Ad Widget

பலாலி விமான நிலையத்தை மீளத்திறத்தல் குறித்து இந்திய உயர்ஸ்தானிகருடன் பேச்சு – சுரேஷ்

பலாலி விமான நிலையத்தை மீளத்திறத்தல் மற்றும் மன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை ஆரம்பிப்பது குறித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருடன் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், அனந்தி சசிதரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, பலாலி விமான நிலையம் மீள திறக்கப்பட வேண்டும் எனவும் மன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்ததாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

மேலும் ஜெனிவா வரைபு ஏமாற்றமளிப்பதாவும் அதனை திருத்தி அமைக்க வேண்டும் என இந்திய உயர்ஸ்தானிகரிடம் தாம் கோரியதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.

Related Posts