மாலிங்க வைத்தியக் குழு முன் ஆஜர்

இலங்கை அணி வீரர் லசித் மாலிங்க இலங்கை கிரிக்கெட் சபையால் நியமிக்கப்பட்ட, வைத்திய நிபுணர் குழுவின் முன் ஆஜராகியுள்ளார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

கோட்டாபயவை கைதுசெய்யுமாறு ஒபாமாவிடம் கோரிக்கை

தற்போது அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக கூறப்படும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைதுசெய்யுமாறு இரு தமிழ் அமைப்புக்கள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை வலியுறுத்தியுள்ளன. தமிழ் ப்போர் ஒபாமா (Tamils for Obama) மற்றும் அமெரிக்கன் தமிழ் போரம் (American Tamil Forum) ஆகிய இரு அமைப்புக்களுமே இவ்வாறு கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் குறித்த...
Ad Widget

வித்தியா கொலை திட்டமிட்ட சதி!! வித்தியாவின் தாயார்

புங்குடுதீவு மாணவி கொல்லப்பட்ட அதிர்ச்சியும் கொதிப்பும் இன்னும் மறையவில்லை. அதற்குள் ஒரு வருடம் ஓடிக் கடக்கவுள்ளது. வரும் மே மாதம் 13 ஆம் திகதியுடன் வித்தியா கொல்லப்பட்டு ஒரு வருடமாகிறது. வடக்கு, கிழக்கையே கொதிக்க வைத்த வித்தியா விவகாரம் இப்பொழுது மெது மெதுவாக அடங்கிச் செல்கிறது. வித்தியாவிற்கான எழுச்சியில் வலியுறுத்தப்பட்ட பிரதான கோரிக்கை கொலையாளிகளை அடையாளம்...

கணவனை வெட்டிக் கொலை செய்த மனைவி!

கணவனை வெட்டிக் கொன்ற மனைவி ஒருவர் கோடரியுடன் பொலிஸில் சரணடைந்த சம்பவம் ஒன்று வவுனியா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்று இரவு வவுனியா – புபுதுகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். 43 வயதான எஸ்.எஸ்.திசாநாயக்க என்ற நபரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் தினமும் வீட்டிற்கு மதுபோதையில்...

உலக அளவில் அதிக வசூலைக் குவித்த தென்னிந்தியப் படங்கள் வரிசையில் “தெறி”!

விஜய், சமந்தா நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'தெறி' வசூலில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தமிழ்நாடு தவிர்த்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என்று மற்ற மாநிலங்களிலும் 'தெறி' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும் கூட...

நட்சத்திர கிரிக்கெட்டுக்கு சரத்குமாரை அழைக்கவில்லை

தென்னிந்திய நடிகர் சங்க கட்டட நிதிக்காக நடந்த 17ந் தேதி நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிக்கு முன்னாள் தலைவர் சரத்குமாருக்கு அழைப்பு இல்லை என்று ராதிகா வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு முன்னாள் தலைவர் சரத்குமாருக்கோ, செயலாளர் ராதாரவிக்கோ, பொருளாளர் வாகை சந்திரசேகருக்கோ அழைப்பு இல்லை. இது...

இசைக்கு தனி இணையதளம் தொடங்கினார் மதன் கார்க்கி

திரைப்பட பாடலாசிரியரும், வைரமுத்து மகனுமான மதன் கார்க்கி தனது நண்பர்களுடன் இணைந்து டூப்பாடூ என்ற இசை இணையதளத்தை இன்று தொடங்கினார். இதில் தனி நபர்களின் பாடல்கள் வெளியிடப்பட்டு. அதன் வருமானம் சம்பந்தப்பட்டவர்களுக்கே கிடைக்கும்படி செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான், ஆண்ட்ரியா உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த இணையதளத்திற்காகவே பாடல்களை உருவாக்கி உள்ளனர். இதுகுறித்து மதன் கார்க்கி கூறியதாவது: சில...

பூஜித்தவுக்கு குவியும் பாராட்டுக்கள்!

புதிய பொலிஸ்மா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பூஜித் ஜயசுந்தரவுக்கு பல்வேறு தரப்புக்களில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. நாட்டில் பெரும்பான்மை மக்களின் நல்ல அபிப்பிராயம் பெற்ற ஒருவர் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை காரணமாக பொதுமக்களின் சிவில் அமைப்புகள் பலவும் புதிய பொலிஸ்மா அதிபருக்கான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளன. அத்துடன் இலங்கை வரலாற்றில் வடக்கிலும், கிழக்கிலும் பணியாற்றி...

மழையுடன் வானிலிருந்து விழுந்த ஆமை குஞ்சுகள்!!

மஹரகம பிரதேசத்தில் நேற்று பெய்த கடும் மழையின் போது ஆமைக் குஞ்சுகள் மேலிருந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மஹரகம வத்தேகெதர கெமுனு வீதி இலக்கம் 227/25 என்ற முகவரியைக் கொண்ட வீட்டின் மீது நேற்று மாலை 4.30 மணியளவில் இவ்வாறு ஆமைக் குஞ்சுகள் விழுந்துள்ளன. கடும் காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்த வேளையில் வானிலிருந்து கூரை மீத...

வெயில் காலத்தில் எம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி?

கடந்த சில வாரங்களாக யாழ்ப்பாணத்தில் நிலவும் உச்ச வெயில் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் காரணமாக மக்கள் தமது நாளாந்த வாழ்க்கையில் சில கட்டாய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வெயிலினால் எமது உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. தோலில் ஏற்படும் சாதாரண மாற்றங்களிலிருந்து (பருக்கள்) வெப்ப அதிர்ச்சி எனப்படும் பாரதூரமான நோய் வரை...

பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரை,சித்திரப் போட்டிகள்

உலக சுகாதார தினத்தையொட்டி பாடசாலை மாணவர்களிடையே நீரிழிவு சிகிச்சை நிலையம் நடத்தும் கட்டுரை மற்றும் சித்திரப் போட்டிகள். கட்டுரை தலைப்பு: ஆரோக்கியமான வாழ்வு, உள்ளடக்கம்: ஆரோக்கியமான வாழ்வின் அவசியத்தை வலியுறுத்தும் விதத்தில் கட்டுரையானது அமைவதோடு, ஏ4 தாளில் 3-4 பக்கங்களுக்குள் இருத்தல் அவசியமாகும். வயதுப்பிரிவு: கீழ்ப்பிரிவு தரம்1முதல் 5 வரை. மத்திய பிரிவு: தரம் 6...

36ஆண்டுகளுக்குப் பின் காவல்துறை தமிழ் அமைச்சரின் கையில்!

36 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக தமிழ் அமைச்சர் ஒருவரின் கையில் தற்காலிகமாக காவல்துறை நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு சட்டம், ஒழுங்கு பதில் அமைச்சராக டி.எம். சுவாமிநாதன் அதிபர் மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தற்காலிகமாக காவல்துறைத் திணைக்களம் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 1980ஆம் ஆண்டு சிறீலங்கா அதிபராக ஜே.ஆர்.ஜெயவர்த்தன பதவிவகித்தபோது, அப்போது உள்நாட்டு...

யாழ். நகரத்தில் அல்லற்படும் பாதசாரிகள்

யாழ் போதனா வைத்தியசாலையின் முன் வீதியில் உள்ள பாதசாரிகள் நடந்து செல்லும் பகுதியில் மின்கம்பங்கள் புதிதாக நடப்பட்டு உள்ளமையால் குறித்த நடைபதையில் பாதசாரிகள் நடந்து செல்லது சிரமமாக உள்ளது. குறிப்பாக வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் ,முதியவர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். மேலும், மின்கம்பம் நடுவதற்கு என தோண்டப்பட்டுள்ள கிடங்கு மூடப்படாமையால் ஆபத்தான நிலைமையும் ஏற்பட வாய்ப்புள்ளது....

மாலைதீவிலிருந்து கொண்டுவரப்பட்டவர்களில் 3 தமிழ் இளைஞர்களும் அடக்கம்!

இலங்கையில் போர் நடைபெற்ற நேரம் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட மூன்று தமிழ் இளைஞர்களும் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா, விசுவமடு, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே இறுதிக்கட்ட யுத்தத்தின்போது காணாமல் போனார்கள் என அவர்களது பெற்றோரால் மன்னார் பிரஜைகள் குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டு காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை...

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற சட்டவிரோத குடியேற்றவாசிகள் 9 பேர் கைது

அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்க முற்பட்ட சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் ஒன்பது பேர் நீர்கொழும்பு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஐந்து ஆண்களும், பெண் ஒருவரும், இரண்டு சிறுவர்களும் சிறுமி ஒருவரும் அடங்கியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. ஆழ்கடல் கப்பல் ஒன்றின் மூலம் நீர்கொழும்பு துறைமுகத்தில் இருந்து குறித்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புலனாய்வு பிரிவினர் வழங்கிய...

சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கான இறுதி விண்ணப்ப தினம் இன்று

கல்விப் பொதுத்தராதர சாதார தரப் பரீட்சை வினாத்தாள்களை மீள மதிப்பீடுவதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்பின்னர் மீள் மதிப்பிடுவதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என திணைக்களம் கூறியுள்ளது. பாடசாலை பரீட்சாத்திகள் மீள் மதீப்பீட்டு விண்ணப்பத்தை அதிபரிடம் கையளிக்குமாறு கோரப்பட்டுள்ளது. தனியார் விண்ணப்பதாரிகள் பரீட்சைகள் திணைக்களத்தில் தமது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க...

கஞ்சா கடத்த முயன்ற மன்னார் இளைஞர் தமிழகத்தில் கைது

தமிழகத்தில் இருந்த படகு மூலம் கஞ்சா கடத்த முயன்ற ஸ்ரீலங்கா பிரஜையொருவர் இந்திய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இராமேஸ்வரத்திற்கு அருகிலுள்ள பாம்பன் பகுதியில் இருந்து கஞ்சா கடத்தப்படவுள்ளதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து கியூ பிரிவு பொலிஸார் நடத்திய தேடுதலின் போது 10 கிலோ கஞ்சா வைத்திருந்த ஸ்ரீலங்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்....

நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் அஜித் பட பாடலை நிறுத்திய விஷால்!

நட்சத்திர கிரிக்கெட் போட்டி மிகவும் அழகாக நடந்து முடிந்தது. இப்போட்டி முடிந்த பிறகு நடிகர்களுக்காக ஒரு ஓட்டலில் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பார்ட்டியில் விஷால் உள்பட பல நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் பல நடிகர்களின் ஹிட் பாடல்கள் போடப்பட்டுள்ளது.இந்நிலையில் திடீரென அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் 'அதாரு அதாரு உதாரு உதாரு'...

தற்கொலை அங்கி விவகாரம்- ஜேர்மனியில் உள்ள இருவரைக் கைது செய்ய இன்டபோலிடம் உதவி!

சாவகச்சேரி பிரதேசத்தில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி விவகாரத்தில் தொடர்புபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் புலம்பெயர் தமிழர் இருவரை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவியை இலங்கைப் பொலிஸார் நாடியுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இருவரும் ஜேர்மனியில் வாழ்ந்து வருவதாக கிடைத்த தகவலுக்கு அமைய அவர்களைக் கைது செய்வதற்கான அடுத்தகட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்களில் இருந்து...

வெளிநாட்டில் இருந்து திரும்பிய இளைஞர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது!

வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பிய மற்றுமொரு தமிழ் இளைஞர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு – முத்தையன்கட்டு பிரதேசத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் ஜெயகாந்தன் என்பவரே கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு தொழிலின் நிமித்தம் மத்திய கிழக்கு நாட்டிற்கு சென்று கடந்த 12ஆம் திகதி நாடு...
Loading posts...

All posts loaded

No more posts