Ad Widget

தொல்புரத்தில் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலைய திறப்பு

ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலைய திறப்பு விழா தொல்புரம் எனும் கிராமத்தில் திறந்து
வைக்கப்பட்டது.

tholpuram

இன்று காலை 10மணியளவில் இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்ட வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் நாடாவெட்டி திறந்து வைத்தனர்.

மேலும் இந்த பராமரிப்பு நிலையத்தை இங்கிலாந்தில் பொறியியலாளராக பணியாற்றி வரும் திரு.இராஜபட்சம் சிறிரங்கபட்சம் என்பவரது நன்கொடையால் இந்த நிலையம் மீள புதுப்பிக்கப்பட்டு அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வுக்கு வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன்,சுகாதார வைத்திய அதிகாரி கேதீஸ்வரன்,வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

tholpuram-2

Related Posts