யார் தலையிட்டு அழுத்தங்களை பிரயோகித்தாலும் வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற முடியாது என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. யார், எந்த அழுத்தத்தை பிரயோகித்தாலும் வடக்கிலுள்ள முகாம்களை அகற்ற முடியாது என அமைச்சர் குறிப்பிட்டார்.
வடக்கில் மாத்திரமில்லை, கொழும்பிலும் 50 மீற்றருக்கு ஒரு முகாம் என்ற ரீதியில் படை முகாம்கள் காணப்படுகின்றன என்றும் அமைச்சர் கெஹெலிய மேலும் கூறினார்.