டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி!!

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாக்கிழமை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 319.84 ஆகவும், விற்பனை பெறுமதி 335.68 சதமாகவும் பதிவாகியுள்ளது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து டொலர் மற்றும் ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்ந்து...

யாழ்.இந்துக் கல்லுாரி மாணவன் பாடசாலை நேரத்தில் தற்கொலைக்கு முயற்சி!

யாழ்.இந்துக் கல்லுாரியில் தரம் 10ல் கல்வி கற்கும் மாணவன் பாடசாலை நேரத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, குறித்த பாடசாலையில் தரம் 10ல் கல்வி கற்கும் மாணவன் பாடசாலையின் மேல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். எனினும் தெய்வாதீனமாக அருகில் இருந்த மின் வயரில் சிக்குண்டதன்...
Ad Widget

யாழ்ப்பாணத்தில் 5 சந்தேக நபர்கள் கைது!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு வாள்கள் மற்றும் களவாடப்பட்ட 3 மூன்று மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த வருடம் பத்தாம் மாதம் காரைநகர் பகுதியிலுள்ள வீடொன்றில் இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற...

யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவின் போது சிறிதரன் ஆதரவு கோரினார் – டக்ளஸ் தரப்பு!

யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவின் போது, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிடம் ஆதரவு கோரினாரென அந்த கட்சியின் யாழ்.மாவட்ட ஊடக பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று(திங்கட்கிழமை)இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கடந்த காலத்திலும் இலங்கை...

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான கடலை 7 நீச்சல் வீர, வீராங்கனைகள் ஒரே நேரத்தில் நீந்தி சாதனை!!

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 10 மணி நேரம் 45 நிமிடங்களில் 7 நீச்சல் வீர, வீராங்கனைகள் ஒரே நேரத்தில் நீந்தி சாதனை படைத்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ளது திறந்த நீர் நீச்சல் அறக்கட்டளை. இதில் பெங்களூரைச் சேர்ந்த, பிரசாந்த் ராஜண்ணா, ராஜசேகர் துபரஹள்ளி, ஜெயப்பிரகாஷ் முனியல் பாய், அஜத் அஞ்சனப்பா...

யாழ்.நாகர் கோவிலில் துப்பாக்கி சூடு – ஆலய சப்பர கொட்டகைக்கும் தீ வைப்பு

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் பொலிஸாருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு துப்பாக்கி சூட்டில் முடிவடைந்தது. துப்பாக்கி சூடுகள் நடத்தப்பட்டு , அப்பகுதிகளில் துப்பாக்கி சன்னங்களின் வெற்றுக்கோதுகள் காணப்படுகின்ற போதிலும் , பொலிஸார் தாம் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என தெரிவித்துள்ளனர். அவ்வாறாயின் யார் துப்பாக்கி சூடு நடத்தியது எனவும் ? பொலிஸார்...

பப்பூவா நியூ கினியா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பப்பூவா நியூ கினியா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சுமார் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பப்புவா நியூ கினியா நாட்டின் கிழக்கு பகுதிதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை குறித்த எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

வேலை நிறுத்தம் செய்வோரின் சொத்துக்கள் பறிமுதல்! வேலையும் பறிபோகும் – கடும் எச்சரிக்கை

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், நாடு நெருக்கடியான தருணத்தில் இலங்கையில் வேலைநிறுத்தம் செய்வதால் இந்த வேலைத்திட்டத்தை சீர்குலைக்க இடமளிக்கப் போவதில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் வேலைநிறுத்தம் மற்றும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் அனைத்து...

உள்ளூராட்சித் தேர்தல் மீண்டும் தாமதமாகும் சாத்தியம்?

உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திட்டமிட்ட திகதிகளில் இடம்பெறுவது மீண்டும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் இடம்பெறவேண்டும் என்றால் தபால் வாக்குச் சீட்டுகளை மார்ச் 21 ஆம் திகதிக்குள் தமக்கு கிடைக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. எவ்வாறாயினும் இன்றைய தினத்திற்குள் உரிய நிதி ஒதுக்கீடுகள் கிடைத்தால் குறிப்பிட்ட திகதிக்குள் அவற்றை அச்சிட முடியாது...

பகிடிவதையால் தற்கொலைக்கு முயன்ற மொறட்டுவ பல்கலைகழக மாணவன்!!

மொறட்டுவ பல்கலைகழகத்தில் கல்வி பயிலும் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவன் பகிடிவதையினால் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார். வறுமையான குடும்பப் பின்னணியி லிருந்து மொறட்டுவ பல்கலைக்கழகத் துக்குத் தெரிவான 23 வயதான மாணவனே பகிடிவதைக் கொடுமையால் இவ்வாறான ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளான். சிரேஷ்ட மாணவர்கள் தினமும் இரவு 6...

யாழ்.மாவட்டத்தில் 13 ஆயிரத்து 888 பேர் போதிய உணவில்லாமல் வாடுகின்றனர்! – மாவட்டச் செயலகம்

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு உற்பட்ட 15 பிரதேச செயலக பிரிவுகளில் போதிய உணவு இல்லாமல் 13 ஆயிரத்து 888 பேர் இருப்பதாக யாழ்.மாவட்ட செயலக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் பிரகாரம் யாழ்.மாவட்டத்தில் போதிய உணவில்லாமல் இருப்போர் பட்டியலில் ஊர்காவற்துறை பிரதேச செயலகம் 2 ஆயிரத்து 966 பேருடன் முதலிடத்தையும் இரண்டாவது இடத்தை 2ஆயிரத்து 618 பேருடன்...

எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு மிரட்டல்!!

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற திருத்த வேலை காரணமாக பெற்றோல் வழங்க மறுத்ததால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள் வந்த இருவர் மிரட்டல் விடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இந்தச் சம்பவம் நேற்றிரவு 9 மணியளவில் இடம் பெற்றுள்ளது. நாவற்குழி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றது போன்றதொரு சம்பவம் தங்களுக்கும்...

ஜனநாயக விரேத செயற்பாடுகளை மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக கஜேந்திரகுமார் அறிவிப்பு

இலங்கையில் தற்போது நடைபெறுகின்ற பிற்போக்குத் தனமான ஜனநாயக விரேத செயற்பாடுகளை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அதற்காக எதிர்வரும் 15ஆம் திகதி ஜெனிவாவுக்குச் செல்லவுள்ளதாகவும் இதன்போது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதையும் இலங்கையை சர்வதேச நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்...

இந்தியாவில் தீவிரமடையும் நோய்த்தொற்று!!

கோவிட் போன்ற அறிகுறியுடன் இந்தியாவின் சில மாநிலங்களில் புதுவிதக்காய்ச்சலொன்று பரவி வருகிறது. இவ்வைரஸ் காய்ச்சல் தொடர்பில் இலங்கை மருத்துவர்களும் விஷேட கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது H3N2 எனப்படும் வைரஸினால் ஏற்படுத்தப்படும் காய்ச்சல் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், இந்திய மருத்துவ கூட்டமைப்பும்...

எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் முடங்கும் பாடசாலைகள்!!

எதிர்வரும் 15ஆம் திகதி அதாவது நாளை மறு தினம் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தினத்தில் ஆசிரியர் - அதிபர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஆசிரியர் - அதிபர் சங்க சம்மேளம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள...

பாக்முட் நகரில் முன்னேறும் ரஷ்ய படைகள்: உக்ரைனுக்குள் ரஷ்யாவிற்கான சாலை திறக்கப்படும் அபாயம்

வாழவே தகுதியில்லாத அளவிற்கு உக்ரைனின் பல நகரங்கள் போரால் உருக்குலைந்துள்ளது. இந்நிலையில் உக்ரைனின் எல்லை நகரமான பாக்முட் நகரம் ரஷ்ய படைகளின் கைகளில் வீழும் நிலை ஏற்பட்டுள்ளது. பாக்முட் நகரம் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டால் உக்ரைனுக்குள் ரஷ்யாவிற்கான சாலை திறக்கப்பட்டு விடும் என உக்ரைன் அதிபர் கவலை தெரிவித்துள்ளார். ரஷ்யப் படைகள் பாக்முட் நகரை...

யாழ். மாநகர சபையின் கூட்டம் கோரமின்மை காரணமாக ஒத்தி வைப்பு!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் இடைக்கால முதல்வர் தெரிவுக் கூட்டம், கோரமின்மை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தெரிவுக்கான புதிய திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்ட வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாநகர சபையின் எஞ்சியுள்ள பதவிக் காலத்துக்குப் புதிய இடைக்கால முதல்வரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக...

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி கைது!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா வவுனியா பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்மைநிலையினை வலியுறுத்துமாறு கோரி அவர்கள் போராட்டம் மேற்கொண்டுவரும் கொட்டகைக்கு சட்டவிரோதமாக மின்சாரத்தினை பெற்றனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குறித்த சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார், “நாம் கடந்த 2210...

எரிபொருள் விலை குறைக்கப்படும் என அறிவித்தது அரசாங்கம்!

எதிர்வரும் காலங்களில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அமைச்சர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளால் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வடைந்து வருகின்றது எனவும் அவர் கூறியுள்ளார். அண்மைய நாட்களில் ரூபாயின் பெறுமதி வலுவடைந்து வருவதால், புதிய எரிபொருள் இருப்புக்கள்...

நாமலுக்கும் சமலுக்கும் புதிய பதவிகள்!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, நாமல் ராஜபக்ஷ மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ‘புதிய நியமனம் கிடைத்தமை பெருமையாக உள்ளது’ என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...
Loading posts...

All posts loaded

No more posts