Ad Widget

பிணையில் வந்தார் அனிதா! கமல் தொடர்ந்தும் சிறையில்

நெடுந்தீவுப் பிரதேச சபைத் தவிசாளர் டானியல் றெக்சியன் படுகொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பல மாதங்களாகச் சிறையில் இருந்த றெக்சியனின் மனைவி அனிதா இன்று செவ்வாய்க்கிழமை பிணையில் வெளியே வந்தார்.

கடந்த 29ஆம் திகதி முன்னாள் மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரன், றெக்சியனின் மனைவி அனிதா ஆகியோருக்கு நீதிமன்று பிணை அனுமதி வழங்கியபோதும், பிணை எடுக்க யாரும் முன்வராத நிலையில் அவர்கள் தொடர்ந்தும் சிறைச்சாலைக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அனிதா சார்பில் அவரது உறவினர் ஒருவர் பிணையில் எடுக்க முன்வந்ததையடுத்து அவரை ஊர்காவற்றுறை நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்தது.

நீதிமன்றத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாகவே அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். கமல் தொடர்ந்தும் சிறையிலேயே தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அவரை பிணையில் எடுக்க இதுவரை யாரும் முன்வரவில்லை என்று தெரிகிறது.

Related Posts