- Tuesday
- June 16th, 2026
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்குமிடையில் அலரிமாளிகையில் நேற்று புதன்கிழமை முக்கிய சந்திப்பு நடைபெற்றது. பரவிப்பாஞ்சானிலுள்ள இராணுவ முகாமுக்குள் எதிர்க்கட்சித் தலைவர் அத்துமீறி நுழைந்தார் எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுவருகின்ற நிலையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. மேற்படி சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. "பரவிப்பாஞ்சான்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம், விசுவமடு, நாயாறு பிரதேசங்களில் இடம்பெறவுள்ள இராணுவத்தின் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக நேற்று புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காலை 9 மணி முதல் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் பாதிக்கப்பட்ட மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 'பிடிக்காதே பிடிக்காதே காணிகளைப் பிடிக்காதே', 'அரச அதிகாரிகளே இராணுவ...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் அனுஷ்டிக்கப்படவுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியா தாயக அலுவலகத்தில் நேற்று இது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை இம்முறை அனைத்து மக்களையும் திரட்டி உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்....
ஊர்காவற்துறை, நாரன்தனே பிரதேசத்தில் சிறுமி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். வீட்டின் பின்புறமாக உள்ள கிணற்றில் விழுந்து குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 07 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் சடலம் ஊர்காவற்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சி பரவிபாஞ்சான் பிரதேசத்தில் இராணுவ முகாமிற்குள் எதிர்க்கட்சித் தலைவர் சட்டவிரோதமாக அத்துமீறி நுழையவில்லை என்றும் இராணுவமே அத்துமீறியுள்ளது என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறினார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் கூறியதாவது, "கடந்த சில நாட்களாக, எதிர்க்கட்சித்...
இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்களின் பெயர் விபரம் வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி முன்னாள் அணித் தலைவர் சனத் ஜயசூரிய புதிய தெரிவுக்குழு உறுப்பினர்களின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, சனத் ஜயசூரிய (தலைவர்), ரஞ்சிதட மதுரசிங்க, ரொமேஷ் களுவிதாரண, எரிக் உபசாந்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவிற்கு விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகர அனுமதி வழங்கியுள்ளார்....
இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் நேற்று புதன் கிழமை மதியம் பயங்கரவாத விசாரனைப்பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் பிரதான வீதியில் உள்ள அவரது அச்சகத்தில் வைத்து நேற்று புதன் கிழமை மாலை 2 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் கைது குறித்து வருகை...
நடிகர் சங்கம் நடத்திய நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு வராததால் நடிகர் அஜீத்குமாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதா? என்பதற்கு நடிகர் விஷால் பதில் அளித்தார். நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அவர்கள் கூறியதாவது:– ‘‘நாங்கள் நடிகர் சங்க பொறுப்புக்கு வந்து 6...
‘ரஜினிகாந்தைப்போல் யாரையும் பார்க்க முடியாது. அவர் எனக்கு பிடித்த அற்புதமான மனிதர்’’ என்று நடிகை ராதிகா ஆப்தே கூறினார். ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக ராதிகா ஆப்தே நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி ராதிகா ஆப்தே கூறியதாவது:- ‘‘ரஜினிகாந்துடன் நடிப்பேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை....
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு வெளியிடப்பட்டு அது நேற்று உத்தியோகபூர்வமாக இந்திய அரசிடம் கையளிக்கப்பட்டது. பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வைத்திய நிபுணர் பூ.லக்ஸ்மன் தலமையில் பேரவையின் செயற்பாட்டுக்குழு உறுப்பினர்கள், மற்றும் அரசியல் உபகுழு உறுப்பினர்கள் அடங்கிய ஐவர் கொண்ட குழு நேற்று (27.04.2016) மதியம் 2.30 மணியளவில் யாழ் நகரில் உள்ள இந்திய...
இலங்கை கடற்படை பலவிதமான உதவியுடன் யாழ்ப்பாணத்தில் லெப்டினன்ட் கமாண்டர் ரசிகா திசாநாயக்க தலைமையின் கீழ் நிலாவரை கிணறுக்குள் இருந்த இறந்தவரின் உடலை மீட்க போனது. கடற்படையின் முதன்மை விசாரணை பிரிவு ஒரு நீருக்கடியில் கேமரா பொருத்தப்பட்ட ஒரு உயர் தொழில்நுட்ப தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் வாகனம் பயன்படுத்தி உடலை 130 அடி அப்பால் கண்டு பிடித்திருந்தது....
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு 18 பவுஸர்களில் ஒரு இலட்சத்து 18 ஆயிரத்து 800 லீற்றர் பெற்றோல் நேற்று எடுத்துவரப்பட்டதையடுத்து யாழ்ப்பாணத்தில் பெற்றோலுக்கான தட்டுப்பாடு நீங்கியது. கடந்த ஞாயிறு, திங்கட்கிழமைகளில் யாழ்.குடாநாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு நிலவியது. இதனால் வாகன சாரதிகள் பாதிக்கப்பட்டனர். ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பெற்றோல் விநியோகம் இடம்பெற்றது. இந்நிலையில், நேற்று...
யாழ்ப்பாணத்தில் தற்போது சிறுவர் மீதான துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன. துஷ்பிரயோகங்கள் பலவந்தமாக இடம்பெறுவதில்லை. சம்பந்தப்படும் சிறுமியின் சம்மதத்துடனேயே இடம்பெறுகின்றது என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜி.ஏ.பெரேரா தெரிவித்தார். யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்ற சிவில் சமூக குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்,...
இரா.சம்பந்தன் உடனடியாக எதிர்க் கட்சித் தலைவர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட வேண்டும் என முக்கியமான ஏழு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள். இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தின் முன்பு இன்று (27) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், “சம்பந்தன் எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு தகுதியானவர்...
மிருசுவில் பகுதியிலுள்ள களப்புக்கு இரைதேடி வந்த வெளிநாட்டு கொக்குகள் 10ஐயும் வேட்டையாடி, அதன் இறைச்சிகளை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற நபரை, நேற்று செவ்வாய்க்கிழமை (26) மாலை கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர். வரணி குடமியன் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். களப்புக்கு வரும் வெளிநாட்டு கொக்குகளை பொறி வைத்துப்...
கனகாம்பிகைக்குளம் பிரசேத்தைச் சேர்ந்த சரவணமுத்து துவாரகா என்ற தனது மகள் அருட்சகோதரிகளின் பாதுகாப்பில் உள்ளதாக தாயொருவர் காணாமல்போனோா் தொடா்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமா்வில் தொிவித்துள்ளாா். இதனையடுத்து ஆணைக்குழுவின் மூன்று அதிகாரிகள் கிளிநொச்சி – உருத்திரபுரத்தில் அமைந்துள்ள கன்னியர் மடத்திற்கு முறைப்பாடு செய்த தாயாருடன் சென்றனா். காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை...
ஒரு தலைப்பட்சமாக அல்லது தீவிரவாதமாக இல்லாமல் அனைவருக்கும் ஊடக வாயில் திறக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இத்துடன் மிகவும் கருணையுடன், கௌரவத்துடன், அன்புடன் இந்த வேண்டுகோளை விடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இன்றைய தினம் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், செய்தியாளர்கள் ஆகியோருடன் இடம்பெறும் விசேட சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் ஊடக...
நிறைவேற்றுக் குழுவின் தலைவராக, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமத்திபாலவை தெரிவு செய்தவற்கான முன்மொழிவினை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவித்தலை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. டுபாயில் அமைந்துள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைமையகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் திலங்க சுத்திபால பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து நீதிமன்றத்தின் அனுமதியுடன் தங்க அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தில் இயங்கிவந்த தமிழீழ வைப்பகத்தின் தலைமைச் செயலகம், கேப்பாபுலவு வீதி, லூத்மாதா சந்தியில் உள்ள இரண்டாம் காணியில் 2009 ஆம் ஆண்டு வரை செயற்பட்டு வந்தது. குறித்த இடம் இராணுவக் கட்டுப்பட்டிற்குள் வரும் முன்னர் வைப்பகத்தின்...
இலங்கையில் சூறாவளி ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது நிலவி வரும் காலநிலையின் அடிப்படையில் இவ்வாறு பலத்த காற்று வீசக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவித்துள்ளது. நேற்று மாலை கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கடும் காற்று வீசியது. இதனால் இங்கு பல மரங்கள் முறிந்து...
Loading posts...
All posts loaded
No more posts
