Ad Widget

பெற்றோல் ஏற்றிய கப்பலொன்று 24ஆம் திகதி நாட்டை வந்தடைகின்றது!

பெற்றோல் ஏற்றிய கப்பலொன்று எதிர்வரும் 24ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கப்பலில் 35 ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோல் காணப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மற்றுமொரு கச்சா எண்ணெய் கப்பல் எதிர்வரும் 28ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எது எப்படி இருப்பினும், எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் பல நாட்களாக காத்திருப்பதனை அவதானிக்க முடிகின்றது.

Related Posts