Ad Widget

எந்திரன் 2: ரஜினியுடன் மோதும் அக்‌ஷய் குமார்

ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக வெளிவந்த ‘எந்திரன்’ படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பையும், வசூலில் பெரிய சாதனையையும் படைத்தது. தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இந்த படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். ஐஸ்வர்யா ராய், கருணாஸ், சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

Grand-launch-for-Enthiran-2-happened-today-1-696x465

இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க ஷங்கர் மும்முரமாக களமிறங்கினார். முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்தை மிக அதிக பட்ஜெட்டில் உருவாக்க முடிவு செய்தார். லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

ரஜினியின் பிறந்தநாளன்று இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில், ஒருசில காரணங்களால் அன்று படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனது.

இதையடுத்து நேற்று இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார்கள். எந்திரன்-2 கதாநாயகியாக எமி ஜாக்சன் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், இப்படத்தில் வில்லன் வேடத்துக்கு அர்னால்டு தேர்வாகியிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

ஒளிப்பதிவு நீரவ் ஷா, கலை இயக்கம் முத்துராஜ், விஷ்வல் எபெக்ட் மேற்பார்வையாளர் ஸ்ரீனிவாஷ் மோகன். வசனம் எழுத்தாளர் ஜெயமோகன், ஒலி வடிவமைப்பு ரசூல் பூக்குட்டி, படத்தொகுப்பை ஆண்டனி என இந்தியாவின் மிகச் சிறந்த கலைஞர்கள் ஒன்று சேர்ந்து எந்திரன் 2 படத்தில் பணியாற்றவுள்ளனர்.

3டி தொழில் நுட்பத்தில் உருவாகும் இந்த படத்திற்கு விஷ்வல் எபெக்ட் பணிகளை ஜுராசிக் பார்க், அயர்ன் மேன், அவென்ஜர்ஸ் போன்ற திரைப்படங்களில் பணியாற்றிய உலக நம்பர் 1 அனிமேட்ரானிக்ஸ் நிறுவனமான லெகஸி எபெக்ட்ஸ் நிறுவனம் செய்கிறது. சண்டை காட்சிகளை டிரான்ஸ்பார்மர்ஸ் புகழ் கென்னி பேட்ஸ் வடிவமைக்கவுள்ளார்.

Related Posts