Ad Widget

மிருகபலியை நிறுத்தக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

இந்து ஆலயங்களில் நடைபெறும் மிருகபலியை நிறுத்துமாறு கோரி உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்று வருகின்றது.

photo 1(9)

யாழ். மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் இடம் பெறும் மிருகபலியை நிறுத்தக்கோரி 12 மணித்தியாலம் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று அறவழிப்போராட்ட குழுவினரால் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இந்தப் போராட்டமானது இன்று காலை 6மணிக்கு தெல்லிப்பழை துர்கையம்மன் ஆலயத்துக்கு முன்னால் ஆரம்பமாகியது. இதில் அறவழிப் போராட்டக் குழுவின் அமைப்பாளர் மறவன்புலவு க.சச்சிதானந்தம், யாழ்ப்பாணம் சின்மய மிஷன் சிவனேந்திரா சைத்தனிய சுவாமி, அறவழி போராட்டக்குழுத் தலைவர் ஸ்ரீ.சக்திவேல், செயலாளர் எஸ்.தங்கராசா, சிவ மானிட மேம்பாட்டு நிறுவனத் தலைவரும் சைவ மகா சபைத்தலைவருமான க.கலயுகவரதன் உட்படப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளையில், தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வளாகத்தில் நடைபெறுவதாக இருந்த போராட்டமானது இறுதி நேரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு காங்கேசன்துறை வீதியோரத்தில் இடம் பெற்றது.

இதுதொடர்பில் அறவழிக்குழுவின் அமைப்பாளர் தெரிவிக்கையில், தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய முன்றிலில் நடாத்த ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட போதிலும் இன்று காலையில் தாம் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்க இருந்த நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் நடாத்த அனுமதி கிடைக்கவில்லை. அதனடிப்படையில் நாம் வீதி ஓரத்தில் உண்ணாவிரதப்போராட்டத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளோம் என தெரிவித்தார்.

Related Posts