Ad Widget

மணிவண்ணன் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

யாழ். மாநகர முதல்வர், சட்டத்தரணி வி. மணிவண்ணன் சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். யாழ். மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட காவல்படை தொடர்பாக மாநகரசபை முதல்வரும், சட்டத் தரணியுமான மணிவண்ணன் பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவினரால் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் அலுவலகத்திற்கு...

யாழ். முதல்வர் மணிவண்ணனை சந்திக்கச் சென்ற சட்டத்தரணிகளுக்கு அனுமதி மறுப்பு

விடுதலைப்புலிகளை மீள் உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை சட்டத்தரணிகள் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. யாழ்.மாநகர சபையின் காவல் படை விவகாரம் தொடர்பில் நேற்று வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட முதல்வரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து சுமார் 6...
Ad Widget

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீது அமெரிக்க மிஷன் திருச்சபையை சேர்ந்தவர்கள் தாக்குதல்!!

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீது அமெரிக்க மிஷன் திருச்சபையை சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்தப்படும் நபர்கள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். கல்லூரியின் அதிபர் விடுதி மற்றும் அது அமைந்துள்ள காணி யாருக்கு சொந்தம் என கல்லூரி நிர்வாகத்திற்கும் அமெரிக்க மிஷனுக்கும் இடையில் பிரச்சனை நிலவி வருகின்றனர். மாணவர்கள் துவிச்சக்கரவண்டிகளை நிறுத்தும் இடம் தமக்கு சொந்தமானது எனவும் அதில்...

யாழ்.மாநகரில் பிசிஆர் பரிசோதனைக்கு ஒத்துழைக்காத வர்த்தகர்களை கடை திறக்க அனுமதி மறுப்பு!!

யாழ்ப்பாணம் மாநகர மத்தியில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மூடப்பட்டிருந்த வர்த்தக நிலையங்களைச் சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்கள் 300 பேர் வரை இரண்டாவது பிசிஆர் பரிசோதனையை நடத்தாததால் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்களுக்கான பிசிஆர் மாதிரிகளை இன்று பெறுவதற்கான நடவடிக்கையை யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி முன்னெடுத்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சந்தை, கடைத்...

பொது சுகாதார பரிசோதகர்கள் பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை!!

பண்டிகை காலங்களில் தன்னிச்சையாக செயல்படுவதைத் தவிர்க்குமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தினர் பொது மக்களிடம் கோரியுள்ளனர். புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, நாட்டின் மூன்றாவது அலை தாக்காம் தோற்றம் பெறாத வகையில் அவதானத்துடன் செயற்படுவது பொதுமக்களின் பொறுப்பாகும் என்று பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்....

யாழில் மற்றுமொருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டுவந்த வயோதிபப் பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை மரணித்தவர்களின் எண்ணிக்கை எட்டாகப் பதிவாகியுள்ளது.

வடக்கில் மேலும் எட்டுப் பேருக்கு கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் எட்டுப் பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறிப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதன்படி, யாழ்ப்பாணத்தில் ஏழு பேருக்கும் கிளிநொச்சியில் ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் 352 பேரின் மாதிரிகள் நேற்று (வியாழக்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், யாழ். போதனா வைத்தியசாலையில்...

யாழ்.மாநகர சபை அறிமுகப்படுத்திய சீருடை விவகாரம்: யாழ்.மாநகர சபை முதல்வர் கைது

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 1.45 மணியளவில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபையால் அறிமுப்படுத்தப்பட்டுள்ள மாநகர காவல் படையின் சீருடை தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக நேற்று இரவு 8 மணியளவில் பொலிஸ் நிலையத்துக்கு விஸ்வலிங்கம் மணிவண்ணன் அழைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவரிடம்...

மாநகர காவல் படையின் சீருடை வடிவத்தில் உள்ளநோக்கம் இல்லை!! – மணிவண்ணன்

யாழ். மாநகர சபையால் அறிமுப்படுத்தப்பட்டுள்ள மாநகர காவல் படையின் சீருடை வடிவத்தில் எந்தவொரு உள்ளநோக்கமும் பிரதிபலிப்பும் இல்லையென மாநகர முதல்வர் சட்டதரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தப் புதிய முயற்சி கொழும்பு மாநகர சபையின் முன்னுதாரணமான செயற்பாட்டைப் பின்பற்றியே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் இன்று (வியாழக்கிழமை) ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ். மாநகர சபையால்...

யாழ். மாநகர சபை காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவு – சீருடைகளும் பறிமுதல்!

யாழ். மாநகர சபை காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறு மாநகர சபைக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். அத்தோடு, காவல் படையின் சீருடையைப் பெற்று அதனை கொழும்புக்கு கொண்டுவரவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாநகரின் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாயும் வெற்றிலை துப்பினால் 2ஆயிரம் ரூபாயும் தண்டப் பணம் அறவிடப்படவுள்ளதாக மாநகர முதல்வர்...

யாழ். மாநகர ஆணையாளரிடம் பொலிஸார் தீவிர விசாரணை!

யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்ட காவல் படை தொடர்பில் மாநகர ஆணையாளரிடம் 3 மணி நேரத்துக்கு மேலாக வாக்குமூலம் பெறப்படுகிறது. காவலாளி சேவையை நடத்துவதற்கே பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில் காவல் படை என்ற பெயரில் அரச துறையில் ஐவரை கடமைக்கு அமர்த்தியமை தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதாக விடயம் அறிந்த...

புலிகளின் தலைவரின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த கோப்பாய் இளைஞன் விளக்கமறியலில்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் விசாரணைகளின் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ஆம்...

யாழ்ப்பாணத்தில் மேலும் 129 பேருக்கு கோரோனா தொற்று; 88 பேர் பாற்பண்ணை கிராமத்தில்!!

யாழ்ப்பாணத்தில் மேலும் 129 பேருக்கும் கோரோனா தொற்று உள்ளமை நேற்று புதன்கிழமை இரவு கிடைத்த பிசிஆர் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்களில் 88 பேர் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் பாற்பண்ணை – பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார். ஸ்ரீ...

யாழில் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் எச்சில் துப்பினால் 2 ஆயிரம் ரூபாயும் வீதிகளில் கழிவுகளை வீசினால் 5 ஆயிரம் ரூபாயும் தண்டமாக அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய போதே முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் இந்த அறிவிப்பை விடுத்தார். இதேவேளை மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் சுகாதார...

யாழ் நகரில் சில கடைகளை நாளை திறக்க நடவடிக்கை – வி. மணிவண்ணன்

மூடப்பட்டிருந்த கடைகளில் அரைவாசிக்கு மேற்பட்ட கடைகள் இன்று திறக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த 26 ஆம் திகதியிலிருந்து யாழ் நகர வியாபாரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக மூடப்பட்டிருந்த வர்த்தக...

கொரோனா தொற்றின் புதிய கொத்தணி உருவாகக்கூடும் – சுகாதார அமைச்சு

நாளாந்தம் 100 ற்கும் மேற்பட்ட நோயாளிகளை அடையாளம் காணப்படுவதால் நாட்டில் கொரோனா தொற்றின் புதிய கொத்தணி உருவாகக்கூடும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர, மக்கள் அதிகளவில் கூடும் இடங்கள் இன்னும் ஆபத்தில் உள்ளன என கூறினார். ஆகவே முக்கவசம் அணிவதுமற்றும்...

யாழ். மாநகர சபையால் முதன்முறையாக காவல் படை உருவாக்கம்!

யாழ். மாநகர சபையால் முதன்முறையாக காவல் படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த மாநகரப் பாதுகாப்புப் படை நாளை அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ள நிலையில், இன்று (புதன்கிழமை) பரீட்சார்த்தப் பணியை குறித்த காவல்படை முன்னெடுத்துள்ளது. இதன்படி, நல்லூர் சுற்றாடலில் வாகன ஒயில் ஊற்றப்பட்டுள்ள நிலையில், விபத்துக்களைத் தவிர்க்கும் முகமான முன்னாயத்த நடவடிக்கைகளை இந்த மாநகர காவல் படை கண்காணித்தது....

உள்நாட்டுப் போரினால் உடல் ஊனமுற்ற பொதுமக்களுக்கு இராணுவத்தினரால் இலவச செயற்கை கால்கள்!!

யுத்தத்தின் போது கைகால்களை இழந்த 64 முன்னாள் போராளிகளிற்கு செயற்கை கை, கால்களை இராணுவம் வழங்கவுள்ளது. இதில் 58 ஆண்களும் ஆறு பெண்களும் அடங்குவர். அவர்கள் தற்போது வடக்குப் பகுதிகளில் சிவில் பாதுகாப்புத் துறையில் பணியாற்றுகிறார்கள். ஏப்ரல் 5 மற்றும் 6 திகதிகளில் அனுராதபுரத்தில் உள்ள அபிமன்சல போர் மாவீரர்கள் நல மையத்தில் அவர்களின் அளவீடுகள்...

யாழ் மத்திய பேருந்து நிலையம் வழமைக்கு திரும்பியது!

யாழ் மத்திய பேருந்து நிலையம் இன்று (7) காலை முதல் வழமைக்கு திரும்பியுள்ளது. அரச, தனியார் பேருந்துகள் வழக்கம் போல சேவைகளை ஆரம்பித்துள்ளன. யாழ் நகரில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி நகரின் சில பகுதிகள் முடக்கப்பட்டன. இதன்படி, மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட பயணிகள்...

யாழ்.பல்கலையில் க.பொ.த. உயர்தரத்தில் ஆங்கில பாடத்தை தெரிவு செய்யும் மாணவர்களுக்கு விழிப்பூட்டல் கருத்தமர்வு

கல்விப் பொதுத்தராதர உயர்தர ஆங்கில பாடம் (பாட இலக்கம்: 73) தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆங்கிலத் துறைத் தலைவர் சுவாமிநாதன் விமல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் பிரதான பாடங்களில் ஒன்றாக மாணவர்கள் தெரிவு...
Loading posts...

All posts loaded

No more posts