்ச்சி நடத்த அங்குள்ள தமிழர்கள் அனிருத்தை அழைத்து இருந்தனர். இதற்காக தனது இசைக்குழுவினருடன் ஒரு வாரத்துக்கு முன்பு கனடா சென்று இருந்தார். அப்போதுதான் ஆபாச பாடல் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இசை நிகழ்ச்சியை முடித்துவிட்டு நேற்று அவர் சென்னை திரும்ப விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்...

எந்திரன் 2: ரஜினியுடன் மோதும் அக்‌ஷய் குமார்

ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக வெளிவந்த ‘எந்திரன்’ படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பையும், வசூலில் பெரிய சாதனையையும் படைத்தது. தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இந்த படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். ஐஸ்வர்யா ராய், கருணாஸ், சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க ஷங்கர் மும்முரமாக களமிறங்கினார்....

விக்ரமின் அடுத்த அதிரடி ஆரம்பம்

விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘10 எண்றதுக்குள்ள’. இதில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். இப்படத்தை விஜய் மில்டன் இயக்கியிருந்தார். காதல் கலந்த ஆக்‌ஷன் படமான இது ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பை பெற்றது. இப்படத்திற்குப் பிறகு ‘அரிமா நம்பி’ படத்தின் இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்திற்கான பூஜை நேற்று...

கனடா உயர்ஸ்தானிகர் – யாழ் .அரசாங்க அதிபர் சந்திப்பு

வலி.வடக்கில் விரைவில் மீள்குடியேற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் கனடா உயர்ஸ்தானிகருக்கு இன்று புதன்கிழமை தெரிவித்தார். கனடா உயர்ஸ்தானிகர் வைட்டிங் யாழிற்கு மேற்கொண்டுள்ள விஜயத்தின் போது ,யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை யாழ்.மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். அந்தச் சந்திப்பின் போதே, யாழ். மாவட்ட...

மகேஸ்வரி நிதிய விவகாரம் குறித்து மீண்டும் விசாரணை!

யாழ்.மாவட்ட பாரவூர்தி சங்கத்துக்கு மகேஸ்வரி நிதியத்தால் வழங்கப்பட வேண்டிய சுமார் ஒரு கோடி ரூபா பணம் சம்பந்தமான விசாரணைகள் மீண்டும் கோப்பாய் பொலிஸாரினாலும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய புலனாய்வுத்துறையினராலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என சங்கத்தின் பணிப்பாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மகேஸ்வரி நிதியம் தமக்கு தரவேண்டிய பணத்தை தரமறுப்பதாகத் தெரிவித்து லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததுடன்...

ஜனாதிபதியின் உயிருக்கு மீண்டும் அச்சுறுத்தல் ? ‪துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் இருந்த ஒருவரை விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். வத்திக்கானுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வசே விமான நிலையத்தை இன்றுக்காலை வந்தடைந்த போதே, இவ்வாறு இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

‘ஆணைக்குழுவிடம் கோரிய நிதி கிடைக்கவில்லை’ – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

வட மாகாண சபையின் 2016ஆம் ஆண்டு வரவு– செலவுத்திட்டத்துக்கென நிதி ஆணைக்குழுவிடம் கோரிய நிதி ஒதுக்கீட்டில் 40சதவீதம் மாத்திரமே கிடைத்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் 2016ஆம் ஆண்டுக்கான நிதிச் சட்டமூலத்தை சபையில் செவ்வாய்க்கிழமை(15) சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், மீண்டெழும் செலவினத்துக்காக 20,479 மில்லியன்...

வட மாகாணத்தில் எல்லைகள் சுருங்கும் அபாயம்

வட மாகாணத்தின் எல்லைப் பகுதிகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாக தமிழ் மக்களை மாகாணத்தின் எல்லைகளை நோக்கி நகர்த்த வேண்டும். இல்லையேல் தமிழ் மக்களை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் எல்லைகளால் வட மாகாணத்தின் எல்லைகள் சுருங்கும் அபாயம் ஏற்படும் என வடமாகாண சபை உறுப்பினர் க.சிவநேசன் தெரிவித்தார். வட மாகாண சபையின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்...

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் எதிர்வரும் 30ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சந்திரகாந்தன் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் உத்தரவிட்டார். தமிழ் தேசியக்...

தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்ப விரும்புவோருக்கு ஒரு நற்செய்தி

தமிழகத்தில் இருந்து நாடு திரும்ப விரும்பும் இலங்கை அகதிகள் அதிகபட்சமாக விமானத்தின் மூலம் கொண்டுவர அனுமதிக்கப்படும் பொருட்களின் அளவு அதிகரிக்கப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவர் நிலையம் இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொண்ட கலந்துரையாடலை அடுத்து இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை 40 கிலோகிராம் நிறையுடைய பொருட்களை மாத்திரமே விமானத்தின்...

வடக்கு மாகாணசபையால் இயற்கைப் பேரிடர் தணிப்புத் தினம் பிரகடனம்

வடமாகாண இயற்கைப் பேரிடர் தணிப்புத் தினமாக டிசம்பர் 26ஆம் திகதியை வடக்கு மாகாணசபை பிரகடனப்படுத்தி உள்ளது. வடக்கு மாகாணசபையின் 41ஆவது அமர்வின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (16.12.2015) வடக்கு சுற்றாடல் அமைச்சர் இது தொடர்பான பிரேரணையை முன்மொழிந்து உரையாற்றியிருந்தார். அவர் தனது உரையில், இயற்கையின் சீற்றங்கள் புதியன அல்ல. பூமியில் வாழ்கின்ற உயிரினங்கள் பூமியில்...

ஆஸ்திரேலியாவின் பழங்குடிகள் தமிழர்களா ?

ஆங்கிலேயர் குடியேறுவதற்கு முன்பே, ஆஸ்திரேலியாவில் தமிழர் குடியேறினர் என்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. நியூசிலாந்து பழங்குடிகளான மவோரி மக்கள் மத்தியில் 19-ஆம் நூற்றாண்டில் ஒரு வெங்கல மணியை ஆங்கிலேயர் கண்டெடுத்தனர். அதை அங்குள்ள அரும்பொருட்காட்சிக் கூடத்தில் வைத்துள்ளனர். அம்மணியின் மீதுள்ள வாசகம், 15-ஆம் நூற்றாண்டுத் தமிழில் எழுதப்பட்டுள்ளது. அது பின் வருமாறு : “முகையதீன் வக்குசு உடைய...

கெய்ல் மீண்டும் டெஸ் போட்டிக்கு

மேற்­கிந்­தியத் தீவுகள் அணியின் அதி­ரடி ஆட்­டக்­காரர் கிறிஸ் கெய்ல் இது­வரை 103 டெஸ்ட் போட்­டி­களில் விளை­யாடி 15 சதங்கள், 37 அரை சதங்­க­ளுடன் 7214 ஓட்­டங்­களைப் பெற்­றுள்ளார். இதில் ஒரு போட்­டியில் அதி­க­பட்­ச­மாக 333 ஓட்­டங்கள் குவித்­துள்ளார். இவர் தனது முதுகுப் பகு­தியில் செய்து கொண்ட அறுவை சிகிச்சை கார­ண­மாக டெஸ்ட் போட்­டிகளில் விளை­யா­டாமல் இருந்தார்....

வித்தியா கொலை குறித்த விசேட நீதிமன்றத்தை நிறுவ முடியவில்லை! கைவிரித்தது அரசாங்கம்

புங்குடுதீவு மாணவி வித்தியா மீதான பாலியல் வல்லுறவு மற்றும் படுகொலையின் பின்னர் இவ்வாறான வழக்குகளை விசாரிப்பதற்கென தனியான விசேட நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும் அதனை நிறுவ முடியாத நிலைமை காணப்படுவதாக மகளிர் – சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்தார். பாராளுமன்றத்தின் நேற்று முன் தினம்...

வெள்ளைக்கொடி படுகொலைகளை அறிந்திருந்தும் சரணடைந்தார் கணவன்! _ விஜிந்தனின் மனைவி

விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டதை அறிந்திருந்த நிலையிலேயே எனது கணவன் படையினரிடம் சரணடைந்தார். என்னைப்போல் பலர் தங்கள் கணவனை, பிள்ளையை ஒப்படைத்தார்கள். இப்போ அவர்கள் காணாமல்போய் விட்டார்கள் என கூறுவதை நாம் ஒத்துக்கொள்ள முடியாது. என்று விடுதலைப் புலிகளின் அரசியல் நிர்வாகத்துறை பொறுப்பாளர் விஜிந்தனின் மனைவி சாட்சியம் அளித்தார். காணாமல்போனவர்களை...
Loading posts...

All posts loaded

No more posts