Ad Widget

ஊடகங்களை அனுமதிக்காத அரச அதிபர்!! ஊடகவியலாளர்களை உள்ளேவருமாறு அழைத்த டக்ளஸ்!!

யாழ்.மாவட்டச் செயலர் சிவபாலசுந்தரன் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி முன்னாயத்தக் கலந்துரையாடலுக்கு ஊடகங்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உடனடியாக ஊடகவியலாளர்களை உள்ளேவருமாறு அழைத்தார்.

கடந்த காலங்களில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டங்களுக்கு ஊடகவியலாளர்களை அனுமதிப்பது வழமை ஆனால் தற்போதைய அரச அதிபர் அனுமதிக்காமை தொடர்பில் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஊடகங்களை மாவட்டச் செயலர் அனுமதிக்காமை தொடர்பில் எனக்கு முன்கூட்டியே தெரியாது. தெரிந்திருந்தால் உடனடி நடவடிக்கை எடுத்திருப்பேன்.

யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் நான்தான் ஆகவே கூட்டத்துக்கு ஊடகவியலாளர்களை அனுமதிப்பது தொடர்பில் நான்தான் முடிவு எடுக்க முடியும். எனவும் இதுபோன்ற தவறு இனி நடக்காது எனவும் கூறினார்.

Related Posts