Ad Widget

புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி ஆராயப்படும்

வரவிருக்கும் பண்டிகை காலங்களில் தேவைப்பட்டால் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை தொடர்பிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

இதேவேளை, கோரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த வரவிருக்கும் பண்டிகை காலங்களில் நாட்டை மூடுவது அல்லது முழுமையான பயணக் கட்டுப்பாட்டை விதிப்பது நடைமுறையில்லை என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

ஊடகங்களுடன் பேசிய சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண, கோவிட்-19 நோய்த்தொற்றின் எதிர்கால அலைகளைத் தடுக்க மக்களின் பொறுப்பான நடத்தை மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்டார்.

Related Posts