Ad Widget

சம்பந்தனை நீக்கும் வரை ஓயமாட்டோம்! – விமல், தினேஸ்

எதிர்க்கட்சித் தலைவராக உள்ள சம்பந்தனை நீக்கிவிட்டு குமாரவெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்தே தீருவோம். அதில் விட்­டுக் ­கொ­டுப்­பிற்கு இட­மில்லை. நாம் விட்­டுக்­கொ­டுக்­கவும்மாட்டோம் என்று பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குண­வர்த்­தன மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் தெரி­வித்­தனர்.

wimal-dineshஎதிர்க்­கட்சித் தலைவர் விவ­காரம் தொடர்பில் சபா­நா­ய­கரை சந்­தித்து பேச்­சு­ நடத்­தி­யமை தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே தினேஷ் குணவர்த்தனவும் விமல் வீரவன்சவும் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டனர். இதுதொடர்பாக மக்கள் ஐக்கிய முன்னணி தலைவர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிடுகையில், ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­லி­ருந்து தெரிவு செய்­யப்­பட்டு பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சியில் இருக்­கின்ற எமது அணியில் அதி­க­மான எம்.பி.க்கள் இடம் பெற்­றுள்­ளனர். தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு மற்றும் மக்கள் விடு­தலை முன்­னணி ஆகிய கட்­சி­களில் அங்கம் வகிக்கும் எம்.பி.க்களை விட எமது அணியில் அங்கம் வகிக்கும் எம்.பி.க்களின் எண்­ணிக்கை அதி­க­மாகும்.

எனவே எமது அணிக்கே எதிர்க்­கட்சித் தலைவர் பதவி வழங்­க­வேண்டும். இந்த விடயம் தொடர்பில் நாங்கள் கடந்த வியா­ழக்­கி­ழமை சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­யவை சந்­தித்து பேச்­சு நடத்­தினோம். இதன் போது எமது பக்க நியாயம் மற்றும் எதிர்க்­கட்சித் தலைவர் பதவி எமக்கே கிடைக்­க­வேண்டும் என்­பது தொடர்­பா­கவும் விரி­வாக கலந்­து­ரை­யா­டினோம். இந்த விவ­கா­ரத்தில் எமது பக்­கத்தில் நியாயம் இருப்­பதை சந்­திப்­பின்­போது சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய உணர்ந்து கொண்டார்.

எதிர்க்­கட்சித் தலைவர் பதவி விவ­கா­ரத்தை பொறுத்­த­வரை எதிர்க்­கட்சித் தலை­வரை பெற்­றுக்­கொள்ளும் செயற்­பாட்டில் நாம் தொடர்ந்து ஈடு­ப­டுவோம். அதில் விட்­டுக்­கொ­டுப்­பிற்கு இட­மில்லை. நாம் விட்­டுக்­கொ­டுக்­கவும் மாட்டோம். எதிர்­வரும் வாரத்­திலும், சபா­நா­ய­கரை சந்­தித்து மேலும் விட­யங்­களை முன்­வைப்போம். சபா­நா­ய­கரின் தீர்ப்பை நாம் சவா­லுக்கு உட்­ப­டுத்த மாட்டோம். ஆனால் எமக்கு நியாயம் கிடைக்­க­வேண்டும். நியா­ய­மற்ற முறையில் எதிர்க்­கட்சித் தலைவர் பதவி வழங்­கப்­பட்­டுள்­ளதை ஏற்க முடி­யாது.எனவே எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை நாங்கள் பெற்­றுக்­கொள்ளும் வரை எமது முயற்­சி­களை தொட­ருவோம்.

இப்போதிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய இரண்டு கட்சிகளை இணைத்தாலும் கூட எமது எண்ணிக்கையளவில் வராது. ஆகவே எமது அணியினர் தான் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயற்பட வேண்டும். சம்பந்தனை நீக்கிவிட்டு எமது அணியினர் சார்பில் குமார் வெல்கமவை நியமிக்க வேண்டும் அதை தொடர்ந்தும் நாம் வலியுறுத்துவோம். அதேபோல் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின் போது நாம் எதிர்க்கட்சியாக செயற்பட அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து முன்னெடுப்போம் எனக் குறிப்பிட்டார்.

Related Posts