Ad Widget

அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர்களால் மாணவன் மீது தாக்குதல்

கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரப் பிரிவு இறுதியாண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவருக்கு தன்னை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆதரவாளர் என அடையாளப் படுத்திக் கொண்ட திருநகர் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவன் தாக்குதல் மேற்கொண்டதில் குறித்த மாணவன் படுகாயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்

இன்று பாடசாலைக்கு சென்று வீடு திரும்ப பாடசாலை நுழைவாயிலில் இருந்து வெளியேறிய போதே குறித்த மாணவனுக்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மாணவனுடைய தந்தையிடம் வினவிய பொழுது தனக்கும் குறித்த அரசியல் வாதிக்குமிடையில் அரசியல் ரீதியான கருத்து முரண் இருப்பதாகவும் அதன் போது பல மாதங்களுக்கு முன்னர் தமது கட்சிக்கு ஒத்துழைக்காத பட்சத்தில் எவ்வாறு கிளிநொச்சியில் வாழபோகின்றீர்கள் என அச்சுறுத்தியமைக்கு அமைவாக இன்று கணிதப்பிரிவில் கல்வி கற்கும் எனது மகனை தாக்கியுள்ளார்கள்.

கல்வியில் முதன்மை நிலையில் உள்ள மாணவர்களில் எனது மகனும் ஒருவர் அவரின் கல்வியை குழப்பும் முகமாக இவ்வாறான நடவடிக்கைகளை செய்து வருகின்றனர் எனது மகனுக்கு நடந்த அநீதி எவனுக்கும் நடக்கக்கூடாது எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மெற்கொண்டு வருகின்றனர்.

Related Posts