Ad Widget

தமிழீழ வைப்பகத்தின் தங்க நகை புதையல் மீட்கும் நடவடிக்கை ஆரம்பம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து நீதிமன்றத்தின் அனுமதியுடன் தங்க அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ltte-bank

தமிழீழ விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தில் இயங்கிவந்த தமிழீழ வைப்பகத்தின் தலைமைச் செயலகம், கேப்பாபுலவு வீதி, லூத்மாதா சந்தியில் உள்ள இரண்டாம் காணியில் 2009 ஆம் ஆண்டு வரை செயற்பட்டு வந்தது.

குறித்த இடம் இராணுவக் கட்டுப்பட்டிற்குள் வரும் முன்னர் வைப்பகத்தின் தலைமைச் செயலகத்திற்கு முன்னால் இருந்த தனியார் ஒருவரின் வெற்றுக் காணியில் இருந்த ஆழமான மண் கிணற்றுக்குள் மக்கள் அடைவு வைத்த தங்க நகைகளை போட்டு கிணற்றை தூற்றியுள்ளனர்.

இந்நிலையில் தமிழீழ வைப்பகத்துடன் தொடர்புடைய விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் நீதிமன்றத்தின் ஊடக குறித்த தகவலை வழங்கியுள்ளார்.

இதனையடுத்தே முல்லைத்தீவு நீதிமன்றத்தின் அனுமதியுடன் குறித்த அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ளன. குறித்த அகழ்வு பணிகள் நடைபெறும் இடத்தில் மாவட்ட நீதிபதி சமூகமளித்துள்ளதுடன் இலங்கை மின்சார சபையினர் சிறப்பு மின்னிணைப்பு செய்துள்ளனர்.

Related Posts