Ad Widget

ஏஞ்சலோ மெத்தியூஸின் உயர்ந்தபட்ச அடிப்படை விலை 2 கோடி!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் 7 வீரர்களின் உயர்ந்தபட்ச அடிப்படை விலை ரூ.2 கோடியாக (இந்திய ரூபாய்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச அடிப்படைவிலை நிர்ணயிக்கப்பட்ட ஏழு வீரர்கள் பட்டியலில், இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா இங்கிலாந்து வீரர்களான பென் ஸ்டோக்ஸ், கிறிஸ்வோக்ஸ், இயான் மோர்கன், அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களான மிட்செல் ஜோன்சன், கம்மின்ஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

10ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் ஏப்ரல் 6ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகிறது. இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் 20ஆம் திகதி பெங்களூரில் நடைபெறுகிறது.

ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 799 வீரர்கள் பதிவு செய்து இருந்தனர். 8 அணிகளும் தங்களுக்கு விருப்பமான வீரர்களின் பெயர் பட்டியலை தாக்கல் செய்துள்ளனர். இதில் எந்த அணிகளும் விரும்பி கேட்கப்படாத 8 நாடுகளை சேர்ந்த 160 வீரர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது 639 வீரர்கள் பட்டியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts