Ad Widget

தற்கொலை அங்கி விவகாரம்- ஜேர்மனியில் உள்ள இருவரைக் கைது செய்ய இன்டபோலிடம் உதவி!

சாவகச்சேரி பிரதேசத்தில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி விவகாரத்தில் தொடர்புபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் புலம்பெயர் தமிழர் இருவரை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவியை இலங்கைப் பொலிஸார் நாடியுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் ஜேர்மனியில் வாழ்ந்து வருவதாக கிடைத்த தகவலுக்கு அமைய அவர்களைக் கைது செய்வதற்கான அடுத்தகட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

தற்கொலை அங்கி மீட்கப்பட்ட விடயம் தொடர்பில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இவ்விவகாரம் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் யாழ்.குடாநாட்டில் தீவிர புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் எதிர்காலத்தில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட விடயத்தில் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படுகின்ற ஜேர்மனியில் வாழும் புலம்பெயர் தமிழர் இருவரை கைது செய்வதற்கான நகர்வுகளை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts