Ad Widget

மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என அறிவித்தல்!!

நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என்ற அறிவித்தல் தொல்பொருள் திணைக்களத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. உடைந்து விழும் நிலையில் உள்ள அந்தக் கட்டடத்திற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நாடப்பட்டுள்ளமை காரணமாக அதற்குள் யாரையும் நுழையவேண்டாம் என தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது.

எரிபொருள் விலைகள் குறைவடையும் சாத்தியம் !!!

ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் அடுத்த வாரமளவில் எரிபொருட்களின் விலைகள் குறையலாம் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வேகமாக அதிகரித்தால் பணவீக்கம் வேகமாக வீழ்ச்சியடையும் எனவும் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். எரிபொருள் விலைகள் குறைவடைந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடையும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் மேலும்...
Ad Widget

பௌத்த தேரர்களின் தலையீடுகளே இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாமைக்குக் காரணம் – விக்னேஸ்வரன்

இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு அரசியல் விவகாரங்களில் பௌத்த தேரர்களால் மேற்கொள்ளப்படும் தலையீடுகளே காரணம் என்பதே எனது நிலைப்பாடாகும். வட, கிழக்கு வாழ் தமிழ்மக்களின் பிரச்சினைகள் என்னவென்பதைக் கண்டறிவதற்கு ஆங்கிலம் அல்லது தமிழ்மொழி பேசக்கூடிய பௌத்த தேரர்கள் தமிழ் தலைவர்களுடன் கலந்துரையாடுவது இன்றியமையாததாகும் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு...

100 ரூபாவாக குறைகிறது பாணின் விலை! வெளியானது தகவல்

பாணின் விலையை 100 ரூபாவாக குறைக்க எதிர்பார்ப்பதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். இந்த விலை குறைப்புக்கு அரசாங்கத்தின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும், பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையைக் குறைத்தால் மட்டுமே தற்போது முடங்கியுள்ள வெதுப்பகத் தொழிலை மீட்டெடுக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பாண் உள்ளிட்ட உணவு...

தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டம் !பிரித்தானிய உளவுத்துறை விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில் ரஷ்ய படைகள் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ரஷ்யாவின் கடுமையான அழுத்தத்தின் கீழ் உக்ரைனிய பாதுகாப்பு படைகள் இருப்பதாக தகவல்...

தேர்தலை நடத்த கோரி யாழில் போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினரால் யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய பேருந்து நிலையம் முன்பாக காலை 10. 30 மணியளவில் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மின் கட்டண உயர்வை உடன் நிறுத்து, பொருட்களின் விலையை குறை, உள்ளூராட்சி...

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி, இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 334.50 ரூபாவாகவும் விற்பனை விலை 348.03 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

யாழ்.சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்!

வடக்கின் நுழைவாயில்” சர்தேச வர்த்தக சந்தை 13வது தடவையாக இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது. யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை 13 ஆவது தடவையாகவும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தொடக்கம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை வரையிலான மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது. கண்காட்சி கூடத்தினை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா நாடா வெட்டி திறந்து வைத்தார்....

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரத்தத்துக்கு தட்டுப்பாடு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் குருதி வழங்கல் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், அந்த அதிகரிப்பிற்கு ஏற்ப குருதிக்கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை எனவும் இதனால் இரத்த வங்கியில் அடிக்கடி இரத்தத்திற்கு தட்டுப்பாடு ஏற்படுகின்றது. இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியவில்லை என இரத்த வங்கி அறிவித்துள்ளது. கடந்த 28ஆம் திகதி 49...

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கான உணவுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளது.

ஊடகங்களை அனுமதிக்காத அரச அதிபர்!! ஊடகவியலாளர்களை உள்ளேவருமாறு அழைத்த டக்ளஸ்!!

யாழ்.மாவட்டச் செயலர் சிவபாலசுந்தரன் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி முன்னாயத்தக் கலந்துரையாடலுக்கு ஊடகங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உடனடியாக ஊடகவியலாளர்களை உள்ளேவருமாறு அழைத்தார். கடந்த காலங்களில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு...

இராணுவத்தினருடன் மதுபோதையில் தர்க்கம்!! இரு இளைஞர்கள் கைது!!

யாழ்.நீர்வேலி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் ரோந்து சென்ற இராணுவத்தினருடன் மதுபோதையில் தர்க்கம் புரிந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோந்து சென்ற இராணுவத்தினரின் துவிச்சக்கர வண்டிகளுக்கு குறுக்கே மோட்டார் சைக்கிளை விட்டு தர்க்கம் புரிந்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய கோப்பாய் பூதர்மடம் மற்றும் நீர்வேலி பகுதிகளை சேர்ந்த இரு இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய இழுவை படகுகள் மீண்டும் அட்டகாசம்!

யாழ் சுழிபுரம் மேற்கு சவுக்கடி கடற்பரப்பில் நேற்று இரவு கடற்றொழிலுக்கு சென்ற மூன்று மீனவர்களின் வலைகள் நாசமாக்கப்பட்டுள்ளது. சுமார் 12 இலட்சம் பெறுமதியான வலைகள் இந்திய இழுவை படகுகளால் அறுத்து நாசம் செய்யப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சுழிபுரம் திருவடி நிழலை கடற்பரப்பிலும் இவ்வாறானதொரு சம்பவம் பதிவாகியிருந்தமை...

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் நடைபெற்றது!

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தொண்டர் அணி ஒன்றினை உருவாக்க உள்ளதாக அமைச்சர் டக்ளஸ்...

மண்ணெண்ணெய் விலை குறைப்பு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

மண்ணெண்ணெய் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (01) நள்ளிரவு முதல் இது நடைமுறைக்கு வரும். இருப்பினும், மற்ற பெட்ரோலிய பொருட்களின் விலைகள் திருத்தப்படவில்லை என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் கூறியது. எனவே, ஒரு லிட்டர் பெட்ரோலியப் பொருட்களின் தற்போதைய விலைகள் பின்வருமாறு: மண்ணெண்ணெய் - ரூ....

யாழ்.நகர் பகுதியில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை!

யாழ் நகரப் பகுதிகளில் வாகன நெரிசலை தடுப்பதற்கும் வாகனங்களை நிறுத்துவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளும் பொருட்டு யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.மஞ்சுள செனரத்துடன் யாழ். வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் யாழ் பொலிஸ் தலைமையகத்தில் நேற்றைய தினம் (புதன்கிழமை) சந்தித்து கலந்துரையாடினர். குறித்த கலந்துரையாடலில், யாழ் நகரப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் முறையற்ற...

யாழ். மாநகர சபையின் புதிய முதல்வர் தெரிவு விரைவில்!

யாழ். மாநகர சபையின் எஞ்சியுள்ள ஆட்சிக் காலத்துக்குப் புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் வெளியிடப்பட்டுள்ளது. 2022 டிசம்பர் மாதம், யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வாக்கெடுப்பின் முதலாவது சமர்ப்பிப்பில் அங்கீகரிக்கப்படாததன் காரணமாக முன்னாள் முதல்வரும்,...

எனது சம்மதம் இன்றி எனது கட்சியின் பெயருக்கு யாரும் பணம் வழங்க வேண்டாம்! – சி.வி.விக்னேஸ்வரன்

போலியாக தனது பெயரையும் கட்சியினையும் பயன்படுத்தி சில நாட்களாக வெளிநாடுகளில் பணம் சேகரிக்கும் சம்பவம் இடம்பெறுவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது தலைமையில் இயங்கி வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பெயரில் அதன் செயலாளர் நாயகம் ஆகிய எனக்கு...

வல்லரசையே கதிகலங்க வைக்கும் உக்ரைன் போர் யுத்தி! மிரண்டு போயுள்ள ரஷ்யா

மிக இலகுவில் உக்ரைனை வீழ்த்தி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றலாம் என்ற ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கனவை உக்ரைன் படையினர் தகர்த்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் ஓராண்டை நிறைவு செய்து இருக்கும் நிலையில், கிழக்கு உக்ரைனிய பகுதியில்...

புலிகளின் தலைவர் தொடர்பாக பொய்யான கருத்துகளை வெளியிடுவது போராட்டத்தை அவமதிக்கும் செயல் – சித்தார்த்தன்

பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்து அவருடைய கருத்து அல்ல என்பதை அவரே குறிப்பிட்டிருந்ததாக தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார். தனது குடும்பதையே ஒரு இனத்திற்காக அர்பணித்த தம்பி...
Loading posts...

All posts loaded

No more posts