Ad Widget

யாழ் பல்கலையில் அன்னை பூபதியின் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பு!!

இந்தியப் படைகளால் தமிழர் தாயகத்தில் வலிந்து திணிக்கப்பட்ட போரையும் அடாவடிகளையும் நிறுத்த வலியுறுத்தி மட்டக்களப்பு மண்ணில் உண்ணாவிரத அறப்போர் புரிந்து காந்தி தேசத்திற்கே அகிம்சையைப் போதித்து தன்னுயிர் நீத்த அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப்போராட்டத்தின் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (12.04.2023) புதன்கிழமை யாழ் பல்கலை மாணவர்களால் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது. யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத்தின்...

பனாமா நாட்டு கப்பலுக்குள் பதுங்கியிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 4 பேர் கைது!

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த பனாமா நாட்டு கப்பலில் பதுங்கியிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற குறித்த நால்வரும் கப்பல் ஊழியர்களால் அடையாளம் காணப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். வேலணை, தொண்டமனாறு, புதுக்குடியிருப்பு மற்றும் அராலி வடக்கு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 21, 22 மற்றும் 35 வயதுடைய நால்வரே...
Ad Widget

பரந்தன் புகையிரத நிலையத்திற்குள் புகுந்து குண்டர்கள் தாக்குதல் : ஊழியர்கள் வைத்தியசாலையில்

பரந்தன் புகையிரத நிலையத்திற்குள் புகுந்த குண்டர்கள் தாக்குதல் காரணமாக ஊழியர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பரிவுக்குட்பட்ட பரந்தன் புகையிரத நிலைய பகுதியில் நேற்று மாலை மதுபானம் அருந்திய குழுவினரிடம் அப்பகுதியில் மதுபானம் அருந்த வேண்டாம் என ஊழியர்களால் கூறப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த குண்டர் கும்பல் பரந்தன் ரயில் நிலைய...

காங்கேசன்துறை துறைமுகத்தில் உட்கட்டமைப்பு நடவடிக்கையில் கடற்படை!

காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தத கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பயணிகள் படகு சேவையை தொடங்கும் வகையில் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது. இந்த நடவடிக்கை பயணிகள் போக்குவரத்துத் திட்டம் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதோடு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாவகச்சேரியில் இடம்பெற்ற கொடூர கொலை!!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீசாலை புத்தூர் சந்திப்பகுதியில் வைத்து நேற்று மாலை ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி தெரிவித்துள்ளனர். குறித்த இடத்தில் வசிக்கின்ற 20 வயதான இளைஞர் மனநல சிகிச்சைகளுக்காக கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம்...

ரஷ்யாவிற்கு இரகசியமாக உதவி செய்ய திட்டம்!மேற்குலகிற்கு அதிர்ச்சி கொடுத்த முக்கிய நாடு

கடந்த வார இறுதியில்,மிகவும் இரகசியமான அமெரிக்க உளவுத்துறை ஆவணங்கள் இணையத்தில் கசிந்து உலக அளவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த இரகசிய ஆவணங்களில் இருந்து பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்துள்ளன. பெப்ரவரி 17 ஆம் திகதியிட்ட ஆவணத்தின் ஒற்றை பகுதி, ஜனாதிபதி அல்-சிசி மற்றும் மூத்த எகிப்திய இராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்ததாக கூறப்படும் உரையாடல்களை...

தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு!

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலை திட்டமிட்டபடி நடத்த பல்வேறு தடைகள் இருந்தபோதிலும், தேவையான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காததாலும், ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களாலும் தேர்தலை ஒத்திவைக்க நேரிட்டதாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள சிறப்பு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. உள்ளூராட்சி...

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மேலும் குறைவடையலாம்?

எதிர்வரும் சில மாதங்களில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மேலும் குறைவடையலாம் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் பால் மாவின் விலை மேலும் குறைவடையலாம் என பால் மா இறக்குமதியாளர் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார். கடந்த வாரம் பால் மாவின் விலை குறைக்கப்பட்டது. இதற்கமைய...

நெசவுசாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரிந்தவர்களை வெளியேற்றுமாறு கோரி போராட்டம்!

அரசாங்கத்திற்கு சொந்தமான அச்சுவேலி நெசவுசாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரிந்த மதப் பிரிவினரை வெளியேற்றுமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சிவசேனை அமைப்பின் ஏற்பாட்டில் அச்சுவேலி நெசவுசாலை முன்றலில் இன்று(செவ்வாய்கிழமை) காலை 8 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யுத்தத்தின் பின் இயங்காத குறித்த நெசவுசாலை கட்டடத்தில் ஒரு மதஸ்தலம் அமைக்கப்பட்டு பிரார்த்தனை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன....

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு !!

வைகாசி 15ஆம் திகதி நடைபெறவிருந்த 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை இரண்டு வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. அன்றைய தினம் பரீட்சையை நடத்த முடியாது என்பதனால் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து 29 ஆம் திகதி பரீட்சையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் புதிய வாரிக்கொள்கை மற்றும் அதற்கு எதிரான ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக முன்னதாகவும்...

சுற்றுலா பயணங்களை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம்!

எதிர்வரும் பண்டிகை காலத்தில், சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி,தாங்கள் முன்னெடுக்கப்போகும் நடவடிக்கைகள்,சுற்றுலா பயணங்கள் பற்றிய விபரங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில்,"நாட்டில் அண்மைய நாட்களில் திட்டமிடப்பட்ட...

போதைப்பொருள் விவகாரம்! கைதான யாழ். பல்கலை மாணவர்கள் சிலர் தொடர்பில் முக்கிய நடவடிக்கை

தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை உட்கொண்டார்கள் என்ற சந்தேகத்தில் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை உளவளத் துணைச் சிகிச்சைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக் கழக விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு. ரவிராஜன் தெரிவித்துள்ளார். போதைப்பொருளை விற்பனை செய்யும் நபரொருவர் வழங்கிய தகவல்களுக்கு அமைவாக நேற்று முன்தினம் (09.04.2023) மாணவர்கள் தங்கியிருந்த...

ரஷ்யாவின் மிகக் கொடூரமான தாக்குதல்கள்! முற்றிலுமாக அகற்றப்படும் மரியுபோல் தொடருந்து நிலையம்

உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள தொடருந்து நிலையத்தை ரஷ்ய படைகள் முற்றிலுமாக அகற்றி வருவதாக நாடுகடத்தப்பட்ட மரியுபோல் நகரத்தின் மேயரின் ஆலோசகர் பெட்ரோ ஆண்ட்ரியுஷ்செங்கோ(Petro Andriushchenko) தெரிவித்துள்ளார். போரின் தொடக்க நாட்களில் ரஷ்ய இராணுவ படையின் தொடர் தாக்குதலுக்கு உள்ளான மரியுபோல் நகரம், கடந்த ஆண்டு மே மாதம் முற்றிலுமாக ரஷ்ய இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது....

இந்தியா உடன் தலையிடவேண்டும்! வடக்கிற்குவரும் தெற்கு தலைவர்கள் சந்திப்பை புறக்கணிப்போம் – நல்லை ஆதீன முதல்வர்

சைவ சமயத்திக்கும், தமிழ் மக்களுக்கும் எதிரான அநீதிகளை தென்னிலங்கை அரசியல்வாதிகள் தடுக்கவேண்டும் எனவும், இந்தியா இந்த விடயத்தில் தலையிடவேண்டும் எனவும் சைவ சமய அமைப்புகள தீர்மானித்துள்ளதாக நல்லை ஆதீன முதல்வர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சைவ சமயம் சார்ந்த அமைப்புக்கள், கோவில் தர்மகர்த்தா சபையினர், ஆதீன கர்த்தாக்கள்....

கடும் இனவாத கொள்கையுடன் தொல்பொருள் திணைக்களம் செயற்படுகின்றது – கஜேந்திரன்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் திணைக்களம் சிங்கள மயமாக்கலுக்கு என அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். இந்த தொல்பொருள் திணைக்களத்தோடு முப்படைகளின் ஆதரவுடன் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் இருப்புக்கள் இல்லாதொழிக்கப்படுகிறது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சாட்டினார். நாடாளுமன்றில்...

சூரியன் உச்சம் கொடுக்கும் நேரம் குறித்த அறிவிப்பு வெளியானது!

மேல், சப்ரகமுவ, தென், ஊவா, மத்திய, வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும்...

நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

அடுத்த சில நாட்களில் நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலிய பிரிவினையாளர்கள் சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் நிதிப்பிரிவின் உயர் அதிகாரி ஒருவரின் நடைமுறைக்கு சாத்தியமற்ற முடிவினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் மற்றும் பிராந்திய முகாமையாளர்கள்...

இரவோடு இரவாக உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல்!

இரவோடு இரவாக ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட 17 ட்ரோன் தாக்குதல்களை உக்ரைன் முறியடித்துள்ளதாக உக்ரைனின் விமானப்படை கட்டளை அதிகாரி தெரிவித்துள்ளார். ரஷ்யா, ஈரானில் தயாரிக்கப்பட்ட 17 ஷாஹெட் ட்ரோன்களை அனுப்பி இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கருங் கடலின் கிழக்கு கடற்கரையில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கருதுவதாகவும் குறித்த ட்ரோன்கள் அனைத்தும் தென்மேற்கில் உள்ள ஒடிசா...

வடக்கு கிழக்கை முழுமையாக முடக்குவோம்!! இரா.சாணக்கியன் எச்சரிக்கை!!

தொல்பொருள் திணைக்களத்தினை கொண்டு அரசாங்கம் முன்னெடுத்துவரும் இனவாத செயற்பாடுகளை நிறுத்தாவிட்டால் வடக்கு கிழக்கை முடக்குவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எச்சரித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றிய அவர் குறுந்தூர்மலை, வெடுக்குநாறி மற்றும் திருகோணமலையில் தொல்பொருட்களை பாதுக்கப்பதாக கூறி அரசாங்கம் ஏற்படுத்தும் குழப்பங்களை உடன் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச...

எரிவாயுவின் விலை பாரிய அளவில் குறைப்பு!!

இன்று (04) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை சுமார் ஆயிரம் ரூபாவினால் குறைக்கப்படும் என அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். புதிய விலை நாளை காலை அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். வரலாற்றில் லிட்ரோ எரிவாயுவின் அதிகூடிய விலைத் திருத்தம் இதுவென முதித பீரிஸ் குறிப்பிட்டார். உலக சந்தையில் எரிவாயு விலை வீழ்ச்சி...
Loading posts...

All posts loaded

No more posts