- Friday
- April 26th, 2024
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரும் செயலாளரும் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்தல் எனக் கூறிக்கொண்டு இன்று அதிகாலை முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம், மருத்துவபீட வளாகம், மாணவர் விடுதிகள்...
யாழ்ப்பாணம் மாநகரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் வாள்களுடன் சென்று வர்த்தக நிலையங்களில் கொள்ளையில் ஈடுபட்டதுடன் வீதியில் நடமாடிய சிலரை வாளால் வெட்டிக்காயப்படுத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவர், யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவர் தேடப்படுகின்றனர். கைது செய்யப்பட்டவர் ஈபிடிபி கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் யாழ்.மாநகர பிரதி முதல்வருமான றீகனின் இளைய சகோதரர்...
மது போதையில் அட்டகாசம் புரிந்ததுடன் , காவல்துறையினரின் வாகன கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கிய ஐந்து இளைஞர்களை சாவகச்சேரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைதடி சந்தியில் நேற்று புதன்கிழமை மாலை மது போதையில் நின்ற இளைஞர் குழு ஒன்று அட்டகாசங்களில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் அங்கிருந்தவர்கள் சாவகச்சேரி காவல்துறையினருக்கு அறிவித்தனர். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்த...
திருகோணமலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து 3 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் பலதரப்பட்ட ஆயுதங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. திருகோணமலை தலைமையக பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் வாள்கள், துப்பாக்கி ரவைகள் உட்பட பலதரப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் இதுவரை அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஜமாலியா மற்றும் மட்கோ ஆகிய பகுதிகளிலேயே அதிகளவான ஆயுதங்கள்...
யாழ்ப்பாணம் – கொக்குவில் தலையாழி பகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை 4 மணியளவிலிருந்து பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர். இந்த சுற்றிவளைப்பில் குறித்த பகுதிக்குள் உள்நுழையும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு, குடியிருப்பாளர்கள் எவரும் வெளிச்செல்லவோ அல்லது வீட்டைவிட்டு வீதியில்...
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், இராணுவ முகாமுக்கு அருகில் வைத்து இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. யாழ்.சாவகச்சேரி தம்புத்தோட்டம் படை முகாமுக்கு அருகில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இந்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த மிருசுவில் கெற்போலி மேற்கை சேர்ந்த...
ஒரு தொகை வெடி பொருட்களை எடுத்துச் சென்று கொண்டிருந்த மூன்று பேரை வெள்ளவத்தைப் பிரதேசத்தில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர். வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் முச்சக்கரவண்டியில் ஒரு கிலோ கிராம் C-4 என்ற வெடிபொருட்களை எடுத்துச் செல்லும் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை ஊடகப் பேச்சாளர் இதனை கூறியுள்ளார்.
உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புரை செய்யும் நபருக்கு எதிரான அவசர கால சட்டவிதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட முடியும் குற்றமிழைத்தவர்களாக காணப்படும் பட்சத்தில் மூன்றுக்கும் ஐந்து வருடத்துக்கும் இடைப்பட்ட கால சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என்று தேசிய ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. சில நபர்கள் முன்னெடுக்கும் உண்மைக்கு புறம்பான பரப்புரைகளினால் கொட்டாஞ்சேனை பொது...
வெடிப்பச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் யாழ்ப்பாணத்தில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஐவரும் இன்று (வியாழக்கிழமை) காலை யாழ். அஞ்சு சந்தி வீதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஐவரும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களென யாழ்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நல்லூரடிப் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடித்திருந்த மூன்று பேர் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க நாடடைச் சேர்ந்தவர், முஸ்லிம் இளைஞர் மற்றும் தமிழ் பெண் ஆகியோரே இதன் போது கைது செய்யப்பட்டவர்கள் ஆவார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:- நாட்டில் இடம்பெற்ற தீவிரவாத தொடர் குண்டு வெடிப்பு...
கொழும்பில் குண்டுத் தாக்குதல்கள் நடத்திய சந்தேகநபர்கள் பயன்படுத்திய வான் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியைச் சேர்ந்த சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சிசிரிவி காணொலிகள் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் வான் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் கூறினர். இதேவேளை, தாக்குதல்களுக்கு காரணமான குழுவின் பெயரை...
யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் எனும் சந்தேகத்தில் 8 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மானிப்பாய் , உடுவில் பகுதிகளில் நேற்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை மானிப்பாய் பொலிசார் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன் போது கடந்த காலங்களில் மானிப்பாய் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில்...
மாதகல் பகுதியில் காவல்துறையினரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு கஞ்சா போதை பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்ற போதிலும் , தம்மால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லை என காவல்துறை தரப்பு அடியோடு மறுத்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இளவாலை காவல்துறைப்...
மானிப்பாயில் மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசிப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று (புதன்கிழமை) மாலை மானிப்பாய் இந்துக் கல்லூரி ஒழுங்கையிலுள்ள அடுத்தடுத்து இரண்டு வீடுகள் மற்றும் மானிப்பாய் நகருக்கு அண்மையிலுள்ள வீடொன்றிலும் இடம்பெற்றது என பொலிஸார் கூறினர். மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன்...
யாழ்.புத்தூர் பகுதியில் கை குண்டை எடுத்து விளையாடியபோது அக்குண்டு வெடித்ததில் பாடசாலை சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் புத்தூர் மேற்கு நிலாவரை பகுதியில் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாடசாலை சிறுவன் ஒருவன் தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது பயன்பாடற்ற காணி ஒன்றிலிருந்தே...
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த அழைத்துவரப்பட்ட சந்தேகநபர் ஒருவர் நீதிமன்றக் கட்டடத் தொகுதியின் கீழ் தளத்தின் ஊடாகப் பாய்ந்து பின் வாயிலூடாக தப்பித்து ஓடியுள்ளார். யாழ்ப்பாணம், கொட்டடி முத்தமில் வீதியைச் சேர்ந்த பாலராசா விஜிகாந்த என்ற சந்தேகநபரே நேற்று (திங்கட்கிழமை) இவ்வாறு பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பித்துள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர். கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ்...
கிளிநொச்சியில் ஆளுநா் கலந்து கொண்ட நிகழ்வில் வழங்கப்பட்ட உணவுக்குள் புழுக்கள் காணப்பட்ட விவகாரத்தில் உணவக உாிமையாளருக்கு ஒரு வருட சிறைத் தண்டணை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் ஆளுநர் செயலக ஊழியர்களால் பெறப்பட்ட உணவுப் பொதிகளில் கானப்பட்ட கத்தரிக்காய் கறியில் புழு காணப்பட்டது. ஆளுநரின் பணிப்பின் பெயரில் குறித்த விடயம் கிளிநொச்சி நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது....
போக்குவரத்து குற்றங்களுக்கான குறைந்த பட்ச அபராதத் தொகையை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானி பத்திரம் வௌியிடப்பட்டுள்ளது.அதன்படி, 1) செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல். 2) மதுபானம் அல்லது போதைப்பொருள் பாவித்து வாகனம் செலுத்துதல். 3) தொடருந்து வீதியினுள் பாதுகாப்பின்றி வாகனத்தை செலுத்துதல். 4) செல்லுபடியாகும் வாகன காப்புறுதி இன்றி வாகனம் செலுத்தல்....
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட சிறுவன் உள்ளடங்கலாக 26 பேர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் வைத்து குறித்த 26 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்லவிருந்த நிலையிலேயே கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய...
வீதியில் சென்ற காரொன்றை மாறித்து தாக்க முற்பட்ட குழுவொன்று காரினுள் இருந்து காவற்துறையினர் இறங்கிய போது தப்பியோடியது. தப்பியோடிய இருவரை காவற்துறையினர் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். குறித்த சம்பவம் நேற்றைய தினம் வியாழக்கிழமை சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றது. அது குறித்து மேலும் தெரியவருவதாவது, சாவகச்சேரி சங்கத்தானை பெருங்குளம் வீதியில் உள்ள வீடொன்றுக்கு விருந்தினர் ஒருவர்...
Loading posts...
All posts loaded
No more posts