Ad Widget

சமூக வலைத்தளங்ளை கட்டுப்படுத்த புதிய சட்டம்

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தொடர்பாக புதிய சட்டங்களை தயாரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் சமூக வலைத்தளங்ளை கட்டுப்படுத்த நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சைபர் குற்றத்தின் கீழ் சமூக வலைத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான சட்டங்கள் நாட்டில் காணப்படாத நிலையில் புதிய சட்டங்களை உருவாக்கி அதனூடாக நடவடிக்கை தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Posts