சுகயீனம் காரணமாகவே மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை- வடக்கு முதல்வர்

தனக்கு சுகயீனம் ஏற்பட்டமையால் கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற 32ஆவது முதலமைச்சர் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அரசியல் காரணங்களுக்காக நான் கலந்துகொள்ளவில்லை என்பது முற்றுமுழுதாக பொய்யெனவும், சுகயீனம் மாத்திரமே காரணம் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். 32ஆவது முதலமைச்சர் மாநாடு கடந்த 21ஆம் திகதி காலி ஹிக்கா ட்ரான்ஸ் ஹோட்டலில் ஜனாதிபதி...

65ஆயிரம் வீட்டுத்திட்டத்தை சம்பந்தனால் நிறுத்த முடியாதா?

'வடக்கு, கிழக்கில் 65ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் கட்டப்படும் வீடுகள், வடக்குக்கு பொருத்தமில்லை என்பதை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிவித்து அதனை நிறுத்த முடியும் தானே, பின்னர் ஏன் வீணாக வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றுகின்றீர்கள்?' என வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் வை.தவநாதன் ஆளுங்கட்சி உறுப்பினர்களைப் பார்த்து கேள்வியெழுப்பினார். வடமாகாண சபையின்...
Ad Widget

யாழில் விடுமுறை விடுதி திறப்பு விழா

பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சினால் யாழ்ப்பாணத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள விடுமுறை விடுதி இன்று(25) திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ் அல்லைப்பிட்டி குறிகட்டுவன் வீதியில் அமைக்கப்பட்டுள்ள 25 அறைகளுடன் சகல வசதிகளையும் உள்ளடக்கிய இக்கட்டடத்தை பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார உத்தியோகபூர்வமாக இன்று(25) திறந்து வைக்கவுள்ளார். இந்நிகழ்வில் பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் பிரதி அமைச்சர்...

க.பொ.த பெறுபேறு மீளாய்வுக்கு ஏப்.20 வரை விண்ணப்பிக்கலாம்

2015ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வரை விண்ணப்பிக்க பரீட்சைத் திணைக்களம் அவகாசம் வழங்கியுள்ளது. பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபர்கள் ஊடாக அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவித்துள்ள திணைக்களம் தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான மாதிரி விண்ணப்பப்படிவத்தை விரைவில் ஊடகங்களினூடாக வௌியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இன்று பெரிய வௌ்ளி!

புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி (Good Friday) என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறித்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். அவ்வகையில் இன்று (25) உலகளாவிய ரீதியில் அனைத்து கிறிஸ்தவர்களாலும் பெரிய வௌ்ளி தினம் அல்லது புனித வௌ்ளி தினம்...

டக்ளஸ் மீதான வழக்கு ஒத்திவைப்பு!

பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக சென்னையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 1986-ம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் நடைபெற்ற வழக்கறிஞர் திருநாவுக்கரசு கொலை வழக்கில், குற்றவாளியாக டக்ளஸ் தேவானந்தா சேர்க்கப்பட்டுள்ளார். இவ்வழக்கு விசாரணைக்காக 1990-ம் ஆண்டு ஜூலை 18-ம் திகதி வரை நீதிமன்றத்தில் ஆஜரான அவர் பின்னர் ஆஜராகவில்லை. இதைத்...

65 ஆயிரம் வீட்டுத் திட்டத்திற்கு எதிராக வடமாகாண சபையில் அவசர பிரேரணை நிறைவேற்றம்

வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள் அமைக்கும் வீட்டுத் திட்டத்தை வடமாகாண சபையுடன் கலந்தாலோசித்த பின்னர் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், அதுவரையில் அந்த வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைக் கோருகின்ற அவசர பிரேரணையொன்று வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில்...

செய்தியாளர் எழுப்பிய கேள்வியால் கோபமுற்ற டோனி

வங்காளதேச அணியை வென்ற பின் செய்தியாளர்கள் சந்திப்புக்கு புன்னகையுடன் வந்த டோனியிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி ஆச்சரியத்துடன் ஆத்திரத்தையும் கிளப்பும் வகையில் அமைந்தது. நேற்று நடந்த போட்டியில், அதிக ரன் விகிதத்துடன், அரையிறுதி வாய்ப்பினை பிரகாசிக்க செய்யும் வகையில் இந்திய அணி விளையாடி இருக்க வேண்டும் என்பதை குறிக்கும் வகையில், செய்தியாளர் ஒருவர், இந்த முடிவில்...

வெற்றி நெருக்கடியில் 4 அணிகள்! வெற்றி பெறும் அணிகள் எவை??

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று பாகிஸ்தான்–ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ்–தென்ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. 6–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்–10 சுற்று விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) இரண்டு முக்கியமான லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. குரூப்2 சுற்றில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி தனது கடைசி லீக்கில் ஆஸ்திரேலியாவுடன்...

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் ஷேன் வாட்சன்

இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய அணியின் ‘ஆல்–ரவுண்டர்’ ஷேன் வாட்சன் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்–ரவுண்டரான ஷேன் வாட்சன் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரன ஆஷஸ் தொடருடன் டெஸ்ட் போட்டியில் இருந்து விடைபெற்றார்....

இராணுவக் குடியிருப்புக்கு வடமாகாண சபையில் எதிர்ப்பு

வவுனியாவில் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படவுள்ள இராணுவக் குடியிருப்புக்கு வடமாகாண சபையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 48 ஆவது அமர்வு கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இதன்போது, ஜனாதிபதியால் எதிர்வரும் 3ஆம் திகதி வவுனியாவில் திறந்து வைக்கப்படவுள்ள இரணுவ குடியிருப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர்கள் சபையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த...

பட்டதாரிகள் அனைவருக்கும் தொழில் வாய்ப்பு

நாட்டில் உள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பைப் பெற்றுத்தர அரசு இணங்கியுள்ளதாக வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், தொழில்வாய்ப்பைக் கோரி விண்ணப்பிக்கும் பட்டதாரிகளின் வயது எல்லை 45ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருப்பதாக இந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்ட குழு இதற்கான அறிக்கையினை சமர்ப்பித்திருப்பதாகவும் பட்டதாரிகள்...

மாணவியை கடத்தியவர்களுக்கு பிணை!

தனியார் கல்வி நிலையத்துக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியை செவ்வாய்க்கிழமை (22) கடத்த முற்பட்ட இரண்டு சந்தேகநபர்களையும் தலா 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் செல்ல, மல்லாகம் மாவட்ட நீதிவான் ஏ.யூட்சன் புதன்கிழமை (23) அனுமதியளித்தார். மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார். குறித்த...

சுகாதார ஊழியர்கள் வடமாகாண முதலமைச்சரை சந்தித்தனர்

சுகாதார தொண்டர்களுக்கான நிரந்தர நியமனம் பெற்றுத்தர வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றோம். ஆனால், அதில் பல தடைகள் இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். அண்மைக்காலமாக நிரந்தர நியமனம் வழங்க கோரி சுகாதார தொண்டர்கள் வடமாகாண சுகாதார அமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக இன்று வியாழக்கிழமை வடமாகாண சபையின்...

இலங்கை அகதிகளை கட்டாயப்படுத்தி அனுப்பக்கூடாது

இலங்கை அகதிகளை அவர்களது விருப்பத்துக்கு மாறாகவும், நீதிமன்ற உத்தரவை மீறியும் இங்கிருந்து கட்டாயப்படுத்தி இலங்கைக்கு அனுப்பக்கூடாது என, தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது அரசியல் களம் தெளிவாகவில்லை. தற்போது அமைந்துள்ள கூட்டணிகள் தேர்தல் நேரத்தில்...

பொலிசாரையும் விட்டுவைக்காத Google Street View

கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள வீதி பார்வை (Street View) இனைப் பயன்படுத்தி லஞ்சம் வாங்கிய பொலிசாரை பொதுமக்கள் கண்டுபிடித்துள்ள சுவாரசியமொன்று நடைபெற்றுள்ளது. குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இலங்கையில் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள Street View வசதியைப் பயன்படுத்தி பன்னல பிரதேச பொதுமக்கள் தங்கள் பிரதேசத்தைப் பார்வையிட்டுள்ளனர். இதன்போது மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவரிடம்...

பிரதமர் ரணிலுக்கு இன்று பிறந்தநாள்

லேக் நிறுவனத்தை ஸ்தாபித்து இலங்கையில் ஊடகத்துறைக்கு அடித்தளமிட்ட எஸ்மண்ட் விக்கிரமசிங்க மற்றும் நாலனி விக்கிரமசிங்க ஆகியோருக்கு மகனாக 1949ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிறந்தார். ரோயல் கல்லூரியில் ஆரம்பக் கல்வியை நிறைவு செய்த அவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வியைப் பூர்த்தி செய்திருந்தார். பின்னர் சட்டக் கல்லூரி மூலம் சட்டத்தரணியாக...

வடக்கில் தேசிய பாதுகாப்புக்கு அவசியமான காணிகள் விடுவிக்கப்படாது

வடக்கில் தேசிய பாதுகாப்புக்கு அவசியமான காணிகள் விடுவிக்கப்படாது என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் யாழ்ப்பாணத்தில் சுமார் 3700ற்கும் மேற்பட்ட காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மீள் கையளிக்க முடியாத தேசிய பாதுகாப்பின் மர்மஸ்தானங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களுக்கு அதி கூடிய விலை கொடுக்க...

மருந்து பொருட்களின் விபரப்பட்டியல் தமிழிலும் வேண்டும்

மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்களின் விபரபட்டியல் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிலும் அச்சிடப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யுமாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையத்தினால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரண்டு மொழிகளுமே இலங்கையின் ஆட்சி மொழிகளாகவும், தேசிய மற்றும் நிர்வாக மொழிகளாகவும்...

பொலிடிக்கல் த்ரில்லர் படமாக கோ-2

பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ், நிக்கி கல்ராணி, பாலசரவணன் முதலானோர் நடிப்பில் அறிமுக இயக்குனர் சரத் இயக்கியிருக்கும் படம் 'கோ-2'. எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படம் பொலிடிக்கல் த்ரில்லர் படம். குறிப்பாக, அரசியல் கட்சியை கடுமையாக சாடும் இப்படம் கடந்த வருடமே வெளியாகி இருக்க வேண்டிய படம். படத்தில் ஆளும்கட்சியை கடுமையாக தாக்கி காட்சிகளும், வசனங்களும்...
Loading posts...

All posts loaded

No more posts