Ad Widget

வாழ்வாதாரத்தை மேம்படுத்த யாழ். வணிகர் கழகம் கடனுதவி

loansயுத்தத்தால் பாதிக்கப்பட்டு வறுமையில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் யாழ். வணிகர் கழத்தால் வாழ்வாதார கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

யாழ். வணிகர் கழகத்தின் கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 9 பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை யாழ் வணிகர் கழகத்தால் 150 பேருக்கு வாழ்வாதராத்தை மேம்படுத்தும் நோக்கில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்திலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கைஎ எடுக்கப்பட்டு வருதாக யாழ வணிகர் கழத்தின் தலைவர் தெரிவித்தார்

Related Posts