Ad Widget

சாரதிகளுக்கு விதிக்கப்படும் தண்டத்தை இனி அதே இடத்திலேயே செலுத்த முடியும்

fineபோக்குவரத்துப் பொலிஸாரால் சாரதிகளுக்கு விதிக்கப்படும் தண்டப்பணத்தை அதே இடத்திலேயே செலுத்தி சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜெனரல் எஸ்.எச்.ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.

இத் திட்டத்தை மோட்டார் போக்குவரத்து திணைக்களமும், போக்குவரத்து அமைச்சும் தபால் திணைக்களமும், பொலிஸாரும் இணைந்தே இதனைச் செயற்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இத்திட்டம் தகவல் தொழில்நுட்ப உதவியுடன் செயல்படுத்தப்படவுள்ளதுடன் இதன் மூலம் சாரதிகள் பாரிய நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts