Ad Widget

உள்நாட்டுப் போரினால் உடல் ஊனமுற்ற பொதுமக்களுக்கு இராணுவத்தினரால் இலவச செயற்கை கால்கள்!!

யுத்தத்தின் போது கைகால்களை இழந்த 64 முன்னாள் போராளிகளிற்கு செயற்கை கை, கால்களை இராணுவம் வழங்கவுள்ளது.

இதில் 58 ஆண்களும் ஆறு பெண்களும் அடங்குவர். அவர்கள் தற்போது வடக்குப் பகுதிகளில் சிவில் பாதுகாப்புத் துறையில் பணியாற்றுகிறார்கள். ஏப்ரல் 5 மற்றும் 6 திகதிகளில் அனுராதபுரத்தில் உள்ள அபிமன்சல போர் மாவீரர்கள் நல மையத்தில் அவர்களின் அளவீடுகள் பெறப்பட்டன.

சிவில் பாதுகாப்புத் துறையின் நிதியுதவியுடன் மற்றும் இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த திட்டம் இராணுவத்தால் செயல்படுத்தப்படுகிறது.

ராகமவில் உள்ள ரணவீரு சேவனவில் அமைந்துள்ள புரோஸ்டீசஸ் மற்றும் ஆர்த்தோடிக்ஸ் தயாரிப்பதற்கான பட்டறையில் தேவையான செயற்கை கால்கள் தயாரிக்கப்படும்.

இதேவேளை, உள்நாட்டுப் போரினால் உடல் ஊனமுற்ற பொதுமக்களுக்கு இலவச செயற்கை கால்களை வழங்கவும் இராணுவம் திட்டமிட்டுள்ளது. செயற்கை கால்கள் தேவைப்படுபவர்களை தொடர்புகொள்ளுமாறு இலங்கை இராணுவம் கோருகிறது. ராகமவில் உள்ள ரணவீரு சேவனவை 0112958077 என்ற தொலைபேசியிலோ அல்லது அனுராதபுரத்தில் அபிமன்சலவை 0252225151 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

Related Posts