Ad Widget

மேலும் 21 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்பகுதியில் வைத்து, மேலும் 21 இந்திய மீனவர்கள் இன்று வியாழக்கிழமை (11) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

ஏறக்குறைய 60 அடி நீளமான படகொன்றில் வந்து மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்களே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ்.கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர் என்று அத்திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், தமிழ்நாட்டின் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பூம்புகார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்களை கடற்படையினர் தங்களிடம் ஒப்படைத்ததாகவும் மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதி பணிப்பாளர் தெரிவித்தார்.

Related Posts