இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!

இன்று (27) காலை இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவிற்கு அண்மையில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. இன்று காலை 10:26 மணியளவில் இடம்பெற்ற இந்த நிலநடுக்கம் 6.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதிகளிலும் அதனை அண்டிய...

உயர் தரப்பரீட்சை நடைபெறாது – முக்கிய அறிவிப்பு !

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று வியாழக்கிழமை (27) மற்றும் நாளை வெள்ளிக்கிழமை (28) ஆகிய இரு தினங்களிலும் இடம்பெற மாட்டாதென பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தினூடாக வெளியிடப்பட்டுள்ள விஷேட அறிவித்தல் மூலம் இதனை தெரிவித்துள்ள அவர், நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை...
Ad Widget

செம்மணி மனித புதைகுழி முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம் ; கண்டெடுக்கப்பட்ட நகைகள் வடக்கு அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும் – ஜனாதிபதி

அண்மையில் கண்டுப்பிடிக்கப்பட்ட செம்மணி மனித புதைகுழி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம். ஆணைக்குழு அமைத்து உண்மையை மூடி மறைக்கவில்லை. உண்மையை கண்டறியும் அவசியம் எமக்கு உண்டு. விடுதலை புலிகள் காலத்தில் கண்டுப்பிடிக்க தங்க நகைகளை உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இருப்பினும் அது இயலாமல் உள்ளது. அந்த நகைகளை பணமாக மாற்றி வடக்கு மாகாண அபிவிருத்திக்கு...

சுண்ணாம்பினால் பார்வையிழந்த 4 சிறுவர்கள்!!

வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வெற்றிலை பாவனையால் அதற்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான சுண்ணாம்பு சிறுவர்களின் கண்களை பாதித்துள்ளமையால் 6 சிறுவர்களின் கண்கள் பாதிப்பு அதில் நால்வர் முற்றாக பார்வையிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் எம்.மலரவன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஊடகசந்திப்பினை நடாத்தினார். இதன் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். கண்களில்...

செம்மணியில் மீட்கப்பட்ட செருப்பு 1995ஆம் ஆண்டுக்கு முந்தையது ?

செம்மணி மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட காலணி ஒன்று தொடர்பில் ஆராயப்பட்டதில் அது 1995ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முற்பட்டது என கண்டறியப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார். செம்மணி மனித புதைகுழியை நேற்றைய தினம் திங்கட்கிழமை நேரில் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், செம்மணி புதைகுழியில் இருந்து காலணி...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் ரி-56 துப்பாக்கி ஒன்றும் கண்டெடுப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் மேற்கூரைப் பகுதியில் இருந்து ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும் இனங்காணப்பட்டுள்ளதால், மேலும் ஆயுதங்கள் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், முழுமையாக சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக வளாகத்தின் கூரைப் பகுதியில் திருத்த வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நேற்று (30) இரண்டு மெகசின்களும வயர்களும் முதலில் அடையாளம் காணப்பட்டன....

உலகின் சிறந்த சுற்றுலா தளங்களுக்குள் யாழ்ப்பாணம்

உலகளாவிய பயண வெளியீடான லோன்லி பிளானட் (Lonely Planet),2026 ஆம் ஆண்டிற்கான உலகில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தை பெயரிட்டுள்ளது. இலங்கையின் செழுமையான கலாச்சார மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மேம்பாட்டு உத்தியின் ஒரு பகுதியாகப் பிராந்தியப் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்கான நாட்டின் தொடர்ச்சியான முயற்சிகளையும் இது வெளிப்படுத்துகிறது....

செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுக்கான நிதி கிடைத்தது!!

செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் , புதைகுழிக்குள் வெள்ள நீர் காணப்படுவதால் அகழ்வு பணிகள் ஆரம்பிக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் திங்கட்கிழமை (13) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது ,...

யாழில் “அணையா விளக்கு” நினைவுத் தூபி உடைக்கப்பட்டது!

யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு தூபி விஷமிகளால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. “யாழ்ப்பாணம் வரவேற்கிறது” வளைவுக்கு அருகில் கடந்த ஜூன் மாத இறுதியில் செம்மணி படுகொலைக்கு நீதி கோரி “அணையா விளக்கு” போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தின் முடிவில் அப்பகுதியில் அணையா விளக்கு நினைவுத் தூபி ஒன்றும் அமைக்கப்பட்டது. அந்த நினைவுத் தூபியை விஷமிகள் அடித்து உடைத்துள்ளனர்.

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு: பாதீடு கிடைக்கப்பெறாமையால் நாள் தள்ளப்பட்டது !

அரியாலை, சிந்துப்பாத்தி - செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு தவணையிடுப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இவ் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது அடுத்த கட்ட அகழ்வுப்பணிக்கான பாதீடு கிடைக்கப்பெறாமை காரணமாக, இவ் வழ்க்கை எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு நீதவான் தவணையிட்டுள்ளார்.

உடுவிலில் பாடசாலை மாணவர்களின் குடும்பங்களில் உள்ள பெண்களும் போதைப் பொருளுடன் தொடர்பு!!

உடுவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 5 பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உடுவில் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம், பிரதேச அபிவிருத்திக் குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பவானந்தராஜா தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் போதைப்பொருள் பாவனை தொடர்பில் ஆராயப்பட்டபோது துறைசார் அதிகாரி ஒருவரினால் குறித்த தகவல் வெளியிடப்பட்டது. இது தொடர்பில் குறித்த...

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கு : அடுத்த கட்ட அகழ்வுக்கான பாதீடு சமர்ப்பிப்பு!!

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கு நேற்று (18) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் அடுத்த அகழ்வுக்கான பாதீட்டை மன்றில் சமர்ப்பித்தார். பாதீட்டை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் எதிர்வரும் ஒக்ரோபர் 01ம் திகதி முன்னேற்ற நடவடிக்கையை அவதானிப்பதற்க்கான அறிக்கையை பெற்றுக் கொள்ள தவணையிட்டுள்ளது....

மந்திரிமனையை பாதுகாக்க 14 வருடங்களாக முயல்கின்றோம் ; தனிநபர் தடையாக உள்ளதாக தொல்லியல் திணைக்களம் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனையை கடந்த 14 வருடங்களுக்கு மேலாக பாதுகாக்க நடவடிக்கை எடுத்தும் பயனளிக்கவில்லை என தொல்லியல் திணைக்களம் கைவிரித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் 17ஆம் திகதி புதன்கிழமை பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. அது தொடர்பில் தொல்லியல் திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய உதவிப்பணிப்பாளர்...

யாழில் விடுவிக்கப்படாமலிருக்கும் மக்களின் காணிகளை முறையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்!

பல்வேறு காரணிகளால் இடம்பெயர்ந்தவர்களை அவர்களின் சொந்தக் காணிகளிலேயே மீள் குடியேற்ற வேண்டும் என்ற கொள்கைகளுடனேயே அரசாங்கம் செயற்படுகின்றது . யாழ். மாவட்டத்தில் விடுவிக்கப்படாமல் இருக்கும் பொதுமக்களின் காணிகளை முறையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) நடைபெற்ற அமர்வின் போது...

செம்மணி மனிதப்படுகொலை : புதிய தகவல்கள் வெளிப்படுத்துவேன் – சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி

செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் இதுவரையில் வெளிப்படுத்தாத விடயங்களை சகல ஊடகங்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும், நீதித்துறைக்கும் வெளிப்படுத்துமாறு தனது கணவரான சோமரத்ன ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக அவ்வெளிப்படுத்தல்களைச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவிருப்பதாகக் குறிப்பிட்டு கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார...

சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!!

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் நேற்று (2) மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இதுவரை 222 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 206 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 41வது நாளாக நேற்று...

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் நேற்றும் 09 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்றைய தினம் 07 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 09 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் (01) 08ஆவது நாளாகவும் அகழ்வு முன்னெடுக்கப்பட்டது. செம்மணி...

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 10 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு!!!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரையில் புதிதாக 10 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 07ஆவது நாளாகவும்...

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 8 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்றைய தினம் வியாழக்கிழமை 06 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 08 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி...

செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை அகழ்வாய்வு தளங்களை மேலும் விஸ்தரிக்கும் நடவடிக்கைகளின் போது புதிதாக 16 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை மேலும் 03 எலும்புக்கூட்டு...
Loading posts...

All posts loaded

No more posts