யாழ்.பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு மிரட்டல்!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தெரிவுக்கான விசேட பேரவை அமர்வு எதிர்வரும் 12 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு அநாமதேயத் தொலைபேசி அழைப்புகள் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரவையின் உறுப்பினர்கள் சிலருக்குத் தெரியாத கைத்தொலைபேசி இலக்கங்களில் இருந்து அழைப்பு மேற்கொள்ளப்பட்டு, நாங்கள் அரச புலனாய்வுச் சேவையில் இருந்து...

யாழ் முச்சக்கர வண்டிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

யாழில் முச்சக்கர வண்டிகளிற்கு டக்சி மீற்றர் பொருத்தப்பட்டு, பொலிஸாரால் ஸ்டிக்கர் ஒட்டப்படுதல் வேண்டும் என யாழ் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் யருஷ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் மேலும் அவ்வாறு செய்யத் தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Ad Widget

முல்லைத்தீவு புதைகுழியில் 13 மனித எச்சங்கள் அடையாளம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த மனிதப்புதைகுழி தொடர்பில் எதிர்வரும் 13 ஆம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றத்தில் அகழ்வுப்பணியுடன் தொடர்புடைய திணைக்களங்கள் மற்றும் அமைப்புக்களுடன் விசேட கலந்துரையாடல் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்தே...

ஆசிரியரின் தாக்குதலுக்கு உள்ளான மாணவி வைத்தியசாலையில் அனுமதி!!

யாழ். வலிகாமம் வலயத்தைச் சேர்ந்த தரம் மூன்றில் கல்வி கற்கும் பாடசாலை மாணவி(08) ஒருவர் ஆசிரியரின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவியின் கையில் ஆசிரியர் பலமாகத் தாக்கியதில் மாணவி கையைத் தூக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார். இந்நிலையில் மாணவியின் நிலையை அறிந்து கொண்ட பாடசாலை நிர்வாகம்...

ரஷ்ய அதிபர் புடினை பார்க்க கண்ணீர் விட்டு கதறியழுத சிறுமி!

ரஷ்ய அதிபர் புடினை காண முடியாமல் கதறியழுத சிறுமியை, அதிபர் மாளிகைக்கு வரவழைத்து புடின் விருந்தளித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள (Dagestan) தாகெஸ்தான் குடியரசுக்கு அதிபர் புடின் சுற்றுப்பயணம் சென்ற போது, அவரை பார்க்க 8 வயது சிறுமி (Raisat Akipova) ரைசாட் அகிபோவா வருகை தந்துள்ளார். இருப்பினும், கடும்...

முல்லைத்தீவில் மனித எச்சங்கள் காணப்படும் பகுதியில் அகழ்வு பணிகள் ஆரம்பம்!!

முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளது என சந்தேகிக்கப்படும் மனித எச்சங்கள் காணப்படுகின்றன பகுதியில் அகழ்வு பணிகள் ஆரம்பம் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளது பெண் போராளிகளது உடல்களாக இருக்கலாம் என சந்தேகப்படும் மனித எச்சங்கள் உடைகள் மீட்கப்பட்ட பகுதியில் வியாழக்கிழமை (06) அகழ்வு பணிகள்...

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் குறித்து அங்கஜன் அறிக்கை!

யாழ். பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தராக வருபவர் பல்கலைக்கழக மற்றும் தமிழ் பாரம்பரியங்களை பாதுகாப்பவராக செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தனிச் சிறப்புள்ளது. எதிர்வரும் 12 ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கான துணைவேந்தர் தெரிவு இடம்பெற...

மன்னார் மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் அதிரடித் தீர்மானம்!!

மன்னார் ‘சதோச’ மனித புதைகுழி அகழ்வு தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை ஒன்றைத் தயாரிக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகச் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார். குறித்த வழங்கானது நேற்ற முன்தினம் (05) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதே இவ்உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி நிரஞ்சன் கருத்துத் தெரிவிக்கையில் ”இந்த புதை குழியில்...

பளையில் கோர விபத்து! பாடசாலை மாணவன் உயிரிழப்பு!!

பளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று மாலை (05.07.2023) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பளை முள்ளையடி பகுதியைச் சேர்ந்த ராஜபாஸ்கரன் யகுசிகன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துவிச்சக்கர வண்டியில் சென்ற குறித்த மாணவன் மீது பட்டா ரக வாகனம் ஒன்று மோதியதில்...

சர்வதேச எல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரஷ்ய விமானம்: அச்சத்தில் உலக நாடுகள்

ரஷ்ய ஜனாதிபதி புடினுடைய அணு ஆயுதக்கட்டுப்பாட்டு விமானம் நேட்டோ எல்லைக்கருகே பறந்தமையினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பாக ஆகாயத்தில் பறந்தபடி ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆணை பிறப்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த விமானம், நேட்டோ எல்லைக்கருகே பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேட்டோ சார்பில் எஸ்தோனியா நாட்டில் நிறுத்தப்பட்டிருந்த பிரித்தானிய விமானப்படை விமானங்கள் இரண்டு சீறிப்பறந்து இந்த ரஷ்ய...

மானிப்பாயில் ஆயுதங்கள் மீட்பு!

மானிப்பாய் பகுதியில் நான்கு துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்குரிய தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உயரப்புலம் அடைக்கலநாயகி தெருவில் உள்ள காணி ஒன்றில் , அதன் உரிமையாளர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை குழி ஒன்றினை தோண்டிய போதே அதனுள் ஆயுதங்கள் காணப்பட்டுள்ளன. அதனை அடுத்து, மானிப்பாய் பொலிஸாருக்கு காணி உரிமையாளர் அறிவித்ததை அடுத்து...

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல்!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல் இன்று புதன்கிழமை மதியம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதேநேரம் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு தேவிபுரம் பிரதேசத்தில் இன்று கரும்புலிகள் நாள் நினைவு தினம் உணர்புபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

விலைக்குறைப்புச் செய்யாத உணவகங்களின் புகைப்படத்தை வெளியிடுங்கள் : அசேல சம்பத்

கொத்துரொட்டி மற்றும் பிரைட் ரைஸின் விலைகளைக் குறைக்காத உணவகங்களின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுமாறு அகில இலங்கை சிற்றுச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஹோட்டல் துறைக்கு மின் கட்டணம் 27 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. மறுபுறம்,...

காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டம்!

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி காணி உரிமையாளர்களினால் இன்று போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டமானது, கேப்பாப்பிலவு இராணுவ முகாமிலிருந்து பேரணியாக ஆரம்பமாகி, கேப்பாப்பிலவு இராணுவ முகாமின் பிரதான நுழைவாயிலை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து காணி உரிமையாளர்களினால் தங்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது காணிகளை...

யாழ் மாவட்ட முச்சக்கர வண்டிகளில் ஏற்படவுள்ள மாற்றம்?

யாழ் மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மானி பொருத்தும் நடவடிக்கைகள் இம்மாதம் நிறைவடையுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தில் இடம்பெற்று கலந்துரையாடலின் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது உள்ள பொருளாதார நிலைமையினால் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்....

உள்ளாடைகளுடன் அலையும் முறிகண்டிப் பொலிஸார்!!

உள்ளாடைகளுடன் முறிகண்டிக் காவலரண் பொலிஸார் அலைவதாகவும், அவர்கள் பாதுகாப்புப் பணியில் முழுமையாக ஈடுபடுவதில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். குறித்த காவல் அரண் மாங்குளம் தலைமை பொலிஸ் நிலையத்தின் கீழ் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகக் கடந்த 2021 ஆம் டிசெம்பர் மாதம் 28 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு மக்கள்...

கொக்குத்தொடுவாயில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட இடத்திற்கு சிரேஷ்ட சட்டத்தரணி இரட்ணவேல் விஜயம்

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட குறித்த இடத்திற்கு சிரேஸ்ட சட்டத்தரணி இரட்ணவேல் 04.07.2023 நேற்றையதினம் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். கடந்த 29.06.2023 அன்று கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலவலர்பிரிவில் மனித எச்சங்கள் சில இனங்காணப்பட்டன. இந் நிலையில் கடந்த 30.06.2023அன்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா நேரடிராகச் சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தார். இந்...

குருந்தூர் மலையில் சர்ச்சையை ஏற்படுத்திய நினைவு கல்வெட்டு!

குருந்தூர் மலையில் பௌத்தாலோகா நற்பணி மன்றத்தின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவு கல்வெட்டு விடயமானது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது. குருந்தூர் மலையில் அமைக்கப்பட்ட விகாரைக்கு அருகில் பாரிய கருங்கல்லினால் மூன்று மொழிகளிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட இந்த நினைவு கல்வெட்டு தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குறிய கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த நினைவு கல்வெட்டில், “வெற்றி உண்டாகட்டும்” என்ற தலைப்பில், “முல்லைத்தீவு...

நள்ளிரவில் இடம்பெற்ற கோர விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரழப்பு!!

இன்று நள்ளிரவில் இடம்பெற்ற கோர விபத்தில் இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வரணி சுட்டிபுரம் பகுதியில் இன்று (05.07.2023) நள்ளிரவு வேளையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் வடமராட்சி தேவரையாளி பகுதியைச் சேர்ந்த புஸ்பராசா ராஜ்குமார் (30) என்ற இளம் குடும்பத்தர் உயிரிழந்துள்ளர். நண்பர் ஒருவரை சாவகச்சேரியில் இறக்கிவிட்டு வடமராட்சி தேவரையாளி பகுதியில் உள்ள தனது...

உக்ரைனின் திடீர் தாக்குதல்: பதிலடி கொடுத்த ரஷ்ய இராணுவம்

ரஷ்ய தலைநகா் மொஸ்கோவில் உக்ரைன் இராணுவம் நடத்திய ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதலை ரஷ்ய இராணுவம் முறியடித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "மொஸ்கோவை நோக்கி நேற்றைய தினம்(04.06.2023) உக்ரைனின் 5 ஆளில்லா விமானங்கள் ஏவப்பட்டன. அவற்றில் 4 விமானங்களை ரஷ்யாவின்...
Loading posts...

All posts loaded

No more posts