Ad Widget

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்தது – 274 இறப்புக்களும் பதிவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 770 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 768 பேரும் சவுதி அரேபியா மற்றும் குவைட்டில் இருந்து நாடு திரும்பிய 2 பேரும் அதில் உள்ளடங்குவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது....

யாழ். முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் ஆரம்பம்

யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் நேற்று (புதன்கிழமை) பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டன. யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி கடந்த 8ஆம் திகதி இரவு பல்கலைக்கழக நிருவாகத்தினால் இடித்து அழிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தொடர் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்....
Ad Widget

வடமராட்சி கடற்பரப்புக்குள் அத்துமீறி இந்திய மீனவர்கள் அட்டூழியம்!!

வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி தொழில் ஈடுபட்டுள்ள இந்திய மீனவர்கள் பருத்தித்துறை மீனவரின் வலைகளை அறுத்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. “பருத்தித்துறை சுப்பர்மடம் இறங்குதுறையிலிருந்து 15 கிலோ மீற்றர் தொலைவில் தொழிலுக்காக இன்று அதிகாலை படகில் சென்றேன். அங்கு இந்திய மீனவர்களின் 4 படகுகள் தொழிலில் ஈடுபட்டிருந்ததுடன், எனது...

கொவிட் தடுப்பூசிகளை வழங்க இலங்கையின் அனுமதிக்காக காத்திருக்கும் இந்தியா

தமது நாட்டில் தயாரிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசிகளை வழங்குவதற்கு தேவையான ஒங்குமுறை அனுமதிகளை இலங்கை உறுதிப்படுத்தும் வரையில் காத்திருப்பதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொவிட் -19 தடுப்பூசிகளை வழங்குவதற்காக அண்டை நாடுகளில் இருந்து பல கோரிக்கைகளை பெற்றுள்ளதாக இந்திய அரசாங்கம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இக் கோரிக்கையைத் தொடர்ந்து, பூட்டான், மாலத்தீவு, பங்களாதேஷ், நேபாளம், மியான்மர்...

யாழ்.மாநகரில் ஒரே குடும்பத்தில் ஐவருக்கு கோரோனா தொற்று!!!

யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அவர்கள் சுயதனிமைப்படுத்தலில் இருந்த அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்....

மன்னாரில் முதலாவது கோவிட் -19 நோயாளி உயிரிழப்பு

மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று உயிரிழந்தவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் முதலாவது கோவிட் -19 நோயாளி உயிரிழந்துள்ளார். வடக்கு மாகாணத்தில் இரண்டாவது நபர் கோவிட் -19 நோயால் உயிரிழந்துள்ளார். மன்னார் உப்புக்குளத்தைச் சேர்ந்த 57 வயதுடைய இஸ்லாமியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இருதய நோயாளியான அவர்...

அரிசி, மா, சீனி உள்ளிட்ட 10 அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய விலை!

10 அத்தியாவசியப் பொருட்களுக்கு ஆறு மாதங்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த கட்டுப்பாட்டு விலை எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதியிலிருந்து ஆறு மாத காலத்திற்கு நடைமுறையிலிருக்கும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கட்டுப்பாட்டு விலையின் பின்னர் அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கென விநியோகஸ்தர்களுக்கான விலைமனு கோரல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்....

ஒளடத பாணியை நான் கூறியவாறு பயன்படுத்தாமையே தொற்று ஏற்பட காரணம் – தம்மிக்க

கொரோனாவுக்கு எதிரான ஒளடத பாணியை தாம் கூறியவாறு பருகியிருந்தால், ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்படாது என கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டார தெரிவித்துள்ளார். கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டார என்பவரினால் கொரோனா வைரஸுக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ஒளடத பாணியை பருகிய சில பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. குறிப்பாக தம்மிக்க பண்டார கூறியவாறு,...

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி...

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க நிதி உதவி வழங்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் மீளவும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவியைக் கோரி மாணவர் ஒன்றியம் அழைப்புவிடுத்துள்ளது. இதுதொடர்பில் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து கடந்த 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு இடித்து அகற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியானது பல்கலைக்கழக மாணவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம் மூலமாகவும் மாணவர்களின் போராட்டத்தின் மூலமாகவும்...

அடுத்த மாத இறுதிக்குள் 11 மில்லியன் இலங்கையர்களுக்கு தடுப்பூசி!

அடுத்த மாத இறுதிக்குள் 11 மில்லியன் இலங்கையர்கள் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வார்கள் என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், 50 வீதமானோருக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார். இதேவேளை கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தற்போது நான்கு கொரோனா தடுப்பூசி...

கொரோனாவைக் கட்டுப்படுத்தாவிட்டால் ஜனவரிக்கு பின்னர் என்ன நடக்கும் என்பது தெரியாது – GMOA எச்சரிக்கை

கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் பின்பற்றிய தந்திரோபாய அணுகுமுறையை இலங்கை பின்பற்றாவிட்டால் ஜனவரிக்கு பின்னர் என்ன நடக்கும் என்பது தெரியாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸிற்கு எதிரான தந்திரோபாய அணுகுமுறை அவசியம் என்றும் அது தங்கள் நாட்டிற்கு பொருந்தும் விதத்தில் பயன்படுத்தவேண்டும் எனவும் அந்த சங்கத்தின் வைத்தியர் ஹரித்...

மண்டைதீவில் கடற்படைக்கு காணி பறிக்கும் முயற்சி மக்களின் எதிர்பால் இடைநிறுத்தம்

மண்டைதீவில் கடற்படையினருக்கு 18 ஏக்கர் காணிகளைச் சுவீகரிப்பதற்காக, நில அளவீடு செய்யும் முயற்சி, பொதுமக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது. மண்டைதீவு கிழக்குப் பகுதியில் 11 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கர் பளப்பளவு கொண்ட தனியார் காணியை ஆக்கிரமித்து கடற்படையினர் நிலைகொண்டுள்ளனர். இந்தக் கடற்படைத் தளத்துக்காக, 18 ஏக்கர் காணிகளையும் சுவீகரிப்பதற்கு முடிவு செய்துள்ள அரசு, அதற்காக அளவீட்டுப்...

யாழ்ப்பாண பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பிரச்சினையில் இந்தியா தலையீடு

யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை கட்டுவது தொடர்பான செய்தியொன்று இந்தியாவிலிருந்து இலங்கைத் தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நள்ளிரவில் இடித்தழிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பை அடுத்து இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். இதன்போது முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்ட சம்பவமானது தென்னிந்திய மாநிலமான தமிழகத்தில் எதிர்ப்புக்களை மேலும்...

யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று!!

யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (திங்கட்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தினார். மேல் மாகாணத்திலிருந்து வந்த இருவர் பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....

புராதன ஆதிசிவன் அய்யனார் ஆலயம் இருந்த பகுதியில் பௌத்த விகாரைகள் இருந்ததாக தெரிவித்து அகழ்வு ஆராய்ச்சி

தமிழ் மக்களுக்கு சொந்தமான புராதன ஆதிசிவன் அய்யனார் ஆலயம் அமைந்துள்ள வயல் நிலங்கள் காணிகள், உள்ளடங்கிய குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை மற்றும் மணலாறு படலைக்கல்லு பகுதி ஆகிய இடங்களில் இரண்டு புராதன பௌத்த விகாரைகள் இருந்தமைக்கான தொல்லியல் சிதைவுகள் காணப்படுவதாக தெரிவித்து இராணுவத்தின் அனுசரணையுடன் தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வு ஆராய்ச்சி பணிகள் இன்று (18.01.2021)...

18 வயதுக்கு மேற்பட்ட இலங்கையர்கள் அனைவருக்கும் இராணுவப் பயிற்சி?

சமுதாயத்தை மேலும் ஒழுக்கமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்கப்படவேண்டும் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர யோசனை முன்வைத்துள்ளார். அமைச்சரின் இந்த முன்மொழிவை எதிர்க்கட்சி கடுமையாக எதிர்த்துள்ளது. இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பரவல் தாக்கம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த புகையிரத சேவைகள் இன்று முதல் மீண்டும் வழமைக்குத் திரும்புகின்றன. இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு புகையிரதங்கள் இன்று கொழும்பை நோக்கித் தமது பயணத்தினை ஆரம்பித்துள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் பிரதீபன் எமது கெப்பிட்டல் செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், முதலாவது புகையிரதம் காங்கேசன்துறையில் இருந்து காலை...

இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது என எச்சரிக்கை

இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது என பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மிக மோசமாக பரவிக்கொண்டுள்ள நிலையில் அரசாங்கம் நாட்டினை திறக்கும் நடவடிக்கைகள் ஆரோக்கியமானதல்லவெனவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் நிலைமைகள் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே பொது சுகாதார அதிகாரிகள் சங்கத்தின்...

ஐஸ் கிறீமில் கொரோனா வைரஸ்!!

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் ஐஸ் கிறீமிலும் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பெருந்தொகை ஐஸ் கிறீம் அடங்கிய பெட்டிகள் அழிக்கப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த தொழிற்சாலையும் மூடப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. வைரஸ் வௌவால் மற்றும் பாம்பில் இருந்து உருவானதாக தகவல்கள்...
Loading posts...

All posts loaded

No more posts