Ad Widget

யாழ்ப்பாணம் -சென்னைக்கிடையிலான விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை

கொவிட் தொற்றுநோய் காரணமாக இடைநிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம் -சென்னைக்கு இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க அரசாங்கம் தயாராகி வருகிறது.

அதேவேளை இரத்மலானை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு இடையே உள்நாட்டு விமான சேவையையும் விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.

பலாலி மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களும் சர்வதேச விமான நிலையங்களாக அபிவிருத்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்திய அரசின் உதவியுடன் 300 மில்லியன் ரூபா செலவில் புனித மடு மாதா தேவாலயத்தில் யாத்திரிகர்களுக்கான 144 இடைத்தங்கல் வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை இந்திய உயர்ஸ்தானிகருடன் இணைந்து சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நாட்டி வைத்தார்.

இதன் பின்னர் உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்ட விடயங்களை தெளிவுபடுத்தினார்.

Related Posts