Ad Widget

இலங்கை ஆஸ்திரேலியா முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று

மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. இதன்படி ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான மெல்போர்னில் இன்று நடக்கிறது. ஆஸ்திரேலிய முன்னணி வீரர்கள் அனைவரும் தற்போது டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக இந்தியாவுக்கு வந்து விட்டனர். இதனால் இது 2-ம் தர அணியாகவே...

உலகக்கிண்ண போட்டிகளுக்காக பங்களாதேஷ் பயணமாகினர் கிளிநொச்சி மாணவிகள்!

எதிர்வரும் 17ம் திகதி தொடக்கம் 23ம் திகதி வரை பங்களாதேஷில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண ரோல் போல் தொடருக்காக இலங்கை அணி சார்பில், தெரிவான கிளிநொச்சி மாணவிகள் பங்களாதேஷ் பயணமாகினர். கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் உயர்தர மாணவிகளான துலக்சினி விக்னேஸ்வரன், சிறிகாந்தன் திவ்யா ஆகியோரே குறித்த உலகக் கிண்ண ரோல் போல் போட்டியில்...
Ad Widget

இந்திய அணி அபார வெற்றி!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 208 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹைதராபாதில் நடைபெற்றது. இதில், முதலில் பேட் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 166 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 687 ரன்கள் குவித்து...

பிரட்மன்னின் சாதனையை தகர்த்தார் விராட் கோஹ்லி

நடைபெற்றுவரும் பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில், இரட்டை சதம் அடித்ததன் மூலம், இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி வரலாற்று சாதனை படைத்துள்ளார். 239 பந்துகளில் 24 பவுண்டரிகளுடன் இரட்டை சதத்தை எட்டிய விராட் கோஹ்லி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 4 தொடர்களில் இரட்டைச் சதம் அடித்த ஒரே வீரர் என்ற வரலாற்று...

தொடரைக் கைப்பற்றியது தென் ஆபிரிக்கா

இலங்கை அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை 5 க்கு 0 என்ற அடிப்படையில் தென்னாபிரிக்க அணி கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற ஐந்தாவதும் இறுதியானதுமான போட்டியில் தென்னாபிரிக்க அணி 88 ஓட்டங்களால் வெள்ளி பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பபை...

சனத் ஜயசூரிய இராஜினாமா?

இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவில் தலைவர் பதவியில் இருந்து, சனத் ஜயசூரிய, இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தனது இராஜினாமா கடிதத்தை, இலங்கை கிரிக்கெட் சபையிடம் கொடுத்துள்ளதாகவும், தென்னாபிரிக்காவில் இருந்து இன்று நாடு திரும்புவதாக அந்தத் தகவல்கள் ​மேலும் தெரிவிக்கின்றன. இது தொடர்பில், இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபாலவிடம் கேட்டபோது, இவ்வாறான...

4 வது போட்டியும் தென்னாபிரிக்க அணியிடம்

இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 40 ஓட்டங்களால் ​வெற்றுபெற்றுள்ளது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய களமிறங்கிய அந்த அணி சார்பில் சிறப்பாக ஆடிய பிளிஸ்சிஸ் 185 ஓட்டங்களை விளாசினார். மேலும் ஏ.பி.டி வில்லியஸ் 64 ஓட்டங்களையும் டி குக் 55 ஓட்டங்களையும்...

மாலிங்க போட்களில் கலந்துக் கொள்வதற்கான உடற்தகுதியுடன் காணப்படுகின்றார்!

உபாதை காரணமாக மிக நீண்டகாலமாக கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலிகியிருந்த லசித் மாலிங்க, போட்களில் கலந்துக் கொள்வதற்கான உடற்தகுதியுடன் காணப்படுவதாக இலங்கை கிரிக்கெட் வைத்திய குழு அறிவித்துள்ளது. மாலிங்க போட்டிகளில் கலந்துக் கொள்ள முடியும் என வைத்திய குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் விளையாடுவதற்கான பூரண உடற்தகுதியை கொண்டுள்ளார் என வைத்திய குழு உறுப்பினர் பேராசிரியர் அர்ஜுன...

ஏஞ்சலோ மெத்தியூஸின் உயர்ந்தபட்ச அடிப்படை விலை 2 கோடி!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் 7 வீரர்களின் உயர்ந்தபட்ச அடிப்படை விலை ரூ.2 கோடியாக (இந்திய ரூபாய்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச அடிப்படைவிலை நிர்ணயிக்கப்பட்ட ஏழு வீரர்கள் பட்டியலில், இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா இங்கிலாந்து வீரர்களான பென் ஸ்டோக்ஸ், கிறிஸ்வோக்ஸ், இயான் மோர்கன், அவுஸ்திரேலிய...

தென்னாபிரிக்கா அணி வெற்றி! தொடரையும் கைப்பற்றியது!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. நாணய சூழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பாடிய இலங்கைய அணி 39.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 163 ஓட்டங்களை பெற்றது. பதிலளித்தாடிய...

இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்த கிளிநொச்சி மாவட்ட தமிழ் மாணவிகள்

பங்களாதேஷில் இம்மாதம் 17 தொடக்கம் 23 வரை நடைபெறவுள்ள உலக்கக்கிண்ணப் போட்டியில் றோல் போல் விளையாட்டில் இலங்கையின் றோல் போல் தேசிய அணியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள் உள்வாங்கப்பட்டு அவா்கள் போட்டியில் பங்குபற்றவுள்ளனா். கிளிநொச்சி இந்துக்கல்லூரி உயர்தர மாணவிகளான துலக்சினி விக்னேஸ்வரன் ,சிறிகாந்தன் திவ்யா ஆகியோரே குறித்த போட்டியில் பங்குபற்றுகின்றனர். அத்துடன் மிக...

இந்தியா அபார வெற்றி! முதல் முறையாக டோனி அரைசதம்!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூரில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் மணிஷ் பாண்டே நீக்கப்பட்டு ரிஷாபா பாந்த் சேர்க்கப்பட்டார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு...

121 ஓட்டங்களால் தென்னாபிரிக்க அணி வெற்றி

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 121 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 06 விக்கட்டுக்க​ளை இழந்து 307 ஓட்டங்களைப் பெற்றது. டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 117 ஓட்டங்களையும் பெப்டு பிளவ்சிஸ் 105 ஓட்டங்களையும் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும்...

இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: ஆஸ்திரேலிய அணிக்கு பிஞ்ச் கேப்டன்

இலங்கை அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியா சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் போட்டி பிப்ரவரி 17-ந்தேதி மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது. ஆஸ்திரேலியா அணி இந்தியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் புனேயில் 21-ந்தேதி...

இறுதி ஓவரில் போட்டியின் திசையை மாற்றியது நடுவரா? ; ஏமாற்றமடைந்த இங்கிலாந்து

இந்திய அணிக்கெதிராக நேற்று இடம்பெற்ற இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் நடுவரின் தீர்ப்பு பாரிய ஏமாற்றத்தை அளித்துள்ளதாக இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கன் தெரிவித்துள்ளார். இறுதிப்பந்து ஓவருக்கு 8 ஓட்டங்கள் மாத்திரம் பெறவேண்டிய நிலையில் நடுவர் ஜோ ரூட்டுக்கு வழங்கிய ஆட்டமிழப்பானது அணிக்கு ஏமாற்றமளித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஜோ ரூட் 38 பந்துகளுக்கு 38...

தென்னாபிரிக்கா அணி அபார வெற்றி

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 8 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்திர் குசால் மெண்டிஸ் 62...

இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

கான்பூரில் நேற்று இரவு நடைபெற்ற முதல் இருபது20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபது20 கிரிக்கெட் தொடர் இன்று கான்பூரில் ஆரம்பமானது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித் தலைவர் மோர்கன் முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள...

துரையப்பா விளையாட்டரங்கு திறந்தவெளியரங்கு அல்ல, கட்டணம் செலுத்தும் அரங்கு!

துரையப்பா விளையாட்டு மைதானம் பல மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டாலும் அது விளையாட்டு வீரர்களுக்கு பயன்படுவதில்லை என யாழ் மாவடட விளையாட்டு பிரிவு வடடாரங்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ். துரையப்பா விளையாட்டு மைதானம் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் பல மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு கடந்த வருடம் ஜனவரி 18ம்...

இருபதுக்கு இருபது தொடர் இலங்கை வசம்

தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதி இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி 05 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 2-1 என்றபடி அந்த தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற இறுதிப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதன்படி 05 விக்கட்டுக்களை...

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை உபுல் தரங்கவுக்கு

தென்னாபிரிக்க சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை, போட்டியின் இடையில் உபுல் தரங்கவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அணியின் தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ் உபாதைக்குட்பட்டதனால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன், ஒரு நாள் போட்டிகளுக்கு சந்துன் வீரக்கொடி, லஹிரு மடுசங்க மற்றும் சத்துர சில்வா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அஞ்சலோ மெதிவ்ஸ், நுவன்...
Loading posts...

All posts loaded

No more posts