Ad Widget

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 1227 நாளை தாண்டியது

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 1227 நாளை தாண்டிய நிலையில நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சி A9 வீதியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்றது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் உறவினர்கள் பதாகைகளை ஏந்தியவாறும் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது...

தடைகளையும் மீறி சுதந்திரபுரம் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு

சுதந்திரபுரம் படுகொலை 22ம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வுகள் பொலிஸாரின் தடைகளையும் மீறி அனுஷ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் கடந்த 1998 ஆம் ஆண்டு விமானப்படை மற்றும் ஒருங்கிணைந்த எறிகணை தாக்குதலில் 33 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். குறித்த படுகொலையின் 22 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று...
Ad Widget

அம்பன் புயல் தாக்கத்தினால் கிளிநொச்சியில் பாதிப்பு

அம்பன் புயல் தாக்கத்தினால் கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் குறித்த புயல் தாக்கத்தினால் பள்ளிக்குடாவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரும், கௌதாரி முனையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த...

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் மலர் தூவி சுடர் ஏற்றி அஞ்சலித்தார் ரவிகரன்!

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு தினமான இன்று (18)உயிர் நீத்த உறவுகளுக்கு நந்திக்கடலில் மலர்த்தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தபட்டுள்ளது. முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இந்த அஞ்சலி நிகழ்வை மேற்கொண்டார். "எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின்...

கிளிநொச்சி அழகாபுரி பாடசாலையை விமானப்படையினர் பொறுப்பேற்றனர்!

கிளிநொச்சி, இராமநாதபுரம் கிழக்கு அழகாபுரி அ.த.க.பாடசாலையினை கிளிநொச்சி இரணைமடு விமானப் படையினர் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் பொறுப்பேற்றுள்ளனர். இரணைமடு விமானப்படை முகாமின் ஒரு பகுதி தற்போது கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றமையால் அங்குள்ள விமானப் படையினர் தற்காலிகமாக தங்குவதற்கு எனத்தெரிவித்து குறித்த பாடசாலையினை பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விமானப்படையின் அதிகாரிகள் வடக்கு...

ஆனையிறவு ஊடான போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை- கிளி. அரசாங்க அதிபர்

ஆனையிறவு ஊடான போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் உள்ள மக்கள் தமது தேவைகளுக்காக அடையாள அட்டையைக் காண்பித்து பயணிக்க கிளிநொச்சி நகருக்கு பயணிக்க முடியும் என கிளிநொச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊரடங்கு...

பாதுகாப்பு அமைச்சின் செயலர் கிளிநொச்சிக்கு விஜயம்!

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ன இன்று (17-04-2020) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இவருடன் விமானப்படைத் தளபதியும் வருகைதந்திருந்தார். இன்று காலை பலாலி விமான நிலையத்திற்கு விசேட விமானம் மூலம் விஜயம் சென்ற இவர்கள் அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அங்கிருந்து உலங்குவானூர்தி மூலம் கிளிநொச்சி இரணைமடு நெலும் பியச மண்டபத்திற்கு வருகை தந்திருந்தார்கள்....

முல்லைத்தீவு மாவட்டத்தில் வறிய மக்களுக்கு இலவச கடல் உணவு விநியோகம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மக்கள் பலர் கடல் உணவுகளை பெற்றுக்கொள்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு இலங்கை இராணுவத்தினரும் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களும் இணைந்து வறிய மக்களுக்கு கடல் உணவுகளை வழங்கும் நடவடிக்கநேற்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டது. அந்தவகையில், முதற்கட்டமாக 460 குடும்பங்களுக்கு தலா ஒன்று முதல் 2 கிலோ நிறையுடைய...

கிளிநொச்சியில் கால்வாயில் இருந்து ஆணின் சடலம் கண்டெடுப்பு!

கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் பகுதியூடாகச் செல்லும் அக்கராயன் குளம் நீர்ப்பாசனக் கால்வாயின் மூன்றாம் வாய்க்கால் பகுதியில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அக்கராயன் குளம் பொலிஸார் மற்றும் ஸ்கந்தபுரம் கிராம அலுவலர் ஆகியோருக்குக் கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் கிராம அலுவலர் ஆகியோர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் ஒரு பிள்ளையின் தந்தையான மார்க்கண்டு...

முல்லைத்தீவில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் ஒருவர் மரணம்

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கபட்டுள்ள பௌத்த ஆலயத்தில் கடமையாற்றிய ஒருவர் நேற்று முன்தினம் தினம் (06.04.2020) ஆலய வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட நாயாறு குருகந்த ரஜமகா விகாரை தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வந்த...

முல்லைத்தீவில் இளைஞன் அடித்துக் கொலை !

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, நேற்றுமுன்தினம் (02.04.2020) முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் குறித்த இளைஞரது வீட்டுக்கு அயல் வீட்டில் இருந்து சென்ற நாய் ஒன்று அவர்களுடைய வீட்டில் இருந்த பொருட்களை திருடிச் சென்ற நிலையில் குறித்த...

பொலிஸ் உத்தியோகத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு வேண்டுகோள்

பொலிஸ் உத்தியோகத்திற்கான ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி பொலிஸ் மக்கள் தொடர்பாடல் பிரிவு இளைஞர் யுவதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்பிற்கு அமைவாக பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவைக்கு இணைக்கும் நோக்குடன் நாடு முழுவதும் ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், பொலிஸ் உத்தியோகத்தர், பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகிய பதவி நிலைகளுக்கான...

கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் பணிப்பகிஸ்கரிப்பு

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியாகியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளநொச்சி மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தால் இன்று (19-02-2020) பணிப்பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட நீதவான்நீதிமன்றத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் இணையத்தளம் ஒன்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத்தெரிவித்தே இன்று காலை முதல் இந்த பணிப்பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது....

மாங்குளம் வைத்தியசாலை மனிதப் புதைகுழி; எச்சங்கள், ஆடைகள் மீட்பு!!

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் இரண்டாவது நாளாக நேற்று முன்னெடுக்கப்பட்ட மனிதப் புதைகுழி அகழ்வின் போது மீட்கப்பட்ட எச்சங்களின் அடிப்படையில் 3 நபர்களின் எச்சங்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அத்துடன், அகழ்வுப் பணிகளை இன்றும் முன்னெடுக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்ற நீதிவான் எஸ்.லெலின்குமார் உத்தரவிட்டார். மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் புனர்வாழ்வு நிலையத்துக்கான கட்டடம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது...

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!

முல்லைத்தீவு – மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் சுத்தம் செய்யும் பணிகள் இடம்பெற்று வந்த நிலையில், அங்கு மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் புனர்வாழ்வு வைத்தியசாலை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், அங்கு காணியை சுத்தம் செய்யும் பணிகள் இடம்பெற்று வந்தன. இதன்போது அங்கு கண்ணிவெடிகள் இருப்பதாக தெரிவித்து, மனித நேய கண்ணிவெடி அகற்றும்...

புதையல் தோண்ட முற்பட்ட படை அதிகாரி உள்ளிட்ட 21 பேரும் விளக்கமறியலில்!!

கிளிநொச்சியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 இராணுவத்தினர் உள்பட 21 பேரையும் வரும் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கிளிநொச்சி- தரும்புரம், கட்டைக்காடு பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாகத் தெரிவித்து அதிநவீன ஸ்கனர் கருவிகளைப் பயன்படுத்தி புதையல் தோண்டும் முயற்சி சிறப்பு அதிரடிப்படையினரால் முறியடிக்கப்பட்டது....

சமூகத்தை சீரழிக்கும் போதைப் பொருள் பாவனை: கிளிநொச்சியில் மக்கள் போராட்டம்!

போதைப் பொருள் பாவனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சி அக்கராயன் பிரதேச மக்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் ஏற்பாட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது, பிரதேசத்தில் சவாலாக விளங்கும் போதைப் பொருளினைக் கட்டுப்படுத்தக் கோரிய மகஜர் மதத் தலைவர்கள் மற்றும் பொலிஸாருக்கு போராட்டக்காரர்களால் கையளிக்கப்பட்டது. குறித்த பகுதியில்...

அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர்களால் மாணவன் மீது தாக்குதல்

கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரப் பிரிவு இறுதியாண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவருக்கு தன்னை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆதரவாளர் என அடையாளப் படுத்திக் கொண்ட திருநகர் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவன் தாக்குதல் மேற்கொண்டதில் குறித்த மாணவன் படுகாயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று...

மாங்குளத்தில் முன்னாள் போராளி சுட்டுக்கொலை!!!

முல்லைத்தீவு மாங்குளத்தில் குடும்பத்தலைவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளியே சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். காணிப் பிரச்சினை காரணமாக அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்று ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது என்று மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலை மாங்குளம் பாலைப்பாணி பகுதியில் இடம்பெற்றது. கிளிநொச்சியைச் உதய நகரைச்...

முல்லைத்தீவை சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் இல்லை – பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது!

முல்லைத்தீவை சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவு வைத்திய அதிகாரி வைத்தியர் விஜிதரன் இதனைத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடொன்றிலிருந்து கடந்த வாரம் முல்லைத்தீவு வந்த குடும்பஸ்தரின் விமான பயணத்தின் போது சீனாவினை சேர்ந்தவர்களும் இவரோடு பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில் அவர் தனது சொந்த ஊரான...
Loading posts...

All posts loaded

No more posts