Ad Widget

தடுப்பூசி கிடைக்க எவ்வளவு காலம் எடுக்குமென உறுதியாகக் கூற முடியாது; அதுவரை யாருக்கும் எங்கும் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு – மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

“கோவிட் – 19 தொற்று நோயால் இருண்ட பயணத்தில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகள் ஒளிக்கீற்றுக்களாக தெரிகின்றன. இந்தப் பேரவலத்திலிருந்து இவை மக்களை மீட்டெடுக்கும் என்கின்ற நம்பிக்கை பிறந்திருக்கின்றது. ஒரு நாட்டில் கோரோனா தொற்று பரம்பலை முற்றாக நிறுத்த வேண்டுமாயின் அந்த நாட்டு சனத்தொகையின் 70 சதவீதமான மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். இந்த இலக்கை அடைந்தால்தான்...

தரம் 01 மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு அடுத்த மாதம்

தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வை அடுத்த மாதம் நடத்துவதற்கு திட்டமிட்டிருப்பதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அவர் கூறினார். எனினும் மேல் மாகாணம் மற்றும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் தற்போதைய சூழ்நிலைகளுக்கு மத்தியில் மறு...
Ad Widget

வாக்குறுதியை மீறி அரசாங்கம் செயற்பட முடியாது- சுமந்திரன்

சர்வதேசத்திற்கும், இந்தியாவிற்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசாங்கத்துக்கு சொல்லியிருப்பதாக நாடாளுமன்ற. உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜெனிவா விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையிலான ஆலோசனைக் கூட்டம் வவுனியா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் பின்னர் கருத்தத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய கடலோரக் காவல்படையால் கைது!

இலங்கையின் வடக்கு பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் இந்திய கடலோரகக் காவல்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள், மீன் பிடிக்கச் சென்ற படகின் வெளி இணைப்பு இயந்திரம் பழுதடைந்த நிலையில் திசைமாறி இந்தியாவின் புஸ்பவனம் கடற்பகுதிக்குச் சென்றிருந்த நிலையில் அவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கைதாகியுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மூவரிடமும் கடலோர காவல்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்....

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக சுரேன் ராகவன் தெரிவித்துள்ள கருத்து

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை பொறுத்தவரை நல்லதொரு தீர்வு நிச்சயம் எட்டப்படுமென நம்புவதாக வடக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அரச நாளிதழொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சுரேன் ராகவன் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் அரசியல் கைதிகள் விடயம் பற்றி நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னரும் கதைத்திருக்கின்றேன்...

இந்த வருடத்தில் ஏழு மாவட்டங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை

நாட்டின் ஏழு மாவட்டங்களில் கடந்த 3 தினங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை என கொவிட்19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, பதுளை, யாழ்ப்பாணம், கேகாலை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலேயே குறித்த தினங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மட்டக்களப்பு,...

விசித்திரமான அழைப்புக்கள் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!!

ஏதேனும் பரிசுப் பொருள் அல்லது பணத்தொகையொன்றை வெற்றி பெற்றிருப்பதாக தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்களினூடாக கிடைக்கின்ற போலி தகவல்கள் குறித்து பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பரிசுப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்காக குறிப்பிட்ட தொகை பணத்தை வங்கியில் வைப்புச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட மோசடிக்காரர்களிடமிருந்து இவ்வாறான கோரிக்கைகள் விடுக்கப்படுவதாக பொலிஸ்...

பைசர் தடுப்பு மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகிக்க WHO அனுமதி

கொரோனா வைரசுக்கு எதிரான பைசர் தடுப்பு மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தி கொள்ள உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதன்பின் உலக நாடுகளுக்கு பாதிப்புகள் பரவின. இவற்றில் அமெரிக்கா அதிக அளவில் பாதிப்புகளை சந்தித்து வருகிறது....

புதைக்கப்பட்ட நிலையில் சிசுவின் சடலம் மீட்பு – அரியாலையில் சம்பவம்

இளம் பெண் ஒருவருக்குப் பிறந்த சிசுவை மண்ணுக்குள் புதைத்தமை தொடர்பில் சம்பவ இடத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அரியாலை, புங்கங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றின் வளாகத்திலிருந்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 24 வயதுடைய திருமணமாகாத பெண் ஒருவர் குருதிப்போக்குக் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு குழந்தை பிறந்துள்ளமை தொடர்பில் சட்ட...

வாகனம் வேண்டாம்; ஊதியம், எரிபொருள் கொடுப்பனவுகள் பொதுப் பணிகளுக்கு – முதல்வர் மணிவண்ணன்

மாநகர முதல்வருக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாகனம் தேவையில்லை என்று யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன், சபையின் ஆணையாளருக்கு அறிவித்துள்ளார். அத்தோடு தனது மாதாந்த ஊதியம், எரிபொருள் கொடுப்பனவை வழங்குமாறு கேட்டுள்ள அவர், அதனை சபையின் பொதுப் பணிகளுக்கு செலவிட திட்டங்களை வகுக்குமாறு கேட்டுள்ளார். தனது 37ஆவது வயதில் யாழ்ப்பாணம் மாநகரின் பிதாவாக பதவி ஏற்ற அவர்,...

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பில் நல்லூரான் பதியில் தீபம் ஏற்றி வழிபாடு

2021ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் முகமாக நல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் நள்ளிரவு 12 மணிக்கு தீபங்கள் ஏற்றப்பட்டன. 2021ஆம் ஆண்டில் உலக மக்கள் அனைவரும் நோய்த் தொற்றின்றி சாந்தியும் சமாதானத்துடனும் வாழவேண்டும் என்று சிகிச்செ தீபங்கள் ஏற்றி நல்லூரானை வழிபட்டனர். படங்கள் நன்றி – ஐ.சிவசாந்தன்

25 மாவட்டங்களுக்கும் 25 சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள்!!

நாட்டில் கொவிட்-19 பரவுவதை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டு, நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் 25 சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொவிட்-19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வாவின் உத்தரவின் பேரில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளனர்.

மருதனார்மடம் கொரோனா கொத்தணி: தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு!

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில்நேற்று (வியாழக்கிழமை) 607 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், உடுவிலில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், மருதனார்மடம் கொரோனா கொத்தணியில்...

மக்கள் ஆணைக்கும் எதிராக அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது- ஜனாதிபதி

மக்கள் ஆணைக்கும் எதிராக அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2021 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “புத்தாண்டின் விடியல், கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் நாம் எதிர்நோக்கும் சவால்களை சரியாகப்...

சுமந்திரனின் குற்றச்சாட்டுக்கு இரண்டாம் திகதிக்குப் பின்னர் பதில்- மாவை

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் தன்மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து எதிர்வரும் இரண்டாம் திகதிக்குப் பின்னர் பதிலளிக்கவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபையின் ஆட்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இழந்தமைக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் செயற்பாடுகளே காரணமென எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், கட்சியின் யாழ். மாநகர சபை உறுப்பினர்களுடனான...