Ad Widget

ஜேர்மனியில் யெஹோவா சாட்சிகள் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு: 7 பேர் பலி

ஜேர்மனியின் ஹம்பர்க் நகரில் யெஹோவா சாட்சிகள் தேவாலயத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்துள்ளனர். உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 09.05 மணியளவில் (இலங்கை, இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.35 ) இச்சம்பவம் இடம்பெற்றது. ஒரு நபர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும் அந்நபரும் கொல்லப்பட்டுள்ளார் என நம்புவதாகவும் பெரிலஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர்...

வவுனியாவில் நால்வர் உயிரிழப்பு விவகாரம்! பிள்ளைகள் கழுத்து நெரித்து படுகொலை- உடற்கூறாய்வில் உறுதி

வவுனியாவில் மர்மமான முறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்த சம்பவத்தில் குழந்தைகள் இருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இரு குழந்தைகளும் கயிற்றினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக உடற்கூறாய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா, குட்செட் வீதி, அம்மா பகவான் ஒழுங்கையில் தந்தை, தாய் மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...
Ad Widget

ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு!

எதிர்வரும் 15ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. சம்பள முரண்பாடு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடுகளுக்கான கொடுப்பனவுப் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பல ஆசிரியர் சங்கங்கள் நேற்று (புதன்கிழமை) கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவை சந்தித்ததன் பின்னணியில்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் இன்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (வியாழக்கிழமை) ஒரு மணிநேர வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுவதுடன் அடையாளமாக நண்பகல் 12மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக ஒன்றுகூடிய பல்கலைக்கழக ஊழியர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக கல்வி சாரா பணியாளர்களின் பிரச்சனைக்கு உடனடி தீர்வு...

கோதுமை மாவின் விலையும் குறைப்பு !

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை நேற்றையதினம் (புதன்கிழமை) முதல் குறைக்கப்பட்டதாக செரண்டிப் மற்றும் பிறிமா நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 15 ரூபாயால் குறிக்கப்பட்டுள்ளதாக இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.

வேலை நிறுத்தப் போராட்டதினால் இன்னல்களை எதிர்கொண்டுள்ள யாழ்.போதனா நோயாளர்கள்!

நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டதினால் வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளிகள், பொதுமக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர் நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கங்களினால் மருந்து தட்டுப்பாட்டை நீக்கு, வாிக்கொள்கையை மீளப் பெறு, மேலதிக கொடுப்பனவுக்கான வரையறைகளை நீக்கு என்பன உள்ளிட்ட 8 கோாிக்கைகளை முன்வைத்து பாரிய வேலை நிறுத்த போராட்டம்...

QR முறைமையில் மாற்றம் – அமைச்சர் அறிவிப்பு

நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நள்ளிரவில் QR முறை புதுப்பிக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். முன்னதாக QR ஒதுக்கீடு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் புதுப்பிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த மாற்றம் வந்துள்ளது. இதற்கிடையில், QR முறை மூலம் வாரத்திற்கு பெறப்படும் எரிபொருளின் அளவுகளில் எந்த மாற்றமும் இருக்காது...

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்!

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர் வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தனர். மகளிர் தினமான நேற்று தமக்கான உரிமைகள் வழங்கப்படவேண்டும் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் வெளிக்கொணரப்படும் இந்த பிரச்சினைக்கு சர்வதேச நீதி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது....

உக்ரைன் கண்ணி வெடியில் சிக்கி வெடித்து சிதறிய ரஷ்ய டாங்கிகள்

உக்ரைன் - ரஷ்ய போர் ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் போர் பாக்முட் நகரில் 10 மாதங்களுக்கு மேலாக இருதரப்பினரும் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். இந்நிலையில், பாக்முட் நகரை ரஷ்ய படைகள் நாலாபுறமும் சூழ்ந்து தாக்குதல் நிகழ்த்திவரும் நிலையில், அங்கிருந்து உக்ரைன் இராணுவம் பின்வாங்கப்போவதில்லை என அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். இவ்வாறான பின்னணியில்...

வீட்டுப் பணிக்காக அரபு நாடு சென்றிருந்த மனைவியை காணவில்லை! கணவன் முறைப்பாடு!!

அரபு நாடொன்றுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றிருந்த பெண் ஒருவர் காணாமல்போயுள்ளதாக பெண்ணின் கணவனும், பிள்ளைகளும் நேற்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் முறைப்பாடு வழங்கியிருக்கின்றனர். 39 வயதுடைய கோமதி பஞ்சலிங்கம் என்பவரே அரபு நாட்டிற்கு பணிக்காக சென்றிருந்த நிலையில், காணாமல் போயுள்ளார். இவர் பச்சிளைப்பள்ளி பிரதேச சபை பிரிவில் இயக்கச்சி, கிநொச்சி என்னும் முகவரியைக் கொண்டவர் எனவும்...

ஆட்டிறைச்சி எலும்பு மார்பு பகுதியில் சிக்கியதால் குடும்ப பெண் பலி!

ஆட்டிறைச்சி எலும்பு மார்பு இரத்த குழாயில் சிக்கி குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி, மட்டுவில் தெற்கைச் சேர்ந்த லோகந்திரகுமார் மேரி ஜெனிஸ்ரா (வயது- 46) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். கடந்த 25ஆம் திகதி அவர் ஆட்டிறைச்சி சாப்பிட்டுள்ளார். ஆட்டிறைச்சி எலும்பு தொண்டைக்குள் சிக்கியுள்ளது. அதனால் அவர் வாழைப்பழம்...

மக்களை ஏமாற்றி பணமோசடி செய்த நபர் ஒருவர் கைது

அதிஷ்டம், பரிசுப்பொருள் உங்களுக்கு கிடைத்துள்ளது என தொலைபேசிமூலம் அழைத்து மக்களை ஏமாற்றி லட்சக்கணக்கில பணமோசடி செய்து ஏமாற்றிய பண்டாரகம அட்டுளுகம, பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரை யாழ் விசேட குற்றவிசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரால் நேற்று கைதுசெய்யப்பட்டார். யாழ்மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு அதிஷ்டகார் ஒன்று கிடைத்துள்ளதாக Ez Case மூலம் 24...

உள்ளூராட்சித் தேர்தல் ஏப்ரல் 25ம் திகதி : தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சித் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, இது தொடர்பான அறிவிப்பை வெளியிட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் அதற்கான நிதி மற்றும் வாக்குச்சீட்டு அச்சிடுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று செவ்வாய்க்கிழமை கூடியது....

கீரிமலை சிவன் கோவில் இடித்து அழிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைப்பு! சைவ மக்கள் கடும் கண்டனம்

கீரிமலை சிவன் ஆலயம் முழுமையாக இடித்து அழிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ள விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வலி. வடக்குப் பகுதியில் உள்ள கீரிமலை கிருஸ்ணன் ஆலயத்தின் ஆலய நிர்வாகத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை கடற்படையினர் பாதுகாப்பு வலயத்திற்குள் சென்று ஆலயத்தின் தற்போதைய நிலையை பார்வையிட்ட போது இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கீரிமலை சிவன்...

உக்ரைன் யுத்த கைதியை ஈவிரக்கமின்றி சுட்டுக்கொன்ற ரஷ்ய படை!

உக்ரைனின் நிராயுதபாணியான போர்க் கைதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பதுங்குழியொன்றில் இருந்த உக்ரைன் போர் வீரரை சுட்டுக்கொல்லும் காணொளியும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தனது நாட்டை சேர்ந்த போர்க்கைதியை சுட்டுக்கொன்ற ரஸ்ய படையினரை கண்டுபிடிக்கப்போவதாக உக்ரைன் சூளுரைத்துள்ளதுடன் கொலைகாரர்களை நாங்கள் கண்டுபிடிப்போம் என்றும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர் கைதி,...

நாளை வடக்கு கிழக்கிலும் சுகாதாரத்துறையினர் வேலை நிறுத்தம்!

இலங்கை முழுவதும் உள்ள 33 தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன. அதற்கமைய நாளை (8) வடக்கு கிழக்கில் உள்ள ஸ்ரீ லங்கா சுகாதார சேவைச் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து சுகயீன விடுமுறைப் போராட்டம் மேற்கொள்ளவிருக்கின்றனர். அதேவேளை நாளை நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கவனயீர்ப்பு போராட்டம்...

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு!!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுப்பெற்றுள்ளது. அதன்படி, இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 318.30 ரூபாவாகவும் விற்பனை விலை 335.75 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக கண்டெடுப்பு!

வவுனியா குட்செட்வீதி,உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்குபேரின் சடலங்கள் பொலிசாரால் இன்று மீட்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்றையதினம் குறித்த வீட்டின் உரிமையாளருக்கு அவரது நண்பர் ஒருவர் தொலைபேசி அழைப்பினை ஏற்ப்படுத்தியுள்ளார். எனினும் அவர் பதிலளிக்கவில்லை. இதனையடுத்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்போது குறித்த...

ஏனைய பரீட்சைகளும் தாமதமாகலாம் – ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பமாவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தினால், ஏனைய பரீட்சை அட்டவணை திட்டமிடல்கள் தாமதமாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார். நாளாந்த ஊதியம் 2,000 ரூபாய் என வரம்புக்குட்படுத்தப்பட்டதன் காரணமாக ஆசிரியர்கள் மதிப்பீட்டு பணிக்கு விண்ணப்பிக்கவில்லை என்றும் அவர்...

யாழ்.மாவட்டத்தில் பிறப்பு வீதம் குறைகிறது! 50 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் – ஆறு திருமுருகன்

யாழ்.மாவட்டத்தில் பிறப்பு வீதம் குறைந்து செல்கின்ற நிலையில் இன்னும் சில வருடங்களில் சுமார் 50 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக சிவ பூமி அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் எச்சரிக்கை விடுத்தார். கடந்த சனிக்கிழமை யாழ் உரும்பராயில் இடம் பெற்ற ஞான வைரவர் அறக்கட்டளை நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான கற்றல் பொருட்கள் வழங்கும்...
Loading posts...

All posts loaded

No more posts