Ad Widget

கீரிமலையில் காணிகளைக் கையகப்படுத்த அளவீட்டுப் பணிகளுக்கு அதிகாரிகள் முயற்சி!

வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள தனியார் காணிகளை கடற்படையினருக்கு கையளிப்பதற்காக அளவிடும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று தெரியவருகிறது.

ஏற்கனவே இந்த காணிகளை அளவிட எடுக்கப்பட்ட முயற்சிகள் காணி உரிமையாளர்களின் எதிர்பால் கைவிடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கடற்படையினரின் தேவைக்காக சுமார் 144 ஏக்கர் தனியார் காணியை கையகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகத் தெரியவருகிறது.

குறிப்பாக கீரிமலைப் பகுதியில் அளவீடு செய்வதற்ககான செயற்பாடுகளை நில அளவைத் திணைக்களத்தினர் மேற் கொள்கின்றனர் என்று அந்தத்திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இன்னும் இரண்டொரு நாட்களில் இந்தப் பணிகள் பொலிஸாரின் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்படவுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts