Ad Widget

கொரோனா தொற்றிலிருந்து மீண்டார் மணிவண்ணன்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்.

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தொற்று நோய் சிகிச்சை மையத்தில் மணிவண்ணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், தொற்றிலிருந்து மீண்டுள்ள அவர், சிகிச்சை மையத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

Related Posts